இஸ்ரோ இந்த ஆண்டு பெண் தோற்றம் கொண்ட விண்வெளி எந்திர மனிதன் "வியோம்மித்ரா" வை விண்வெளிக்கு அனுப்பும் என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
டெல்லியில் இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் ஜிதேந்திர சிங் கூறியதாவது: இஸ்ரோவின் லட்சியத் திட்டமான மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் "ககன்யான்" திட்டத்துக்கு முன்னதாக பெண் தோற்றம் கொண்ட விண்வெளி எந்திர மனிதன் "வியோம்மித்ரா" இந்த ஆண்டு விண்வெளிக்கு அனுப்பப்படும்.
ஆளில்லா விண்வெளி விமானமான "வியோம்மித்ரா"-வை இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மனிதர்கள் செல்லும் "ககன்யான்" திட்டத்தை அடுத்த ஆண்டு, அதாவது 2025-ல் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. "வியோம்மித்ரா" என்பது விண்வெளி என்றும் "மித்ரா" என்பது நண்பர் என்றும் பொருள். இரண்டு சமஸ்கிருதச் சொற்களிலிருந்து பெறப்பட்ட பெயர் இது. இந்தப் பெண் தோற்றம் கொண்ட எந்திர மனிதன், விண்வெளி அளவுருக்களை கண்காணித்தல், எச்சரிக்கைகளை வழங்குதல் போன்ற திறன் கொண்டது. இந்த எந்திர மனிதனால் ஆறு பேனல்களை இயக்குவது மற்றும் கேள்விகளுக்குப் பதிலளிப்பது போன்ற பணிகளைச் செய்ய முடியும். இவ்வாறு ஜிதேந்திர சிங் கூறினார்.
|