|
||||||||
வழிநடைச் சிந்து |
||||||||
வழிநடைச் செல்லும் வருத்தம் மறைய
ஆற்றிடைக் காட்சிகள் அணங்குக் குணர்த்தி
பாடும் சிந்துகள் பல்வகைச் சந்தமும்
அடியும் நடையும் அமைவுறப் பெற்று
வழிநடைச் சிந்தென வகுக்கப் படுமே
கருத்து : வழிநடையாகச் செல்லும்போது ஏற்படும் வருத்தம் மறைவதற்காகத் தாம் நடந்து செல்லும் வழியிடையில் உள்ள அழகுக்காட்சிகளைத் தன்னுடன் நடந்துவரும் மகளிர்க்கு எடுத்துத் தெரிவித்துப் பாடும் சிந்துப் பாடல்கள் வழிநடைச் சிந்து என்று பாகுபாடு செய்யப்படும். அவ்வழிநடைச் சிந்துகள் பலவகைச் சந்தமுடையனவாகவும், பலவகை அடிகளைய்;உடையனவாகவும் பலவகை நடையினை உடையனவாகவும் அமைந்திருக்கும்.
காட்டு :
கோபுர மீதுபுறாச் சோடி - நமைக்
கூப்பிடுதே வாஎனக்கு மரனைக் கொண்டாடி
நூபுர ஓதையளித் தோடிக் - கதிர்
நூலெனவி டந்தொறும் நு டங்கிடை நீ வாடி
(வெ.கோ.வ.சி.தொடை.ப்.271)
வழிநடைச்சிந்துகள் ஓரடிக் கண்ணியாகவும் வரும். பின்வரும் வழிநடைச் சிந்தின் ஓரடி 11 ஏகதாள வட்டணைகளில் அடங்கும் 44 சீர்களைப் பெற்றுள்ளது. அப்பாடலின் பிற்பகுதி ஒருவகைச் சந்த அமைப்பில் உள்ளதையும், எல்லா அரையடிகளுமே பகர மோனை ஒன்றனாலேயே தொடுக்கப் பெற்றுள்ளதையும் காண்க.
காட்டு : பின் சந்தக் குழுப்பு
தந்தானன தந்தானன தந்தானன தந்தானன
தத்தத்தன தனதந்தன தத்தத்தன தனதந்தன
தனதத்தன தந்தத்தன தனதத்தன தந்தத்தன
தனதத்தன தனதத்தன தனதத்தன தனதத்தன
பத்மினிசாதிப் பெண்ணே மானே - பாம்பன்
பார்க்கவ ருவாய் நீ தானே - அங்குப்
பாலசுப் ரமண்யர் ஆலயத் தில்விதிப்
பான்மையில் கும்பாபி டேகம் - அதைப்
பார்ப்பவர்க் கெய்தும்வை போகம் - குறப்
பாவையில்ன் மீதினில் மோகம் - கொண்ட
பண்பினால் மேவும்நல் யோகம் - மலர்
பைங்காவியை யுங்காலனை யுஞ்சேலினை யும்பார்வைகொள்
பச்சைகொடி இடையும்பிடி இச்சித்திடு நடையுங்கொடு
பதுமத்தின ரும்புக்கலர் தருபொற்றன மிஞ்சப்பெறு
பனசக்கனி ரசமொத்துறு வசனத்திலென் மனசைக்கவர் (பத்மினி)
(எம்.கே.எம்.அப்துல் காதிறு இராவுத்தர் பாம்பன் பால சுப்ரமணிய கோயில் வழிநடைச் சிந்து)
வழிநடைச் செல்லும் வருத்தம் மறைய ஆற்றிடைக் காட்சிகள் அணங்குக் குணர்த்தி பாடும் சிந்துகள் பல்வகைச் சந்தமும் அடியும் நடையும் அமைவுறப் பெற்று வழிநடைச் சிந்தென வகுக்கப் படுமே கருத்து : வழிநடையாகச் செல்லும்போது ஏற்படும் வருத்தம் மறைவதற்காகத் தாம் நடந்து செல்லும் வழியிடையில் உள்ள அழகுக்காட்சிகளைத் தன்னுடன் நடந்துவரும் மகளிர்க்கு எடுத்துத் தெரிவித்துப் பாடும் சிந்துப் பாடல்கள் வழிநடைச் சிந்து என்று பாகுபாடு செய்யப்படும். அவ்வழிநடைச் சிந்துகள் பலவகைச் சந்தமுடையனவாகவும், பலவகை அடிகளைய்;உடையனவாகவும் பலவகை நடையினை உடையனவாகவும் அமைந்திருக்கும்.
காட்டு : கோபுர மீதுபுறாச் சோடி - நமைக் கூப்பிடுதே வாஎனக்கு மரனைக் கொண்டாடி நூபுர ஓதையளித் தோடிக் - கதிர் நூலெனவி டந்தொறும் நு டங்கிடை நீ வாடி (வெ.கோ.வ.சி.தொடை.ப்.271)
வழிநடைச்சிந்துகள் ஓரடிக் கண்ணியாகவும் வரும். பின்வரும் வழிநடைச் சிந்தின் ஓரடி 11 ஏகதாள வட்டணைகளில் அடங்கும் 44 சீர்களைப் பெற்றுள்ளது. அப்பாடலின் பிற்பகுதி ஒருவகைச் சந்த அமைப்பில் உள்ளதையும், எல்லா அரையடிகளுமே பகர மோனை ஒன்றனாலேயே தொடுக்கப் பெற்றுள்ளதையும் காண்க.
காட்டு : பின் சந்தக் குழுப்பு தந்தானன தந்தானன தந்தானன தந்தானன தத்தத்தன தனதந்தன தத்தத்தன தனதந்தன தனதத்தன தந்தத்தன தனதத்தன தந்தத்தன தனதத்தன தனதத்தன தனதத்தன தனதத்தன
பத்மினிசாதிப் பெண்ணே மானே - பாம்பன் பார்க்கவ ருவாய் நீ தானே - அங்குப் பாலசுப் ரமண்யர் ஆலயத் தில்விதிப் பான்மையில் கும்பாபி டேகம் - அதைப் பார்ப்பவர்க் கெய்தும்வை போகம் - குறப் பாவையில்ன் மீதினில் மோகம் - கொண்ட பண்பினால் மேவும்நல் யோகம் - மலர்
பைங்காவியை யுங்காலனை யுஞ்சேலினை யும்பார்வைகொள் பச்சைகொடி இடையும்பிடி இச்சித்திடு நடையுங்கொடு பதுமத்தின ரும்புக்கலர் தருபொற்றன மிஞ்சப்பெறு பனசக்கனி ரசமொத்துறு வசனத்திலென் மனசைக்கவர் (பத்மினி) (எம்.கே.எம்.அப்துல் காதிறு இராவுத்தர் பாம்பன் பால சுப்ரமணிய கோயில் வழிநடைச் சிந்து)
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|