LOGO
  முதல் பக்கம்    மற்றவை    தகவல் Print Friendly and PDF

தமிழுக்கு 'ஐ' என்ற எழுத்து இங்கிருந்துதான் கிடைத்ததாக கூறப்படுகிறது

தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டம், செஞ்சியிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது சிறு கடம்பூர் மலை. அந்த மலையின் மீது இருக்கும் குன்றே திருநாதர் குன்றாகும். இந்தக் குன்றிற்கு மேலே செல்ல 44 படிக்கட்டுகள் அமைந்துள்ளன. சமணர்களுக்கும், தமிழ் தொல்லியல் நிபுணர்களுக்கும் இக்குன்று மிகவும் முக்கியம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

 

இம்மலைக்கு மேலே சென்று பார்த்தால் கண்கொள்ளா இயற்கைக் காட்சிகளைக் காண முடியும். 24 தீர்த்தநாதர்கள் அமர்ந்திருக்கும் குன்று திருநாதர் குன்று என்று அழைக்கப்படுகிறது. குன்றின் மேலே சென்றதும் முதலில் காணக்கூடியது 24 தீர்த்தநாதர்கள் அமைந்திருக்கும் பெரிய பாறையைத்தான். அதில் மேலே 12, கீழே 12 என்று இரண்டு வரிசையாக தீர்த்தநாதர்கள் அமைந்துள்ளனர்.

 

ஆதிநாதரே முதல் தீர்த்தநாதர்

 

ஆதிநாதர் முதல் மஹாவீரர் வரை செதுக்கப்பட்டுள்ளன. இது 9-ம் நூற்றாண்டுக் காலக்கட்டத்தில் சோழர்களால் உருவாகியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இந்த 24 தீர்த்தநாதர்களும் வெவ்வேறு முகபாவனைகளுடன் இருக்கிறார்கள் என்பது சிறப்பு. ஆதிநாதரே முதல் தீர்த்தநாதர். மஹாவீரர் 24ம் தீர்த்தநாதராவார்.

 

அங்கே அழகாகச் செதுக்கப்பட்ட மஹாவீரர் சிலை சிதைக்கப்பட்ட நிலையில் இருக்கிறது. அந்தப் பாறையின் மீது இருக்கும் கல்வெட்டில், இந்தக் கோயிலுக்கு மகேந்திர வர்மன் கி.பி 8-ம் நூற்றாண்டில் 400 ஆடுகளை நிவந்தமாகக் கொடுத்து விளக்கேற்றும்படி கேட்டுக்கொண்டார் என்று கூறப்படுகிறது.

 

இந்தக் குன்றில் இரண்டு சமணர்கள் உண்ணாநோன்பிருந்து உயிர் நீத்துள்ளனர். அவர்களின் கல்வெட்டுகளும் இங்கேயிருக்கிறது. இங்கேயிருக்கும் கல்வெட்டில் தமிழ்ப் பிராமி, வட்டெழுத்தாக மாறிய கல்வெட்டுக்கள் உள்ளன. அது மட்டுமில்லாமல், மிக முக்கியமாக இங்கே 5-ம் நூற்றாண்டு கல்வெட்டான பிராமி தமிழ் கல்வெட்டுகள் அமைந்துள்ளன.

 

இது சமண துறவிகளின் வழக்கம்

 

இங்கேதான் ‘ஐ’ என்ற தமிழ் எழுத்து முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. அதுவரை ஐயை ‘அய்’ என்றே எழுதி வந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தக் கல்வெட்டில் சந்திரநந்தி என்ற ஆசிரியர் 57 நாட்கள் உண்ணாநோன்பிருந்து உயிர் துறந்தார் என்று உள்ளது. இன்னொரு கல்வெட்டில் இளையபட்டாகரர் என்னும் சமண துறவி 30 நாள் உண்ணாவிரதமிருந்து உயிர் துறந்தார் என்றும் எழுதியுள்ளது.

 

‘சலேக்கனா’ என்றால் உண்ணாவிரதம் இருந்து உயிர் துறத்தலாகும். இது சமண துறவிகளின் வழக்கம். எனவே, இங்கிருக்கும் இரண்டு கல்வெட்டுக்களும் சலேக்கனா கல்வெட்டுகள்தான் என்று உறுதியாகிறது. இங்கே பூஜைகள் ஏதும் நடப்பதில்லை என்றாலும், சித்திரை மாதத்தில், ஏப்ரல் முதல் மேயில் ஜேயினர்கள் கூடி 24 தீர்த்தநாதர்களுக்கும் அபிஷேகம் செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தொன்மை வாய்ந்த தமிழுக்கு 'ஐ' என்னும் எழுத்தைத் தந்த திருநாதர் குன்றிற்கு வாழ்க்கையில் ஒருமுறையாவது வந்து தரிசித்துவிட்டுச் செல்வது அவசியமாகும்.

by   on 21 Mar 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
திருமண அழைப்பிதழ் - திருவளர்ச்செல்வன்/திருநிறைச்செல்வன் என்றால் என்ன பொருள்? திருமண அழைப்பிதழ் - திருவளர்ச்செல்வன்/திருநிறைச்செல்வன் என்றால் என்ன பொருள்?
ஆகாயத்தாமரை - குளங்களை , நீர்நிலைகளைக்காக்க அழிப்பது எப்படி? ஆகாயத்தாமரை - குளங்களை , நீர்நிலைகளைக்காக்க அழிப்பது எப்படி?
மானாமதுரை அருகே 13-ம் நூற்றாண்டு சமணப்பள்ளி நிலதானக் கல்வெட்டு கண்டெடுப்பு. மானாமதுரை அருகே 13-ம் நூற்றாண்டு சமணப்பள்ளி நிலதானக் கல்வெட்டு கண்டெடுப்பு.
கிரிப்டோகரன்சி – கடந்து வந்த பாதை ! கிரிப்டோகரன்சி – கடந்து வந்த பாதை !
மாவட்ட வாரியாக முக்கிய நதிகள் மாவட்ட வாரியாக முக்கிய நதிகள்
FMB (Field Boundary Line)-நிலவரைபடம்  பற்றி தெரியுமா? FMB (Field Boundary Line)-நிலவரைபடம் பற்றி தெரியுமா?
தமிழ் நாட்டுப்புறக் கலைகள் தமிழ் நாட்டுப்புறக் கலைகள்
உலகிலேயே மிக உயரமான முருகன் திருவுருவச்சிலை உலகிலேயே மிக உயரமான முருகன் திருவுருவச்சிலை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.