|
||||||||
வளையற் சிந்து |
||||||||
வளையல் வாணிகம் வழங்கும் பாவகை
எண்சீர் அடிகள் இரண்டினும் மூன்றினும்
தனிச்சொல்லும் இயைபும் தான்மிகப் பெற்றே
ஓரடிக் கண்ணியாய் பேரளவியன்று
மும்மையின் விரைவில் செம்மையாய் நடக்கும்
கருத்து : வளையல் வாணிகத்தில் வழக்கத்தில் இருக்கும் பாவகையான வளையற் சிந்து, எண்சீர் அடிகள் இரண்டு அமைந்தும் அல்லது மூன்று அமைந்தும், தனிச்சொல்லும் இயைபுத்தொடையும் மிகுதியாகப் பெற்றும் ஓரடிக் கண்ணிகளால் பெரிதும் இயன்று விரைவு மும்மை நடையில் செம்மையாக நடக்கும்.
விளக்கம் : தெருவில் வளையல் விற்கும் வணிகர்கள் பாடிச் செல்வதாக உருவானது வளையற் சிந்து, இப்பாடல்வகை வேறு பொருளிலும் பாடப்படுகிறது. இதன் அடிகள் ஒவ்வொன்றும் ஆதிதாளத்தின் மூன்று வட்டணைகளில் அடங்கும் இருபத்து நான்கு சீரடி ஓரடிக் கண்ணியாக வருவது பெரும்பான்மை. இரண்டு ஆதிதாள வட்டணையில் அடங்கும் 16 சீர் அடிபெற்று சிறுபான்மை வருவதுண்டு. இதன் சீர் மும்மை நடையினதாக அமைந்திருக்கும். 1,5, 9, 13, 17, 21 ஆம் சீர்களில் மோனை அமைந்திருக்கும் 7, 11, 15, 23 ஆம் சீர்களில் இயைபுத் தொடை அமைந்திருக்கும்.
காட்டு : 24 சீர் அடி
வாரு மையா வளையல் செட்டி
வளையல் விலை கூறும் - சீர்
மகிழ்ந்து மேகை பாரும் - பசி
வன்கொ டுமை தீரும் - எந்த
மாந கரம் பேர்இ னங்கள்
வகை விபரம் கூறும்.
-(தொடை.மேற்.ப.273)
இப்பாடலில் மேற்குறித்த சீர்களில் முறையே வா-வ-ம-வ-மா-வ என மோனையும், கூறும், பாரும், தீரும், கூறுமென இயைபும் வந்தமை காண்க.
காட்டு : 16 சீர்
தினத்தெந்தினா தினத்தெந்தினா
தினத்தெந்தினா தினனா
தென்னாதி னாதெந்தினா
தினத்தெந்தினா தினனா
சித்தர்கள்வாழ் மலையருகில்
சிறந்த நல்ல வனத்தில்
தேவிவள்ளி மான் வயிற்றில்
திருவுருவா யாமைந்தாள்
(வள்ளியம்மை ஆயலோட்டம், குறவஞ்சி, சில்லறைக்கோவை)
இதில் 1, 5, 9, 13 ஆம் சீர்களில் முறையே சி, சி, தே, தி என மோனைத் தொடை அமைந்துள்ளது. தனிச் சொல்லும் இயைபுத் தொடையும் இல்லை.
வளையல் வாணிகம் வழங்கும் பாவகை எண்சீர் அடிகள் இரண்டினும் மூன்றினும் தனிச்சொல்லும் இயைபும் தான்மிகப் பெற்றே ஓரடிக் கண்ணியாய் பேரளவியன்று மும்மையின் விரைவில் செம்மையாய் நடக்கும் கருத்து : வளையல் வாணிகத்தில் வழக்கத்தில் இருக்கும் பாவகையான வளையற் சிந்து, எண்சீர் அடிகள் இரண்டு அமைந்தும் அல்லது மூன்று அமைந்தும், தனிச்சொல்லும் இயைபுத்தொடையும் மிகுதியாகப் பெற்றும் ஓரடிக் கண்ணிகளால் பெரிதும் இயன்று விரைவு மும்மை நடையில் செம்மையாக நடக்கும்.
விளக்கம் : தெருவில் வளையல் விற்கும் வணிகர்கள் பாடிச் செல்வதாக உருவானது வளையற் சிந்து, இப்பாடல்வகை வேறு பொருளிலும் பாடப்படுகிறது. இதன் அடிகள் ஒவ்வொன்றும் ஆதிதாளத்தின் மூன்று வட்டணைகளில் அடங்கும் இருபத்து நான்கு சீரடி ஓரடிக் கண்ணியாக வருவது பெரும்பான்மை. இரண்டு ஆதிதாள வட்டணையில் அடங்கும் 16 சீர் அடிபெற்று சிறுபான்மை வருவதுண்டு. இதன் சீர் மும்மை நடையினதாக அமைந்திருக்கும். 1,5, 9, 13, 17, 21 ஆம் சீர்களில் மோனை அமைந்திருக்கும் 7, 11, 15, 23 ஆம் சீர்களில் இயைபுத் தொடை அமைந்திருக்கும்.
காட்டு : 24 சீர் அடி வாரு மையா வளையல் செட்டி வளையல் விலை கூறும் - சீர் மகிழ்ந்து மேகை பாரும் - பசி வன்கொ டுமை தீரும் - எந்த மாந கரம் பேர்இ னங்கள் வகை விபரம் கூறும். -(தொடை.மேற்.ப.273) இப்பாடலில் மேற்குறித்த சீர்களில் முறையே வா-வ-ம-வ-மா-வ என மோனையும், கூறும், பாரும், தீரும், கூறுமென இயைபும் வந்தமை காண்க.
காட்டு : 16 சீர் தினத்தெந்தினா தினத்தெந்தினா தினத்தெந்தினா தினனா தென்னாதி னாதெந்தினா தினத்தெந்தினா தினனா
சித்தர்கள்வாழ் மலையருகில் சிறந்த நல்ல வனத்தில் தேவிவள்ளி மான் வயிற்றில் திருவுருவா யாமைந்தாள் (வள்ளியம்மை ஆயலோட்டம், குறவஞ்சி, சில்லறைக்கோவை) இதில் 1, 5, 9, 13 ஆம் சீர்களில் முறையே சி, சி, தே, தி என மோனைத் தொடை அமைந்துள்ளது. தனிச் சொல்லும் இயைபுத் தொடையும் இல்லை.
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|