|
|||||
எழுச்சியும் நெகிழ்ச்சியும் இழையோடிய மக்கள் சிந்தனைப் பேரவையின் பாரதி விழா |
|||||
எழுச்சியும் நெகிழ்ச்சியும் இழையோடிய மக்கள் சிந்தனைப் பேரவையின் பாரதி விழா மக்கள் சிந்தனைப் பேரவையின் சார்பில் 11.12.2020ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற பாரதி விழா எழுச்சி மிக்கதாக விளங்கியது. ஈரோடு யு. ஆர்.சி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 11.12.2020 அன்று மாலை 6 மணியளவில் நடைபெற்ற பாரதி விழாவிற்குப் பேரவையின் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் தலைமையேற்றார். விழா தொடங்குவதற்கு பத்து நிமிடங்களுக்கு முன்பு பாரதி இறுதிப் பேருரையாற்றிய கருங்கல் பாளையம் நூலகத்திலிருந்து ஏந்திவரப்பட்ட ‘பாரதி ஜோதி’ இந்த ஆண்டின் பாரதிவிருதாளர் இசைக்கவி ரமணன் அவர்களிடம் வழங்கப்பட்டது. விருதாளர் பள்ளி நுழைவாயிலிருந்து ஜோதியை ஏந்தியவாறு விழா மேடைக்கு அழைத்து வரப்பட்டார். நிகழ்வில் இசைமேதை எம்.பி.சீனிவாசன் அவர்களின் திருவுருவப்படத்தை அவர் தொடங்கிய சென்னை இளைஞர் இசைக்குழுவின் கலைத்துறை இயக்குநர் டி.ராமச்சந்திரன் திறந்து வைத்து உரையாற்றினார். 2020ம் ஆண்டிற்கான மக்கள் சிந்தனைப் பேரவையின் பாரதி விருதையும் பொற்கிழித் தொகை மூ. 25,000ஐயும் இந்த ஆண்டின் பாரதி விருதாளர் இசைக்கவி ரமணன் அவர்களுக்கு நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினரான பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் பொ. குழந்தைவேல் அவர்கள் வழங்கி விழாச் சிறப்புரையாற்றினார். விருதாளர் இசைக்கவி ரமணன் அவர்கள் ஏற்புரையுடன் இலக்கியச் சொற்பொழிவினையும் நிகழ்த்தினார். நிகழ்ச்சியில் கொரோனாத் தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் கறாராகப் பின்பற்றப்பட்டன. அழைப்பிதழில் நிகழ்விடம் அறிவிக்கப்படவில்லை. பேரவையின் மாநில நிர்வாகிகள், மற்றும் சில பிரமுகர்கள் என 50, 60 பேர் மட்டும் அரங்கத்தில் பார்வையாளர்களாக அமர்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அவர்களும் அரங்கத்திற்குள் நுழைகிறபோது டெம்பரேச்சர் பரிசோதனை செய்யப்பட்டதோடு சானிடைசர் கொடுக்கப்பட்டு முறையான தனிமனித இடைவெளியுடன் அரங்கத்திற்குள் அமரவைக்கப்பட்டனர். பார்வையாளர்கள் அனைவரும் மாஸ்க் அணியுமாறு பார்த்துக் கொள்ளப்பட்டது. உலக அளவிலான தமிழ் அன்பர்கள் இந்நிகழ்வை இணையவழியாகப் பார்த்துப் பயன்படத்தக்க முறையில் விரிவான தொழில் நுட்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தமிழ்நாடு, இந்தியா மட்டுமல்லாது அயல்நாடுகளில் வாழ்கிற தமிழர்கள் ஆயிரக்கணக்கானோர் இந்நிகழ்வில் பார்வையாளர்களாகப் பங்கேற்றுள்ளனர். முன்னதாக பேரவையின் துணைத்தலைவர் பேராசிரியர் கோ. விஜயராமலிங்கம் வரவேற்புரையாற்றினார். நிறைவாகப் பொருளாளர் க. அழகன் நன்றியுரையாற்றினார். |
|||||
by Lakshmi G on 27 Dec 2020 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|