ஏமாறுகிறவன் இருக்கிற வரையில் ஏமாற்றுகிறவனும் இருக்கத்தான் செய்வான் .
அண்ணன் தம்பி இருவர் தந்தை விட்டுச் சென்ற நிலத்தை பங்கிட்டனர் . “ நிலத்தின் வருவாயில் ஆளுக்குப் பாதி ” என்றான் அண்ணன் . இதில் அண்ணன் ஏமாற்றுக்காரன் தம்பி அப்பாவி .
முதல் வருடம் வயிலில் நெல் , சோளம் பயிரிட்டனர் . அண்ணன் , “ தம்பி மேல் பகுதி எனக்கு கீழ்பகுதி உனக்கு ” என்று பிரித்தான் . அதன்படி அண்ணனுககு மேலே உள்ள விளைச்சலும் தம்பிக்கு கீழே உள்ள வைக்கோலும் கிடைத்தன .
மறுவருடம் “ அண்ணா மேலே எனக்கு கீழே உனக்கு ” என்றான் தம்பி . அதன்படி ஏமாற்றுக்கார அண்ணன் முள்ளங்கி , நிலக்கடலை போன்றவற்றைப் பயிரிட்டான் . பேசியபடி தம்பிக்குத் தழையும் அண்ணனுக்கு விளைபாருட்களும் கிடைத்தன .
மூன்றாவது வருடம் அண்ணனிடம் ஏமாறக் கூடாது என்று முடிவுசெய்த தம்பி “ அண்ணா மேலேயும் , கீழேயும எனக்கு . நடுவில் உனக்கு ” என்றான் . அண்ணன்அந்த ஆண்டு கரும்பு பயிர் செய்தான் . தோகையும் , வேரும் தான் தம்பிக்கு கிடைத்தது .
சகோதரர்களுக்கு இடையே கூட இப்படி ஏமாற்று வேலை நடக்கின்ற போது தன்னலம் கருதாது மற்றவர்களை பதவியில் அமர்த்தி அழகு பார்த்தார் பெருந்தலைவர் .
ஜூன் 2 ஆம் தேதி பாராளுமன்ற கூட்டத்தை நடு மண்டபத்தில் கூட்டிப் பெருமை சேர்த்தார் தலைவர் . நேருஜிக்குப் பிறகு யார் ? கேள்விக்குப் பெருந்தலைவர் பதிலளித்த நாள் அது .
நம்மை விட்டுப பிரிந்த மாபெரும் தவைர் நேருஜியின் இடத்தை நிரப்புவது நமக்கு சாத்தியமல்ல . இப்போது நம் கடமையை நிறைவேற்ற கூட்டுத் தலைமையும் , பொறுப்பும் , ஒருமித்த கருத்தும் தேவைப்படுகிறது என்று காமராசர் கூறினார் .
பாராளுமன்ற காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் தலைவர் , மந்திரிகள் ஆகியோர் இருந்த அந்தச் சபையில் பெருந்தலைவர் ஒரு எச்சரிக்கையும விடுத்தார் . “ நேருஜி என்ற ஒரு குடைக்கீழ்இவ்வளவு நாளும் இருந்தோம் . அவர் அபயம் நமக்குக் கடைத்தது . நாம் தவறு செய்தால் நேருஜிக்காக மக்கள் நம்மை மன்னித்தாாகள் . அந்த நிலை இனி இல்லை . ஆகவே எதிர்காலத்தில் எல்லோரும் மிகவும் எச்சரிக்கையுடனும் கவனத்துடனும்செயலாற்ற வேண்டும் ” என்றார் .
ஆறு நாட்கள் தற்காலிக பிரதமராக இருந்த நந்தா , காங்கிரஸின் பாராளுமன்றத் தலைவராக லால் பகதூர் சாஸ்திரி பெயரை முன்மொழிந்தார் . அதை மொரார்ஸிதேசாய் வழி மொழிந்தார் . ஏகமனதாக லால் பகதூர் சாஸ்திரி தேர்ந்தெடுக்கப்பட்டார் .
லால் பகதூர் சாஸ்திரி பிரதமரானார் . மொரார்ஜி தேசாய் , எஸ் . கே . பட்டீல் , ஜெகஜீவன்ராம் , கிருஷ்ண மேனன் ஆகியேர் புதுப் பிரதமரை ஆதரித்துப் பாராட்டினார்கள் .
இந்தியாவின் முதல் பிரதமரை ( நேருஜி ) அண்ணல் காந்தியடிகள் நமக்கு வழங்கினார் . இந்தியாவின் இரண்டாவது பிரதமரைத் தென்னாட்டுக்காந்தியான தலைவர் காமராசர் நமக்கு வழங்கினார் .
|