ஓரடி உயரமுள்ள புடைப்புச் சிற்பமாகக் காட்சி தரும் இவரது இடது பாதம் வடக்கு நோக்கியும் வலது பாதம் கிழக்கு நோக்கியும் உள்ளது. இவரது கால்
ஓங்கார வடிவில் வடக்கு திசை நோக்கி வளைந்திருப்பது தனிச்சிறப்பு என்கிறார்கள். இடது கரத்தில் பாரிஜாத மலரை வைத்திருக்கும் இவரது வலது
கரம் பக்தர்களுக்கு ஆசிவழங்கும் நிலையில் அபய ஹஸ்தத்தில் உள்ளது. இவரது திருமுகம் வடக்கு திசையைப் பார்த்த வண்ணம் அருள்புரிகிறது.
ஆஞ்சநேயர் சன்னதிக்கு இடது புறத்தில் பாண்டுரங்கனுக்கு தனிச்சன்னதி உள்ளது. இவரது சன்னதிக்கு அருகில் பெரிய ஆலமரம் காணப்படுகிறது.
பெரிய பெரிய இலைகளைக் கொண்ட இந்த ஆலமரம் மிகவும் பழமையானது எனப்படுகிறது. அதற்கு, அடுத்து தியான மண்டபம். இங்கு அருள்மிகு
ஆஞ்சநேயர் பெரிய திரு உருவில் அமர்ந்த நிலையில் மேடையில் கிழக்கு நோக்கி தவக்கோலத்தில் யோக ஆஞ்சநேயராக சுதைவடிவில் காட்சி
தருகிறார். தியான மண்டபத்தின் எதிரில் நவக்கிரகத் தொகுப்பு வடகிழக்கு மூலையில் உள்ளது. அதற்குப் பக்கத்தில் உள்ள அரசும் வேம்பும் உள்ள
மரத்தடியில் விநாயகர், சுப்பிரமணியர் சன்னதிக்குப் பின்புறம் நாகர்கள் சிலைகள் வரிசையாக உள்ளன.
ஓரடி உயரமுள்ள புடைப்புச் சிற்பமாகக் காட்சி தரும் இவரது இடது பாதம் வடக்கு நோக்கியும் வலது பாதம் கிழக்கு நோக்கியும் உள்ளது. இவரது கால் ஓங்கார வடிவில் வடக்கு திசை நோக்கி வளைந்திருப்பது தனிச்சிறப்பு என்கிறார்கள். இடது கரத்தில் பாரிஜாத மலரை வைத்திருக்கும் இவரது வலது கரம் பக்தர்களுக்கு ஆசிவழங்கும் நிலையில் அபய ஹஸ்தத்தில் உள்ளது.
இவரது திருமுகம் வடக்கு திசையைப் பார்த்த வண்ணம் அருள்புரிகிறது. ஆஞ்சநேயர் சன்னதிக்கு இடது புறத்தில் பாண்டுரங்கனுக்கு தனிச்சன்னதி உள்ளது. இவரது சன்னதிக்கு அருகில் பெரிய ஆலமரம் காணப்படுகிறது. பெரிய பெரிய இலைகளைக் கொண்ட இந்த ஆலமரம் மிகவும் பழமையானது எனப்படுகிறது. அதற்கு, அடுத்து தியான மண்டபம்.
இங்கு அருள்மிகு ஆஞ்சநேயர் பெரிய திரு உருவில் அமர்ந்த நிலையில் மேடையில் கிழக்கு நோக்கி தவக்கோலத்தில் யோக ஆஞ்சநேயராக சுதைவடிவில் காட்சி தருகிறார். தியான மண்டபத்தின் எதிரில் நவக்கிரகத் தொகுப்பு வடகிழக்கு மூலையில் உள்ளது. அதற்குப் பக்கத்தில் உள்ள அரசும் வேம்பும் உள்ள மரத்தடியில் விநாயகர், சுப்பிரமணியர் சன்னதிக்குப் பின்புறம் நாகர்கள் சிலைகள் வரிசையாக உள்ளன. |