இனி விவசாயச் சங்கங்கள் மூலமாகவே குடிமராமத்து பணிகள்
தமிழகத்தில் இனி வரும் காலங்களில் விவசாயிகள் சங்கங்கள் மூலமாகவே குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குடிமராமத்துப் பணியில் நீர்ப்பிடிப்புப் பகுதியின் எல்லை, ஆக்கிரமிப்பு மற்றும் சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது, நில அளவை மற்றும் கிராம வரைபடத்தின் அடிப்படையில் கால்வாய்களை அடையாளம் காணும் பணி போன்ற பணிகளில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய்த் துறையினர் ஈடுபட வேண்டும். நீர் நிலைகளின் கரைகளைப் பலப்படுத்த மரக்கன்று நடுவதைக் கட்டாயமாக்க வேண்டும். விவசாயிகள் சங்கங்கள் மூலமாகவே குடிமராமத்துப் பணிகளை இனிவரும் காலங்களில் மேற்கொள்ளலாம் என அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
|