இன்று நடைபெற வேண்டிய கிராம சபா கூட்டம் தள்ளிவைப்பு
1998ம் ஆண்டு நவம்பர் 19ம் தேதியன்று பிறப்பிக்கப்பட்ட அரசாணையின் படி ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ம் தேதி, ஆகஸ்ட் 15ம் தேதி மற்றும் அக்டோபர் 2ம் தேதி ஆகிய நாட்களில் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். ஆனால் கொரோனாத் தொற்று ஊரடங்கு காரணமாக இன்று நடைபெற வேண்டிய கிராம சபா கூட்டத்தைத் தள்ளி வைப்பதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது.
|