இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். தாளபுரீஸ்வரர் (பனங்காட்டீஸ்வரர்), கிருபாபுரீஸ்வரர் என இரண்டு மூலவர்கள். கிருபாபுரீஸ்வரர்
கருவறைக்கு முன்புள்ள துவாரபாலகர்கள் தாமரை பீடங்களின் மீது நின்றிருப்பது போல அமைக்கப்பட்டிருக்கிறது. சூரியனின் உடலில் நந்தி போன்றும்,
சந்திரனின் தலையில் பிறைச்சந்திரன் இருப்பதும், யானை மீது ஐயப்பன் அமர்ந்திருப்பதும் இக்கோயிலில் வித்தியாசமாக இருக்கிறது.பிரகாரத்தில் நடராஜர்,
திருப்பதி வெங்கடாஜலபதி, மீனாட்சி சொக்கநாதர், மகாலிங்கம் ஆகியோரும் இருக்கின்றனர்.இங்கு ஆண், பெண் என இரண்டு பனைமரங்கள் தல விருட்சமாக
உள்ளது. அகத்தியருடன் வந்த அவரது சிஷ்யர் புலத்தியர், தாளபுரீஸ்வரருக்கு அருகிலேயே, மற்றோர் லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். இவர்,
"கிருபாபுரீஸ்வரராக' சதுர பீடத்தில் அருளுகிறார். தாளபுரீஸ்வரர், கிருபாநாதேஸ்வரர் இருவரும் ஒரே சிவனாகவே வழிபடப்படுகின்றனர். இவர்களில் அகத்தியர்
வழிபட்ட தாளபுரீஸ்வரர் பிரதானமான மூலவராக இருக்கிறார். கிருபாபுரீஸ்வரருக்கு நேரே பிரதான வாயில் இருக்கிறது.
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். தாளபுரீஸ்வரர் கிருபாபுரீஸ்வரர் என இரண்டு மூலவர்கள். கிருபாபுரீஸ்வரர் கருவறைக்கு முன்புள்ள துவாரபாலகர்கள் தாமரை பீடங்களின் மீது நின்றிருப்பது போல அமைக்கப்பட்டிருக்கிறது. சூரியனின் உடலில் நந்தி போன்றும், சந்திரனின் தலையில் பிறைச்சந்திரன் இருப்பதும், யானை மீது ஐயப்பன் அமர்ந்திருப்பதும் இக்கோயிலில் வித்தியாசமாக இருக்கிறது. பிரகாரத்தில் நடராஜர், திருப்பதி வெங்கடாஜலபதி, மீனாட்சி சொக்கநாதர், மகாலிங்கம் ஆகியோரும் இருக்கின்றனர்.
இங்கு ஆண், பெண் என இரண்டு பனைமரங்கள் தல விருட்சமாக உள்ளது. அகத்தியருடன் வந்த அவரது சிஷ்யர் புலத்தியர், தாளபுரீஸ்வரருக்கு அருகிலேயே, மற்றோர் லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். இவர், "கிருபாபுரீஸ்வரராக' சதுர பீடத்தில் அருளுகிறார். தாளபுரீஸ்வரர், கிருபாநாதேஸ்வரர் இருவரும் ஒரே சிவனாகவே வழிபடப்படுகின்றனர். இவர்களில் அகத்தியர் வழிபட்ட தாளபுரீஸ்வரர் பிரதானமான மூலவராக இருக்கிறார். கிருபாபுரீஸ்வரருக்கு நேரே பிரதான வாயில் இருக்கிறது. |