சிறுதானிய கந்தரப்பம்
தேவையானவை
- கம்பு அரை கப்
- ராகி அரை கப்
- உளுந்து 100 கிராம்
- துவரம் பருப்பு 50 கிராம்
- வெல்லம் பாகு காய்ச்சி அது தேவையான அளவு
- ஏலக்காய் ஒரு சிட்டிகை
- எண்ணெய் தேவையான அளவு.
செய்முறை
கம்பு ராகி ஒரு பாத்திரத்தில் ஊற வைக்க வேண்டும். ஆகியவற்றை மற்றொரு பாத்திரத்தில் ஊற வைக்க வேண்டும். அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து கிரைண்டரில் மைய அரைத்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் சிறிதளவு ஊற்றி கெட்டியான அளவு இருக்குமாறு செய்து கொள்ள வேண்டும். பிறகு அதில் காய்ச்சிய வெல்லப்பாகைச் சேர்த்து இட்லி மாவு பதம் அளவிற்குக் கெட்டியாக வைத்துக் கொள்ள வேண்டும். அதில் ஏலக்காயும் சேர்த்து, சூடான எண்ணெய்யில் ஒரு கரண்டி அளவு மணவை ஊற்றி கந்தர அப்பத்தைப் பொன்னிறமாகப் பொரித்து எடுக்க வேண்டும்.
|
சாமை அரிசி தேங்காய் பருப்பு தோசை
தேவையானவை
- சாமை அரிசி ஒரு கப்
- துருவிய தேங்காய் ஒரு கப்
- கடலைப்பருப்பு அரை கப்
- உளுந்து அரை கப்
- வெந்தயம் ஒரு டேபிள்ஸ்பூன்
- பூண்டு நாலு நம்பர்
- காய்ந்த மிளகாய் 5 நம்பர்
- கருவேப்பிலை சிறிதளவு
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
- சீரகம் ஒரு டேபிள்ஸ்பூன்
செய்முறை
சாமை அரிசி நன்றாகக் கழுவி சுத்தம் செய்து இருக்க வேண்டும். மற்றொரு பாத்திரத்தில் வெந்தயம் உளுந்து ஆகியவற்றைச் சுத்தம் செய்து ஊற வைக்க வேண்டும். துருவிய தேங்காய் மற்றும் சாமை அரிசி , காய்ந்த மிளகாய், பூண்டு ஆகியவற்றை ஒன்று சேர்த்து கிரைண்டரில் ஆட்டிக் கொள்ளவேண்டும். கடலைப் பருப்பு உளுத்தம் பருப்பையும் கிரைண்டரில் ஆட்டிக் கொள்ளவேண்டும்.
இரண்டையும் ஒன்று சேர்த்து ஆறிலிருந்து ஏழு மணி நேரம் நன்றாகப் புளிக்க வைக்க வேண்டும். ஜீரகம் , கருவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து மாவைத் தயார் செய்து தோசைக்கல்லில் ஊற்றி இரு பக்கமும் சுட்டு எடுக்கவேண்டும்.
கொத்தமல்லி துவையல் மற்றும் சின்ன வெங்காயம் சட்னி சுவையாக இருக்கும்.
குறிப்பு: அரிசியுடன் தேங்காய் சேர்க்கும் போது தண்ணீரை அளவு பார்த்து ஊற்ற வேண்டும் ஏனெனில் தேங்காயில் இருக்கும் தண்ணீர் பதமே அரிசி அரைப்பதற்குப் போதுமானதாக இருக்கும்.
|