|
||||||||
இசைப்பா |
||||||||
பண்ணுடன் நடப்பன, பண்ணும் தாளமும்
நண்ணி நடப்பன என இரண்டு இசைப்பா.
கருத்து : பண் என்று சொல்லப்படும் இராகத்தோடு மட்டும் நடக்கும் இசைப்பாக்கள் என்றும் பண்ணுடன் தாளத்தோடு சேர்ந்து நடக்கும் இசைப்பாக்கள் என்றும் இசைப்பாக்கள் இரண்டு வகைப்படும்.
விளக்கம் : தாளமின்றிப் பண்ணுடன் மட்டும் இசைக்கும் பாடல்கள் இசைப்பா எனப்படும். திருத்தாண்டகங்கள் இசைப்பா வகையைச் சார்ந்தவை. அவை மா, விளம் வாய்பாடுகளால் ஆனவை. தாண்டகங்கள் தாளத்துடன் பாடப்படுதல் இல்லை. தாளமின்றி விருத்தம் பாடுதலை “சுத்தாங்கமாகப் பாடுதல்” என்பர். அவ்வாறு பாடப்படும் திருத்தாண்டகங்களைச் சிலர் ஏதேனும் தாளத்தில் அடக்கிப் பாடுவர். எனினும் இயல்பாயிருக்காது.
காட்டு :
செங்கால மடநாராய் இன்றே சென்று
திருக்கண்ண புரம்புக்கு என் செங்கண் மாலுக்கு
என்காதல் என்துணைவர்க்கு உரைத்தி யாகில்
இதுவொப்பது எமக்கின்ப மில்லை நாளும்
பைங்கானம் ஈதெல்லாம் உனதே யாகப்
பழனமீன் கவர்ந்துண்ணத் தருவன்; தந்தால்
இங்கேவந்து இனிதிருந்துஉன் பெடையும் நீயும்
இருநிலத்தில் இனிதின்பம் எய்த லாமே!
(திருமங்கையாழ்வார்: திருநெடுந்தாண்டகம்-27)
பண்ணோடும், பாணி எனப்படும் கால அளவோடும் (தாளத்தோடும்) இசைக்கும் பாடல்கள் இசையளவு பா எனப்படும். இப்படிப் பாடுதலை “இலயாங்கமாகப் பாடுதல்” என்பர்.
பண்ணுடன் நடப்பன, பண்ணும் தாளமும் நண்ணி நடப்பன என இரண்டு இசைப்பா. கருத்து : பண் என்று சொல்லப்படும் இராகத்தோடு மட்டும் நடக்கும் இசைப்பாக்கள் என்றும் பண்ணுடன் தாளத்தோடு சேர்ந்து நடக்கும் இசைப்பாக்கள் என்றும் இசைப்பாக்கள் இரண்டு வகைப்படும்.
விளக்கம் : தாளமின்றிப் பண்ணுடன் மட்டும் இசைக்கும் பாடல்கள் இசைப்பா எனப்படும். திருத்தாண்டகங்கள் இசைப்பா வகையைச் சார்ந்தவை. அவை மா, விளம் வாய்பாடுகளால் ஆனவை. தாண்டகங்கள் தாளத்துடன் பாடப்படுதல் இல்லை. தாளமின்றி விருத்தம் பாடுதலை “சுத்தாங்கமாகப் பாடுதல்” என்பர். அவ்வாறு பாடப்படும் திருத்தாண்டகங்களைச் சிலர் ஏதேனும் தாளத்தில் அடக்கிப் பாடுவர். எனினும் இயல்பாயிருக்காது.
காட்டு : செங்கால மடநாராய் இன்றே சென்று திருக்கண்ண புரம்புக்கு என் செங்கண் மாலுக்கு என்காதல் என்துணைவர்க்கு உரைத்தி யாகில் இதுவொப்பது எமக்கின்ப மில்லை நாளும் பைங்கானம் ஈதெல்லாம் உனதே யாகப் பழனமீன் கவர்ந்துண்ணத் தருவன்; தந்தால் இங்கேவந்து இனிதிருந்துஉன் பெடையும் நீயும் இருநிலத்தில் இனிதின்பம் எய்த லாமே! (திருமங்கையாழ்வார்: திருநெடுந்தாண்டகம்-27) பண்ணோடும், பாணி எனப்படும் கால அளவோடும் (தாளத்தோடும்) இசைக்கும் பாடல்கள் இசையளவு பா எனப்படும். இப்படிப் பாடுதலை “இலயாங்கமாகப் பாடுதல்” என்பர்.
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|