LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    திருக்குறள் Print Friendly and PDF
- உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம்

35000 (முப்பத்தைந்தாயிரம்) திருக்குறள் நூல்கள் தமிழ்நாட்டின் 38 மாவட்டங்கள் மற்றும் பாண்டிச்சேரி மாநிலத்திற்கு இன்று முதல் அனுப்பப்படுகிறது

Aug,9 2023

வணக்கம்,

உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில், உலகத் தமிழ் வளர்ச்சி மன்றம் , USA வழங்கும் ஆண்டுக்கு 80000 (எண்பதாயிரம்) இலவசத் திருக்குறள் நூல்கள் வழங்கும் திட்டத்தின் மூலம் முதல் 35000 (முப்பத்தைந்தாயிரம்) திருக்குறள் நூல்கள் தமிழ்நாட்டின் 38 மாவட்டங்கள் மற்றும் பாண்டிச்சேரி மாநிலத்திற்கு இன்று முதல் அனுப்பப்படுகிறது. அடுத்த ஓரிரு நாட்களில் உங்கள் மாவட்டத்திற்கு, அங்குள்ள அரசுப்பள்ளிகளில் விவரங்களுடன் ஒவ்வொரு பள்ளிக்கும் தனி கட்டுகளாக ஒழுங்கு செய்யப்பட்டு மாவட்டத் தொடர்பாளரான உங்கள் முகவரிக்கு வந்து சேரும். இதை வானதி பதிப்பகம் ஒழுங்கு செய்கிறது. நூல் அனுப்பப்படும் பள்ளிகள் நம்மைத் தொடர்புகொண்டு நூல்கள் தேவை என்று கேட்டவர்கள் . அவர்களுக்கு மட்டும் முதல் கட்டமாக அனுப்பப்படுகிறது.

அவற்றை பெற்றுக்கொண்டு பத்திரமாக வைக்கவும். விரைவில் அரசுப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்வோம். ஒவ்வொரு மாவட்டத்திலும், இதை ஒரு வாய்ப்பாகக் கருதி , இலவச நூல்கள் வழங்குவதோடு மட்டுமல்லாமல், இலவச திருக்குறள் முற்றோதல் பயிற்சித் திட்டத்தை அரசுப் பள்ளிகளுக்கு கொண்டுசெல்ல வேண்டும் , குறைந்தது 100 மாணவர்கள் இத்திட்டத்தில் அரசு வழங்கும் ரூபாய் 15000 பரிசுத்தொகை மற்றும் சான்றிதழைப் பெறவேண்டும் என்று திட்டமிடுவோம்.

மேலும், இந்த நூல்களை வழங்குவதை மாவட்ட ஆட்சியர், மாவட்டக் கல்வித்துறை அதிகாரிகள் (CEO , DEO ), மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை இணை இயக்குநர் , மாவட்ட நூலகர் உள்ளிட்டவர்களை அழைத்து சிறு நிகழ்ச்சி ஏற்பாடு செய்து, அரசுப்பள்ளிகளில் தலைமையாசிரியர்களுக்கு இவற்றை வழங்குவது மிகுந்த பலனை மாவட்ட அளவில் ஏற்படுத்தும்.

அது குறித்து விரைவில் ஒரு இணையவழி சந்திப்பில் உரையாடுவோம். தற்போது நூல்களை பெற்று பாதுகாப்பாக வைக்க பேரன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.


நன்றி,
ச.பார்த்தசாரதி,
சி.இராஜேந்திரன் , IRS (ஓய்வு),
இரவி சொக்கலிங்கம்.
உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம் - ஒருங்கிணைப்புக்குழு
kural.mutrothal@gmail.com

by Swathi   on 20 Aug 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
குறள் வழி மாத இதழ் - மே 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - மே 2024 உங்கள் வாசிப்பிற்கு
சமஸ்கிரத மொழிபெயர்ப்பில் சிறந்த நூலாகத் திகழும்  திரு.வே. இந்திரசித்து அவர்களின் மொழிபெயர்ப்பு நூல் வலைத்தமிழ் பதிப்பகத்தில் பட்டியலிடப்பட்டது சமஸ்கிரத மொழிபெயர்ப்பில் சிறந்த நூலாகத் திகழும் திரு.வே. இந்திரசித்து அவர்களின் மொழிபெயர்ப்பு நூல் வலைத்தமிழ் பதிப்பகத்தில் பட்டியலிடப்பட்டது
தமிழ்நாட்டின் திருக்குறள் ஆர்வலர்கள் பலரை சந்தித்து தமிழ்நாட்டின் திருக்குறள் ஆர்வலர்கள் பலரை சந்தித்து
அமெரிக்காவின் சென்றுள்ள தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் திரு. Dr. T. R. B.ராஜாவிற்கு திருக்குறள் ஆங்கில நூல்  பரிசளிக்கப்பட்டது. அமெரிக்காவின் சென்றுள்ள தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் திரு. Dr. T. R. B.ராஜாவிற்கு திருக்குறள் ஆங்கில நூல் பரிசளிக்கப்பட்டது.
ஐக்கிய நாடுகள் சபை நூலகத்திற்கு வழங்கப்பட்ட இரண்டு திருக்குறள் நூல்கள் ஐக்கிய நாடுகள் சபை நூலகத்திற்கு வழங்கப்பட்ட இரண்டு திருக்குறள் நூல்கள்
அமீரகத்தில் (UAE) நடைபெற்ற திருக்குறள் திருவிழா இரண்டாமாண்டு நிகழ்வில் “Thirukkural Translations in World Languages ” என்ற ஆங்கில ஆய்வு அடங்கல் நூல் வெளியிடப்பட்டது. அமீரகத்தில் (UAE) நடைபெற்ற திருக்குறள் திருவிழா இரண்டாமாண்டு நிகழ்வில் “Thirukkural Translations in World Languages ” என்ற ஆங்கில ஆய்வு அடங்கல் நூல் வெளியிடப்பட்டது.
திரைப்படமாகும் திருக்குறள் – A.J.பாலகிருஷ்ணன் இயக்குகிறார். திரைப்படமாகும் திருக்குறள் – A.J.பாலகிருஷ்ணன் இயக்குகிறார்.
குறள் வழி மாத இதழ் - ஏப்ரல் 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - ஏப்ரல் 2024 உங்கள் வாசிப்பிற்கு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.