- தேனி மாவட்டத்தில் ராமசாமி நாயக்கன் பட்டி, உ.அம்மாபட்டி, மேல சிந்தலைசேரி என 15 கிராம ஊராட்சிகளில் மரங்களில் ஆணி அடிக்கக் கூடாது எனக் கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.
- பஞ்சாயத்துத் தலைவிகளின் பணிகளில் தலையிடும் கணவன்மார்கள் கண்காணிப்பு. உள்ளாட்சித் தேர்தலில் தேர்வாகியுள்ள பல பெண் பிரதிநிதிகள் நிர்வகிக்கும் ஊராட்சிகளில் அவர்களின் கணவனின் தலையீடு இருப்பதாக வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழ்நாட்டில் கிராம ஊராட்சிகளில் ஐந்து விதமான நிலைக்குழுக்கள் அமைத்து உரிய விதிமுறைகளைப் பின்பற்றத் தலைவர்களுக்கு உத்தரவு.
- நெல்லை புத்தகத்திருவிழா பிப்ரவரி 1 முதல் 10 வரை நடக்கவிருக்கிறது.
- சென்னை புத்தகக் கண்காட்சிக்கு 13 லட்சம் வாசகர்கள் வந்துள்ளதாகவும், 20 கோடி மதிப்பிலான புத்தகம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- வாணியம்பாடியில் நடந்த தமிழர் பண்பாட்டு விழாவில் நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று திருப்பத்தூர் ஆட்சியர் உறுதியளித்தார்.
-
தமிழ், சமஸ்கிருதத்தில் தஞ்சைப் பெரியகோயில் குடமுழுக்கு.. தமிழில் நடத்தக் கோரிய மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி.
- விமானங்களில் தமிழில் அறிவிப்பு - மத்திய அரசு ஒப்புதல் தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் ! இன்பத் தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர் தந்த தேன் ! என்ற பாவேந்தரின் வரிகளுக்கு உணர்வூட்டியிருக்கிறோம் என்று தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
- அதிக மாடுகளை அலங்காநல்லூர் களத்தில் கடந்த ஆண்டு அடக்கிய வீரருக்கும், இவ்வாண்டு அடக்கும் வீரர் திலகத்திற்கும் ரூ. 4 லட்சம் பெறுமதியான கறவை மாடுகளை The Rise என்ற எழுமின் அமைப்பு வழங்கிச் சிறப்பித்தது. .
- தமிழர்களின் வீரவிளையாட்டு மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் 16 காளைகளைப் பிடித்து முதலிடம் பெற்ற மாடுபிடி வீரர் பிரபாகரனுக்கு கார் பரிசு வழங்கப்பட்டது. 13 காளைகளைப் பிடித்த ராஜா இரண்டாம் இடத்தையும், 10 காளைகளைப் பிடித்த கார்த்திக் என்பவர் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.
- ரூ.600 கோடியில் ‘சந்திரயான் 3’திட்டம் - இஸ்ரோ தலைவர் சிவன். நிலவிற்கு மனிதரை அனுப்பும் ககன்யான் திட்ட ஆய்வுப்பணி தொடக்கம்
- கிருஷ்ணகிரி மாவட்டம் கே.என்.தொட்டி ஊராட்சி மன்றத் தலைவராக 21 வயது கல்லூரி மாணவி சந்தியா வெற்றி பெற்றுள்ளார்.
- முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் காலமானார்.
- சு.வெங்கடேசனுக்குக் கனடாவின் இயல் விருது அறிவிப்பு
- பூச்சிக் கொல்லி, ரசாயன உரம், களைக்கொல்லி போன்ற மருந்துகளைத் தடை செய்யப் போவதாக நீலகிரி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
- தொடர்ந்து ஏழாவதாண்டாக லயோலா கல்லூரியின் மாற்று ஊடக மையம் வருடம்தோறும் நிகழ்த்தும் வீதி விருதுகள் திருவிழா ஜனவரி 11 & 12 நாட்களில் நடைபெற்றது
- உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி அதிகத் தற்கொலைகள் நடைபெறும் மாநிலங்களின் பட்டியலில் முதலிடத்தை மகாராஷ்டிரா மாநிலமும், இரண்டாம் இடத்தில் தமிழகமும், மூன்றாவது இடத்தில் மேற்கு வங்கமும் இடம்பெற்றுள்ளன.
- விவசாயிகளைக் கவுரவிக்கும் விதமாக எருதுகள் பூட்டி நிலத்தில் ஏர் உழுவது போன்ற வடிவில் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் வரிசையில் நின்று சென்னை பெரம்பூரில் உள்ள தனியார் பள்ளியில் உலக சாதனை.
- ஒவ்வொரு கிராமத்திலும் விளையாட்டுப் போட்டியை ஊக்குவிக்கும் அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
- கோவையை அடுத்து தஞ்சை விமானப்படைத் தளம் மேம்படுத்தப்பட்டு தற்போது சுகோய் விமானங்கள் அங்கே நிலை நிறுத்தப்பட்டுள்ளன.
- திடக்கழிவு மேலாண்மை விதிகளைக் கடுமையாக்க வீடுகள் & வணிக நிறுவனங்களில் குப்பைகளைச் சேகரிக்கச் சென்னை மாநகராட்சிக் கட்டணம் அறிவிப்பு.
- டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேட்டையடுத்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ராமேஸ்வரம், கீழக்கரை உள்ளிட்ட தேர்வு மையங்களில் தேர்வெழுதிய 99 பேரைத் தகுதிநீக்கம் செய்துள்ளது. ஏழு பேரை சிபிசிஐடி கைது செய்துள்ளது.
|