|
|||||
ஜீவா என்ன கதை - சொல்கிறார் சுசீந்திரன் !! |
|||||
சுசீந்திரன் இயக்கத்தில், விஷ்னு, ஸ்ரீ திவ்யா நடிப்பில் உருவாக்கி வரும் படம் ஜீவா. இந்த படத்திற்கு டி.இமான் இசை அமைக்க, மதி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். வெண்ணிலா கபடி குழுவில் கபடி விளையாட்டை மையமாக வைத்து படம் எடுத்த சுசீந்திரன் இந்த படத்தில், கிரிக்கெட்டை மையமாக வைத்து படம் எடுத்திருக்கிறாராம். இந்த படத்தின் கதை குறித்து சுசீந்திரன் கூறியிருப்பதாவது: கிரிக்கெட் விளையாட்டு இந்தியாவின் உயிராக மாறிவிட்டது. இங்குள்ள எல்லோருக்குள்ளும் ஒரு கிரிக்கெட் வீரனோ, ரசிகனோ இருக்கிறான். துடிப்பான இளைஞர்கள் கிரிக்கெட்டில் சாதிக்க துடிக்கிறார்கள். செலக்ஷன் அரசியலில் அடிப்பட்டு கிரிகெட்டையே மறந்துடுறாங்க. கிரிக்கெட்டில் ஜெயிச்சவங்க, தோத்தவங்க ஒவ்வொருத்தர்கிட்டேயும் ஒரு வலியிருக்கு. அப்படியருத்தனோட வலிதான் படம். 50 வயசுல சினிமா டைரக்டராயிடலாம், பணக்காரனாயிடலாம், விஞ்ஞானி ஆகலாம். ஆனால் 22 வயசுக்குள்ள கிரிக்கெட் வீரனாக வேண்டும். தவறவிட்டால் அப்புறம் எப்பவுமே ஆகமுடியாது. அப்படி 20 வருட உழைப்பு, கனவு இரண்டையும் தொலைச்சவன் இன்னொரு வாழ்க்கையை தேடி எங்கே போவான் அதை பேசுகிற படம். எல்லா நாட்டுலேயும் கிரிக்கெட் விளையாடித்தான் தோத்துபோவாங்க. நம்ம நாட்டுல மட்டும்தான் வாய்ப்பு கிடைக்காமலே தோத்து போறாங்க. அதைத்தான் படம் பேசப்போகுது என உருக்கமாக கூறினார் சுசீந்திரன். |
|||||
by Swathi on 03 Sep 2014 0 Comments | |||||
Tags: ஜீவா திரைப்படம் ஜீவா கதை | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|