|
||||||||
ஜீவாவின் ஜீவன் |
||||||||
நீண்ட நாளைக்குப் பிறகு இரண்டு நண்பர்கள் சந்தித்துக்கொண்டார்கள் . “ வாப்பா உன் பையன் எப்படி இருக்கிறான் ? ” என்று நண்பர் கேட்க , “ அவன் பெரிய குடிகாரன் . ஊர்லே ரவுடிகளோட தொடர்பு , அடிதடி , சும்மாவே இருக்க மாட்டான்” “ திருத்த முயற்சிக்கிறது தானே ? ” “ எவ்வளவோ முயற்சித்தும் முடியலே . எந்த வேலையில் சேர்த்தாலும் நீடிக்க மாட்டான் . அதான் நானே தண்ணி தெளிச்சி விட்டுட்டேன் . ” “ பரவாயில்லை . இப்ப எந்த கட்சியிலே எம் . எல்ஏ . வா இருக்கிறார் ” என்றார் . “ எந்தக் கட்சி ஆட்சியிலே இருக்கோ ? அதுலேதான் இருப்பான் ” என்றார் . இப்படி சுயலாபத்துக்காக அரசியலில் இருப்பவர்கள் பலர் . ஆனால் எந்தக் கட்சிக்காரர் என்றாலும் அவர்களிடமும் அன்பு செலுத்துபவர் தலைவர் . சென்னை - தாம்பரம் குடிசைவாசிகளுக்குப் பட்டா தரவேண்டும் என்று கம்யூனிஸ்டு கட்சித் தலைவர் ப . ஜீவானந்தம் போராடிக்கொண்டிருந்தார் . அப்போது காமராசர் முதலமைச்சராக இருந்தார் . தாம்பரத்தில் ஓர் ஆரம்பப் பள்ளிக் கட்டிடத்தைத் திறந்து வைக்க பெருந்தலைவர் சென்றார் . அந்த வழியில் தான் ஜீவாவின் வீடு இருந்தது . காரை நிறுத்தச்சொல்லி ஜீவாவின் வீட்டிற்குள் நுழைந்தார் . அது ஒரு கூரை பிய்ந்துபோன குடிசை வீடு . அந்த நேரத்தில் தலைவரை ஜீவா எதிர்பார்க்கவில்லை . “ என்ன இந்த வீட்டில் இருக்கிறீர்களே ” என்று கண்கலங்கினார்தலைவர் . “ எல்லாரையும் போலத்தானே நானும் ” என்றார் ஜீவா . “ ஆரம்பப் பள்ளிக் கட்டிடத்தை திறந்து வைக்க வந்தேன் . வழியில் உங்கள் வீடு இருந்ததால் உங்களையும் பார்க்க வந்தேன் ” என்ற தலைவர் அந்தப் பள்ளிக்கு அடிக்கல் நாட்டியவர் ஜீவாதான் என்பதைத் தெரிந்து கொண்டு அவரையும் தன்னுடன் விழாவுக்கு அழைத்துச் சென்றார் . சிறிது காலத்தில் ஜீவாவின் துணைவியாருக்கு ஒரு உத்தியோகம் கிடைத்தது . அது பெருந்தலைவரால்தான் கிடைத்தது என்பது பின்னால் தெரியவந்தது . பிறகு ஜீவா ஒரு நல்ல வீட்டில் இருக்க வேண்டும என விரும்பிய பெருந்தலைவர் அதற்காகவும் உதவி செய்தார் . நோய்வாய்ப்பட்டு சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியில் இருந்து ஜீவா கடைசியாக சொன்ன வார்த்தை காமராசருக்கு டெலிபோன் பண்ணுங்க என்பது தான் . உயிர் பிரியும் வேளையில் கூட ஜீவாவின் உள்ளத்தில் பெருந்தலைவர் இருந்தார் . நாட்டை சமதர்மப் பாதையில் நடத்திச்செல்கிறார் என்பதும் அவரது மனித நேயமும் ஜீவாவின் நெஞ்சில் பெருந்தலைவரை நிறுத்தியதில் வியப்பில்லை . |
||||||||
by Swathi on 02 Sep 2015 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|