கருவறையில் கழுத்து, மார்பு, விரல்கள், கணுக்கைகள், தோள்பட்டைகள் ஆகியவற்றில் ருத்திராட்சங்கள் துலங்க, வலது கையில் செண்டும், இடது
கையில் சின்னதொரு சுவடியும் கொண்டு அழகுறக் காட்சி தருகிறார் மாசாத்தனார்.திருக்கயிலாய உலா எனும் அரிய படைப்பினைக் கயிலாயத்தில்
இருந்து பூவுலகுக்குக் கொண்டு வந்து, அரங்கேற்றிய பெருமைக்கு உரியவர், மாசாத்தனார். அப்படி அரங்கேற்றிய தலம் திருப்பிடவூர் எனப்படும்
திருப்பட்டூர் திருத்தலம் என்கின்ற கல்வெட்டுகள். இதற்கு சாட்சியாக திருக்கயிலாய ஞான உலா அரங்கேறிய 18 கால் மண்டபம் இன்றைக்கும் உள்ளது.
ராஜேந்திர சோழன், குலோத்துங்கச் சோழன், விக்கிரமச் சோழன், வீரராமநாததேவன், சடையவர்ம சுந்தர பாண்டியன், சடாவர்ம வீரபாண்டியன்,
கெம்பைய மாயன நாயக்கர் போன் மன்னர்கள், திருப்பட்டூர் பிரம்மா கோயிலுக்கும், காசி விஸ்வநாதர் கோயிலுக்கும், மாசாத்தனார் கோயிலுக்கும்
ஏராளமான நிவந்தங்களை அளித்து திருப்பணி மேற்கொண்டுள்ளனர் என இங்குள்ள கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.
கருவறையில் கழுத்து, மார்பு, விரல்கள், கணுக்கைகள், தோள்பட்டைகள் ஆகியவற்றில் ருத்திராட்சங்கள் துலங்க, வலது கையில் செண்டும், இடது கையில் சின்னதொரு சுவடியும் கொண்டு அழகுறக் காட்சி தருகிறார் மாசாத்தனார். திருக்கயிலாய உலா எனும் அரிய படைப்பினைக் கயிலாயத்தில் இருந்து பூவுலகுக்குக் கொண்டு வந்து, அரங்கேற்றிய பெருமைக்கு உரியவர், மாசாத்தனார்.
அப்படி அரங்கேற்றிய தலம் திருப்பிடவூர் எனப்படும் திருப்பட்டூர் திருத்தலம் என்கின்ற கல்வெட்டுகள். இதற்கு சாட்சியாக திருக்கயிலாய ஞான உலா அரங்கேறிய 18 கால் மண்டபம் இன்றைக்கும் உள்ளது. ராஜேந்திர சோழன், குலோத்துங்கச் சோழன், விக்கிரமச் சோழன், வீரராமநாததேவன், சடையவர்ம சுந்தர பாண்டியன், ஏராளமான நிவந்தங்களை அளித்து திருப்பணி மேற்கொண்டுள்ளனர் என இங்குள்ள கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. |