|
||||||||
இரவின் வண்ண ஓவியம்! - இல.பிரகாசம் |
||||||||
வானில் மின்னுகின்ற நட்சத்திரங்களின் நளின ஒளிகள் என் கண்களை பறிக்கின்றன
பார்வைகளிரண்டும் அயராது வியந்து பால்வெளி ரகசியங்களை தம் அறிவுச்சிந்தனைக் கப்பாற்பட்டும் தம் விழிகளின் வழியே நுழையும் வான்வெளி வண்ணங்களைக் கொண்டு பல கோட்டு ஓவியங்களை புனைகின்றன
வண்ணங்கள் கலவாதிருக்கும் இரவினை மின்னிடும் நட்சத்திர ஒளிகளைக் கொண்டு வரைந்த மென் கோட்டோவியங்களை அகத்தினில் கண்டு வியந்து அவைகளை கைகளில் பறித்துக் கொள்ள தாமரை இதழ் கண்களினூடே மனச்சிறகுள் பறந்து செல்ல எத்தனிக்கின்றன
அதற்குள் யாரோ? நிறைந்த நித்திரையைத் தருகின்ற ஒரு பெண் ஒளிகளை வான் வீதிகளில் வீசியபடி என் மனச் சிறகுகளை தன் புன்னகைகளால் மயக்குகிறாள்
இந்த இரவு மயக்கத்தையும் அளவில்லா ஆசைகளைத் தூண்டியும் என் மனதினை ஒவ்வொரு நாளும் ஏக்கத்தில் தவிக்கவிட்டு நீண்ட கனவென்னும் நித்திரையை தென்றல் தாலாட்டால் தனித்திருந்து தணிக்கின்றாள்! - இல.பிரகாசம்
|
||||||||
by Swathi on 02 Sep 2016 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|