|
||||||||
சேவைக்கு ஒரு சிலை |
||||||||
சென்னை நகரை ஒட்டி மனை வாங்கி வீடு கட்டி வாழ வேண்டும் என்பது ஒருவருடைய நீண்ட நாள் ஆசையாக இருந்தது . பத்திரிக்கையில் அப்போது ஒரு விளம்பரம் வந்தது . அம்போ ரியல் எஸ்டேட் , முப்பது நிமிட பயணம் , நகரை ஒட்டிய வீட்டு மனை , குடிநீர் , மின்சார வசதி , பள்ளி , கல்லூரி , வெளியூர் பஸ் வசதி , மனை வாங்குவோருக்கு குலுக்கல்முறையில் ஹீரோ ஹோண்டா , மாருதிக்கார் - இந்த விளம்பரம் அவரை ஈர்த்தது . ஒரு ஞாயிறன்று அந்த ரியல் எஸ்டேட் வேனில் ஏறி மனையைப் பார்க்கச்சென்றார் . வண்டி விழுப்புரம் , கடலூர் பண்ருட்டி , திண்டிவனம் , நெய்வேலி , கும்பகோணம் என போய்க்கொண்டே இருந்தது . கடைசியில் தஞ்சாவூர் தாண்டி , புதுக்கோட்டை பகுதியில் ஒரு அந்திரான வனப்பகுதி போன்ற திடலில் அரோகரா நகர் பகுதியைக் காட்டினார் . “ சார் இதுரொம்ப தூரமாச்சே ” என்று இவர் கேட்க . “ என்ன சார் தூரம் இது பக்கத்துலே தான் விமான நிலையம் வரப்போகுது . ப்ளைட்ல ஏறினா 30 நிமிடத்துலே சென்னை வந்துடலாம் ” என்றார் ரியல் எஸ்டேட்காரர் . இப்படிப்பட்ட மோசடிக்காரர்கள் வாழும் உலகில் தன்னலம் சிறிதும் இன்றிப் பிறர் நலத்துக்காவே சேவை செய்த காமராசருக்குச் சிலை வைக்க முடிவு செய்யப்பட்டது . 1961 ஆம் ஆண்டு அக்டோபர் 9 ஆம்தேதி பெருந்தலைவர் திருவுருவச் சிலையை நேருஜி திறந்து வைத்தார் . விழாவிற்கு தலைமை வகித்த சென்னை நகர மேயர் , “ தன்னலமற்ற தியாகத் தலைவர் , மக்களின் மன இருளைப்போக்க கல்வி எனும் விளக்கேற்றியவர் ” என்று பாராட்டினார் . சிலையைத்திறக்க வந்த நேரு , “ உயிரோடு இருப்பவர்களுக்கு சிலை அமைப்பதை நான் விரும்புவதில்லை . மறைந்த பிறகு மரியாதை செலுத்துவதே சிறந்தது என நினைப்பவன் நான் . ஆனால் காமராசர் செயலில் தன்னை மறந்து ஈடுபடும் ஆற்றலுடையவர் . மக்களிடமிருந்து தோன்றிய தலைவர் எனது நண்பர் என்ற முறையில் அவரது சிலையை திறந்து வைக்கிறேன் ” என்று கூறினார் . 48 ஆண்டுகளுக்கு முன் நேருஜி சென்னை வந்தபோது சத்தியமூர்த்தியின் வீட்டில் தங்கினார் . அலைந்த களைப்பில் இரவில் படுத்துத் தூங்க முயன்றார் . ஆனால் அவரைக் கண் மூடவிடாமல் வராண்டாவில் தூங்கக் கொண்டிருந்த இளைஞனின் குறட்டை சத்தம் கெடுத்தது . கோபம் கொண்ட நேருஜி “ சத்தியமூர்த்தி இதோ இந்த பையனை சென்னையை விட்டே வெளியேற்று , அல்லது எனது படுக்கையைத் தூக்கி கடற்கரையில் போடு ” என்றார் . அன்று அவ்வாறு குறட்டை விட்டுத் தூங்கிய காமராசரை வெளியேறச்சொன்ன நேருஜிதான் அவரது திருவுருவச் சிலையைப் பின்னாளில் மகிழ்ச்சியோடு திறந்து வைத்தார் . |
||||||||
by Swathi on 02 Sep 2015 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|