|
||||||||
ஞானக்குறள்-வீட்டுனெறிப்பால்-மோட்சம் செல்லும் வழி |
||||||||
ஆதியாய் நின்ற வறிவுமுத லெழுத்
தோதிய நூலின் பயன். 1
பரமாய சத்தியுட் பஞ்சமா பூதந்
தரமாறிற் றோன்றும் பிறப்பு. 2
ஓசை பரிசமுருவஞ் சுவை நாற்ற
மாசை படுத்து மளறு. 3
தருமம் பொருள் காமம்வீடெனு நான்கு
முருவத்தா லாய பயன். 4
நிலமைந்து நீர் நான்கு நீடங்கி மூன்றே
யுலவை யிறண்டொன் றுவிண். 5
மாயன் பிரமனு ருத்திரன் மகேசனோ
டாயுஞ்சிவ மூர்த்தி யைந்து. 6
மாலய னங்கி யிரவிமதி யுமையோ
டேலும் திகழ்சத்தி யாறு. 7
தொக்குதிரத் தோடூன் மூளைநிண மென்பு
சுக்கிலந் தாதுக்க ளேழு. 8
மண்ணோடு நீரங்கி மதுயொடு காற்றிரவி
விண்ணெச்ச மூர்த்தியோ டெட்டு. 9
இவையெல் லாங்கூடி யுடம்பாய வொன்றி
னவையெல்லா மானது விந்து. 10
ஆதியாய் நின்ற வறிவுமுத லெழுத்தோதிய நூலின் பயன். 1 |
||||||||
by Swathi on 28 Mar 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|