|
||||||||
வெளுக்கும் (விவ) சாயம் - மதிமுகிலன் |
||||||||
மூங்கில் இழைமேலே தூங்கும் பனிநீரே தூங்கும் பனிநீரை வாங்கும் கதிரோனே…
கம்பன் வியந்த அவன்கவிதை வரிகள்
கலப்பைக்கும் கரிசல் காட்டிற்க்கும் தெரியும்.
உழவுக் கலப்பை அருங்காட்சியின்
உள்ளே காட்சி பொருளாய்
கட்டை வண்டியும் காளைமாடும்
கசந்துதான் போய்விட்டது நமக்கு
ஏழையென்று ஏளனம் பேசியவர்க்கு
ஏறக்குறைய பாடம் புகட்டியிருக்கலாம்
சோறு போட்ட கழனியை
கூறு போட்டு விற்றிருந்தால்
பட்டினிக்கு மாத்திரை கண்டு தின்றும்
பட்டணம் ஒரு நாள் வருந்தும்
பட்டப்படிப்பில் வரும் பாடம் ஒன்றில்
பட்டினிச்சாவு எனும் வரலாறு கண்டு
- மதிமுகிலன் |
||||||||
by Mathimukilan on 27 Dec 2015 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|