|
||||||||
ஞானக்குறள்-தன்பால்-துரிய தரிசனம் |
||||||||
வன்னிய தெட்டு மதியம் பதினாறு
முன்னிய பன்னிரண்டு முள. 291
சூரியன் வன்னியொன் றாகிடிற் சோமனாம்
பாருமி னீது பயன். 292
மதியொடு வன்னியொன் றாகவே வந்தால்
கதிரவ னாமென்று காண். 293
மதிக்குட் கதிரவன் வந்தங் கொடுங்கில்
உதிக்குமாம் பூரணைச் சொல். 294
தோற்றுங் கதிரவ னுண்மதி புக்கிடில்
சாற்று மமாவாசை தான். 295
வன்னி கதிரவன் கூடிடி லத்தகை
பின்னிவை யாகு மெலாம். 296
அமாவாசை பூரணை யாகு மவர்க்குச்
சமனா முயிருடம்பு தான். 297
அண்டத் திலுமிந்த வாறென் றறிந்திடு
பிண்டத் திலுமதுவே பேசு.
298
ஏறு மதிய மிறங்கிடி லுறங்கிடும்
கூறுமப் பூரணை கொள். 299
உதிக்கு மதியமுங் கண்டங் குறங்கில்
மதிக்கு மமாவாசை யாம்.
300
வன்னிய தெட்டு மதியம் பதினாறுமுன்னிய பன்னிரண்டு முள. 291 |
||||||||
by Swathi on 28 Mar 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|