பெரிய சிறிய கட்சிகள்,
பெரிய பெரிய கனவுகள் !,
கனவுகள் மெய்ப்பட!
காரணம் தேடும் போராட்டங்கள்,
கல் வீச்சு, பஸ் எரிப்பு, கடை அடைப்பு,
தனி மனிதனை வீட்டுக்குள்
முடக்கி வைத்துவிட்டு,
அன்றய நாளில் அனைவரின்
வருமானத்தை (அவர்களது) உட்பட
வெற்றி வெற்றி என கூப்பாடு
போடும் கட்சிகள், அதைப்பார்த்து
இந்த கட்சி நடத்தும் பந்த்
அந்த கட்சி நடத்தும் பந்த்
கிடு கிடுக்கவைத்துவிட்டது நாட்டை
என பெருமை பேசும் என் போன்றோர் !.
யார் சொன்னது இந்தியர்களுக்கு
சுதந்திரத்தை பேணத்தெரியாது என்று?
எங்களது தனி மனித சுதந்திரம்
என்னவென்று தெரியுமா?
பொது வீதியில் ! புகை பிடித்தல்
எச்சில் துப்புதல், சிறு நீர் கழித்தல்,
என் வீட்டு வீட்டு குப்பையை
அடுத்த வீட்டுக்கு தள்ளி விடுதல்,
இன்னும் எத்தனையோ !
பொது சுதந்திரம் என்னவென்று
தெரியுமா? சாதிக்கூட்டங்கள்,
அரசியல் போர்வையில் கலவரம்,
தனி மனித துதி !
இத்தனையும் இருந்தாலும்
எந் நாட்டு ஜனநாயகம் எனக்கு
பெரியதுதான், எந்த மதமாய் இருந்தாலும்,
அவரவர் மத கோட்பாடுகளில்
பாவ புண்ணியங்களுக்கு பயப்படுதல்,
எந்த சாதியாய் இருந்தாலும்,
அதிலும் நீ இந்த குலம் அந்த குலம்
என்று பிரிந்தாலும் அடிப்படையில்
பிரிவினைக்கு பயப்படுகிறான்,
ஆம் நம் ஜனநாயகம் !
கலாச்சார அடிப்படையில் பின்னப்பட்டுள்ளது
இதில் மதங்களோ ஜாதிகளோ,
அவ்வப்போது வந்து போகும் சிறு வியாதி.
|