|
|||||
சளி, உயர் ரத்த அழுத்தத்துக்கான 46 மருந்துகள் தரமற்றவை என இந்திய அரசு தகவல். |
|||||
சளி, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கான 46 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை
நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மாத்திரை, மருந்துகளை மத்திய மற்றும் மாநில மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியங்கள் ஆய்வு செய்து வருகின்றன. ஆய்வின்போது போலி மற்றும் தரமற்ற மருந்துகள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
கடந்த மாதத்தில் மட்டும் 932 மருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதில், சளி பிரச்சினை, உயர் ரத்த அழுத்தம், கிருமித் தொற்று, ஜீரண மண்டலப் பாதிப்பு, உயிர்ச்சத்து குறைபாடு உள்ளிட்டவற்றுக்குப் பயன்படுத்தப்படும் 46 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டது. அந்த விவரங்கள் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்தின் https:// cdsco.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளது. |
|||||
by Kumar on 28 Feb 2024 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|