ஆடகச் சயிலத்து ஒருடல் பற்றி கலிதிரைப் பரவையும் கனன்றெழு வடவையும் அடியினும் முடியினும் அணைந்தன போல பசுந்தழைத் தோகையும் செஞ்சிறைச் சேவலும் தாங்கியும், மலர்க்கரம் தங்கியும் நிலைத்த (5)
பேரொளி மேனியன் பார்உயிர்க்கு ஓருயிர் மாவுடைக் கூற்றம் மலர்அயன் தண்டம் குறுமுனி பெறும்மறை நெடுமறை பெறாமுதல் குஞ்சரத் தோகையும் குறமகட் பேதையும் இருந்தன இருபுறத்து எந்தை என்அமுதம் (10)
பிறந்தருள் குன்றம் ஒருங்குறப் பெற்ற மாதவக் கூடல் மதிச்சடைக் காரணன் இருபதம் தேறா இருள்உளம் ஆமென இவள்உளம் கொட்ப அயல்உளம் களிப்ப அரும்பொருட் செல்வி எனும்திரு மகட்கு (15)
மானிட மகளிர் தாமும்நின் றெதிர்ந்து புல்இதழ்த் தாமரை இல்அளித் தெனவும் உலகுவிண் பனிக்கும் ஒருசய மகட்கு தேவர்தம் மகளிரும் செருமுகம் நேர்ந்து வீரம்அங்கு ஈந்துபின் விளிவது மானவும் (20)
இருளுடல் அரக்கியர் கலைமகட் கண்டு தென்தமிழ் வடகலை சிலகொடுத் தெனவும் நீரர மகளிர் பாந்தள் அம் கன்னியர்க்கு ஆர்எரி மணித்திரன் அருளியது எனவும் செம்மலர்க் குழலிவள் போய்அறி வுறுத்தக் (25)
கற்றதும் கல்லாது உற்றன ஊரனை அவள்தர இவள்பெறும் அரந்தையம் பேறினுக்கு ஒன்றிய உவமம் இன்றிவண் உளவால் மற்றவள் தரநெடுங் கற்பே உற்றிவள் பெற்றாள் என்பதும் தகுமே. (30)
|