|
||||||||
திருவண்ணாமலையில் 1,330 திருக்குறள்களை ஓதி மலைவலம் |
||||||||
திருவண்ணாமலையில் உள்ள திரு அண்ணாமலையை திருக்குறள் ஓதி பற்றாளர்கள் நேற்று மலைவலம் வந்தனர்.
மலையே மகேசன் என போற்றப்படும் ‘மகாதீபம்’ ஏற்றும் திரு அண்ணாமலையை பவுர்ணமி நாளில் கிரிவலம் சென்று பக்தர்கள் வழிபடுகின்றனர். ஓம் நமச்சிவாய எனும் மந்திரத்தை ஓதி கிரிவலம் செல்லும் பக்தர்களைப் போன்று, 1,330 திருக்குறளை ஓதி திருக்குறள் பற்றாளர்கள் மலைவலம் வருகின்றனர்.
திருக்குறள் தொண்டு மையம் சார்பில் ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை நாளில், மலைவலம் வருவது வழக்கம். அதன்படி, 188-வது மாதத் திருக்குறள் ஓதும் மலைவலம் நேற்று நடைபெற்றது.
மாவட்ட கவிஞர் பேரவைத் தலைவர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். வேங்கிக்கால் வாசகர் வட்டத் தலைவர் சுப்பிரமணி முன்னிலை வகித்தார். பாவலர் குப்பன் வரவேற்றார். தொண்டு மைய அசோக்குமார், செல்வராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பணி நிறைவு பெற்ற தலைமை ஆசிரியர் பலராமன் மலைவளத்தைத் தொடங்கி வைத்தார். பின்னர் திருக்குறள் தொண்டு மையத்தினர், 1,330 திருக்குறள்களை ஓதி மலைவலம் வந்தனர். |
||||||||
by Kumar on 07 Apr 2024 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|