|
|||||
இளநீர் கடல் பாசி |
|||||
தேவையானவை : கடல் பாசி - 10 கிராம் தண்ணீர் - 2 டம்ளர் இளநீரில் கிடைக்கும் தண்ணீர் - அரை (அ) முக்கால் டம்ளர் சர்க்கரை - தேவையான அளவு இளநீரில் இருக்கும் வழுக்கை தேங்காய் பாதாம் - ஒரு மேசைக்கரண்டி (பொடியாக அரிந்தது தேவைப்பட்டால்) செய்முறை : 1.ஒரு அகலமான பத்திரத்தில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி கடல்பாசி மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி விட்டு கொதிக்க விடவும் 2.கடல் பாசி கரைந்து தண்ணீர் தெளிய ஆரம்பிக்கும் போது பத்திரத்தை அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும். 3.இறக்கி வைத்திருக்கும் கடல்பாசி கலந்த தண்ணீரை மற்றொரு பாத்திரத்தில் வடிகட்டிக் கொள்ளவும். வடிகட்டியில் தங்கும் கடல் பாசியை மீண்டும் சிறிது தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். 4.சதுரமாக உள்ள இரண்டு பாத்திரங்களில் வடிகட்டிய தண்ணீரை ஊற்றி அதில் இளநீரை சேர்த்து அதில் உள்ள வழுக்கையை கரண்டியால் சுரண்டி மேலே தூவி விடவும். பாதாமை மேலே தூவவும். 5.சூடு ஆறியதும் லேசாக கெட்டி ஆகும். அப்போது அந்த இரண்டு பாத்திரங்களையும் ப்ரிட்ஜில் வைக்கவும். 6.கடல் பாசி நன்கு கெட்டியாக மாறி குளிர்ச்சியடைந்ததும் எடுத்து விரும்பிய வடிவில் நறுக்கிக் கொள்ளவும். |
|||||
by on 18 May 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|