தமியனாய்ப் பல்லார் பகை கொள்பவன்-தான் துணையின்றித் தனியனா யிருந்துகொண்டே பலரொடு பகைகொள்பவன்; ஏமுற்றவரினும் ஏழை-பித்தம் பிடித்தவரினும் பேதையானவன். தனிமை நட்பின்மை, அறிவின் திரிவால் இருவரும் ஒப்பாராயினும், பித்தன் பொதுவாக ஒருவரையும் பகையாமையாலும் அதனால் அவனுக்குப்பிறராற் கேடின்மையானும், துணையோடு கூடிய வழியும் பகைவரை வெல்லுதல் உறுதியில்லாதிருக்க, அஃதில்லாதவன் ஒரே சமையத்திற் பலரொடு பொரின் தான் உடனே அழிதல் முழுவுறுதியென்பதை அறியாமையானும், பலர்பகை கொண்ட தனியனை ’ஏமுற்றவரினும் ஏழை’ என்றார். இவ்விரு குறளாலும் பகைகொள்ளுதல் சிறப்பு வகையால் விலக்கப்பட்டது.
கலைஞர் உரை:
தனியாக நின்று பலரின் பகையைத் தேடிக் கொள்பவனை ஆணவம் பிடித்தவன் என்பதைவிட அறிவிலி என்பதே பொருத்தமாகும்.
சாலமன் பாப்பையா உரை:
தன்னந் தனியனாக இருந்து கொண்டு, பலரையும் பகைவர்களாகப் பெறும் ஆட்சியாளன் பித்தரிலும் அறிவற்றவன்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(வில்லேருழவர் பகையானாலும்) தனியாக இருந்து கொண்டு பலபேரைக் பகைத்துக்கொள்ளுகிறவன் பைத்தியக் காரனைவிடப் புத்திக் கெட்டுப்போனவன்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
தான் தனியாக இருந்து பலருடன் பகை கொள்ளுபவன் பித்துப் பிடித்தவர்களைவிட அறிவில்லாதவனாவான்.
Translation
Than men of mind diseased, a wretch more utterly forlorn,
Is he who stands alone, object of many foeman's scorn.
Explanation
He who being alone, incurs the hatred of many is more infatuated than even mad men.