விவசாயிகளுக்குக் கடன் அட்டை
கொரோனா பேரிடர் காலத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் நிதி நெருக்கடியைச் சமாளிக்க, உழவர்களுக்கான கடன் அட்டை வழங்கும் திட்டத்தை மத்திய ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கடன் அட்டையைப் பயன்படுத்தி ரூ. 3 லட்சம் வரை விவசாயிகள் கடன் பெறலாம். விவசாய நிலங்கள் வைத்திருக்கும் விவசாயிகளே இந்த கடன் அட்டை பெறத் தகுதியானவர்கள் ஆவர். நிலத்தின் அளவு , பயிர் மற்றும் பயிர் சாகுபடி செய்வதற்குத் தேவையான செலவினங்கள் பொருத்து இத்திட்டத்தில் கடன் வழங்கப்படும். பயிர் சாகுபடி மட்டுமின்றி கால்நடை மற்றும் மீன் வளர்ப்பிற்கும் இக்கடன் அட்டை மூலம் கடன் வழங்கப்படும்.
|