உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு உதவி சொலிசிட்டர் ஜெனரலாக பெண் வழக்கறிஞர் நியமனம்
உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரலாக மூத்த வழக்கறிஞர் கதிர்வேல் பணிபுரிந்தார். அவரது பதவிக்காலம் முடிவடைந்ததையொட்டி, குமரி மாவட்டம் வெளிக்கோடு கிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் விக்டோரியா கவுரி உதவி சொலிசிட்டர் ஜெனரலாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் பெண் வழக்கறிஞர் ஒருவர் மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்படுவது இதுவே முதல் முறை ஆகும். இவர் சொலிசிட்டர் ஜெனரலாக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
|