|
|||||
தஞ்சையில் புதிய சுற்றுலாத் தளம் தயார்..! மன்னர்கள் படகுச் சவாரி செய்த ஏரியில் இனி நாமும் பயணம் செய்யலாம்..! |
|||||
தஞ்சையையடுத்த மாரியம்மன் கோவில் பகுதியில் அமைந்துள்ளது சமுத்திரம் ஏரி. இந்த ஏரி தஞ்சையிலிருந்து 4 கி.மீ தூரத்தில் உள்ளது. பழமையான இந்தச் சமுத்திரம் ஏரி 287 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரி மூலம் ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.இந்த ஏரி நாயக்கர் காலத்தில் வெட்டப்பட்டது.பின்னர் வந்த மராட்டியர்களின் ஆட்சிக்காலத்தில் ஏரி புனரமைக்கப்பட்டது.
இந்த ஏரி குறித்த ஓவியம் லண்டனில் உள்ள பிரிட்டிஷ் நூலகத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த ஏரிக்குக் கல்லணை கால்வாயிலிருந்து தண்ணீர் வருகிறது. மராட்டிய அரச குடும்பத்தினர் இந்த ஏரியில் படகில் பயணம் செய்து மாரியம்மன் கோயிலுக்குச் சென்று வந்ததாகவும் கூறப்படுவது உண்டு. கடல்போல் காட்சியளித்த சமுத்திரம் ஏரியானது நாளடைவில் சுருங்கிக்கொண்டே வருகிறது. இந்த நிலையில் இந்த ஏரியைச் சுற்றுலாத் தலமாக மாற்ற வேண்டும் என்று தஞ்சை பகுதி மக்கள் நீண்ட நாட்களாகக் கோரிக்கை விடுத்து வந்தனர்.
ரூ.9 கோடி மதிப்பீட்டில் திட்ட அறிக்கை
இதையடுத்து கல்லணை கால்வாய் கட்டப் பொதுப்பணித் துறை சார்பில் இது தொடர்பாக விரிவான அறிக்கை தயார் செய்யப்பட்டது. ரூ.9 கோடி மதிப்பீட்டில் இதற்காகத் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு பல்வேறு பணிகள் நடைபெற்றது.அதன்படி சமுத்திர ஏரியில் பறவைகள் இங்குத் தங்கி குஞ்சு பொரிக்கும் மூன்று தீவுகள் ஏற்படுத்தப்பட்டு அதில் மரங்கள் நடப்பட்டு பறவைகள் தங்குமிடம் ஏற்ப டுத்தப்படுகிறது. மேலும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் இதனைச் சுற்றிப் பார்க்கும் வகையில் படகுச் சவாரியும் விடப்பட உள்ளது. |
|||||
by Kumar on 31 Dec 2023 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|