|
||||||||
வாழ்ந்திடுவோமே |
||||||||
வாழ்ந்திடுவோம்
எளிமையாக வாழ்வோமே,
என்றும் இனிமை காண்போமே
காந்தி சொன்ன வார்த்தைகள்
எங்கள் வாழ்க்கைக்கு உதவுமே.
சத்தியத்தை பேசிடுவோம்,
வேற்றுமைகளை மறந்திடுவோம்.
நாட்டின் மீது பற்று வைப்போம்.
தொழில்களையும் வளர்த்திடுவோம்.
கல்வி சாலைகளையும் பேணிடுவோம்.
விளையாட்டுகளையும் ஊக்குவிப்போம்.!
எல்லா மதமும் ஒன்றுதான்,
எல்லா இனமும் ஒன்றுதான்
இன்பம், துன்பம் வந்தாலும்,
ஒன்றாய் கருதி வாழ்ந்திடுவோம்.
குழந்தை பருவம் மட்டுமே,
கூடி ஆடும் பருவம்தான்
நாங்கள் என்றும் அறிவோமே. |
||||||||
Living | ||||||||
by Dhamotharan.S on 22 Oct 2016 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|