இங்கு சிவன் மண்ணால் ஆன சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்குள்ள மூலவரின் முன்பு தீப வழிபாடு நடக்கும் போது, அந்த ஒளி
லிங்கத்தில் பிரதிபலித்து, லிங்கமானது தீபஜோதியாக தெரிவதை காணலாம்.சிறிய ஊர், கோயிலும் சிறியது. கிழக்கு நோக்கிய சந்நிதி. கோயில் எதிரில்
தீர்த்தம் உள்ளது. கோபுரவாயிலின் இருபுறமும் விநாயகரும் முருகனும் வீற்றிருக்கின்றனர்.உள்ளே நந்தி, பலிபீடம், பிராகாரம் நந்தவனமாக உள்ளது.
பிராகாரத்தில் சனீஸ்வரன், சந்திர, சூரியர், விநாயகர், கஜலட்சுமி, உள்ளனர். முன்மண்டபத்தில் பதஞ்சலியின் உருவமும் மகாமண்டபத்தில்
வியாக்ரபாதர் உருவமும் உள்ளன. கோஷ்டத்தில் தக்ஷிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா, துர்க்கை, ஆகியோர் எழுந்தருளியுள்ளனர்.மூலஸ்தானத்தில்
லிங்கம், அதற்கு பின்புறம் நடராஜர், முன்புறம் சிவன் பாதம் என ஒரே சன்னதி யில் சிவனின் மூன்று வடிவங்களைத் தரிசிக்கலாம். திருவாரூரில்
தியõகராஜரின் முகத்தையும், இங்கு சிவபாதத்தையும் ஒரே நாளில் தரிசித்தால் பி றவாநிலை கிடைக்கும் என்பது ஐதீகம். மூலவர் சிவன் மணல் லி
ங்கமாக காட்சி தந்தாலும், அவருக்கு தீபாராதனை காட்டும்போது, லிங்கம் ஜோதி சொரூபமாகக் காட்சியளிக்கிறது.
இங்கு சிவன் மண்ணால் ஆன சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்குள்ள மூலவரின் முன்பு தீப வழிபாடு நடக்கும் போது, அந்த ஒளி லிங்கத்தில் பிரதிபலித்து, லிங்கமானது தீபஜோதியாக தெரிவதை காணலாம். சிறிய ஊர், கோயிலும் சிறியது. கிழக்கு நோக்கிய சந்நிதி. கோயில் எதிரில் தீர்த்தம் உள்ளது. கோபுரவாயிலின் இருபுறமும் விநாயகரும் முருகனும் வீற்றிருக்கின்றனர்.
உள்ளே நந்தி, பலிபீடம், பிராகாரம் நந்தவனமாக உள்ளது. பிராகாரத்தில் சனீஸ்வரன், சந்திர, சூரியர், விநாயகர், கஜலட்சுமி, உள்ளனர். முன்மண்டபத்தில் பதஞ்சலியின் உருவமும் மகாமண்டபத்தில் வியாக்ரபாதர் உருவமும் உள்ளன. கோஷ்டத்தில் தக்ஷிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா, துர்க்கை, ஆகியோர் எழுந்தருளியுள்ளனர். மூலஸ்தானத்தில் லிங்கம், நடராஜர், சிவன் பாதம் என சிவனின் மூன்று வடிவங்களைத் தரிசிக்கலாம்.
திருவாரூரில் தியõகராஜரின் முகத்தையும், இங்கு சிவபாதத்தையும் ஒரே நாளில் தரிசித்தால் பிறவாநிலை கிடைக்கும் என்பது ஐதீகம். மூலவர் சிவன் மணல்லிங்கமாக காட்சி தந்தாலும், அவருக்கு தீபாராதனை காட்டும்போது, லிங்கம் ஜோதி சொரூபமாகக் காட்சியளிக்கிறது. |