அருப்புக்கோட்டை அருகே நாயக்கர் கால நடுகற்கள் கண்டெடுப்பு
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே நாயக்கர் ஆட்சிக் காலத்தைச் சேர்ந்த மான்குத்திப் பட்டான் கல் மற்றும் பாம்புக் கொத்திப்பட்டான் கல் ஆகிய 2 நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டன. இதுகுறித்து வரலாற்று ஆர்வலர் ஸ்ரீதர் கூறியதாவது, பழங்காலத்தில் விலங்குகளுடன் சண்டையிட்டு இறந்த வீரனுக்கு மான்குத்திப் பட்டான் கல் வைப்பது மரபு. மேலும் கால்நடைகளைப் பாம்பிடமிருந்து காப்பாற்ற முயற்சிக்கும் போது உயிரை இழந்த நபரின் நினைவாகப் பாம்புக் கொத்திப்பட்ரன் கல் வைக்கப்படும். அத்தகைய நடுகற்களே இந்தப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன என்று கூறினார்.
|