|
||||||||
சிவ பூஜையில் கரடி |
||||||||
மாவீரன் அலெக்சாண்டரைப் பார்க்க வந்த அயல்நாட்டு விருந்தினர் ஒருவர் , “ பேரரசே ! உங்கள் நகரிலுள்ள தோட்டங்களில் வீரமரணம் அடைந்த எண்ணற்ற வீரர்களின் சிலைகளை வைத்திருக்கிறீர்கள் . தங்களின் சிலையை மட்டும் ஏன் வைக்கவிலலை ?” என்று கேட்டார் . அதற்கு அலெக்சாண்டர் “ என்னுடைய உருவச் சிலையை நான் இங்கு வைத்தால் எதிர்காலத்தில் என் பெயர் மறைந்துவிடும் . இது யாருடைய சிலை என்று என் சிலையைப் பார்த்துக் கேட்பார்கள் . அதைவிட என் சிலை வைக்கப்படாதிருந்தால் “ இவ்வளவு சிலைகள் இருக்கும்போது அலெக்சாண்டரின் சிலை மட்டும ஏன் இல்லை ? என்று கேட்கட்டும் . அதைத் தான் நான் விரும்புகிறேன் .” என்றார் . இப்படித் தற்பெருமையோடு நடப்பவர்களால் தான் சில சமயம் சலசலப்புகள் ஏற்படும் . தங்களை முன்னிறுத்திக் கொள்ள எதையாவது செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள் . இல்லாவிட்டால் அதற்கான சூழ்நிலையை ஏற்படுத்துவார்கள் . இந்த மாதிரியான வீண் பந்தாக்கள் எல்லாம் பெருந்தலைவரிடம் கிடையாது . அம்மாதிரி நடப்பவர்களையும கண்டிப்பார் . திராவிடர் கழக , திராவிட முன்னேற்றக் கழக கட்சிகள்வேகமாக வளர்ந்து கொண்டிருந்த காலம் , எந்த நேரத்தில் கூட்டம் என்றாலும் பெரியார் குறிப்பிட்ட நேரத்தில் மேடையில்இருப்பார் . ஆனால் கூட்டம் தொடங்கி ஒரு மணி நேரத்துக்குப் பிறகுதான் அண்ணா வருவார் . அவரைப் பார்த்ததும் கூட்டத்தினர் “ அண்ணா வாழ்க ” என்று உரத்த குரலில் முழக்கமிடுவர் . அந்த ஒலிக்கிடையே வந்து மேடையில் அமர்வார் . இதனால் அவர் வரும் நேரத்தில் மேடையில் யார் முழங்கிக் கொண்டிருந்தாலும் , தொடர்ந்து பேசமுடியாமல் போகும் . சர்வக் கட்சிக் கூட்டமாக இருந்தால் அதில் பேசுகின்ற மற்ற கட்சித் தலைவர்களுக்கும் இந்த சோதனை நடக்கும் . எந்தக் கூட்டமாக இருந்தாலும் நிறைவாக முத்தாய்ப்புப்பேச்சாளர் அண்ணா என்பதால் வீணாகச் சிலமணி நேரம் மேடையில் ஏன் கழிக்க வேண்டும் ? என்று அவர் எண்ணியிருக்கலாம் . ஆனால் அந்த அண்ணாவுக்கு இதுபோல் ஒரு சோதனை ஏற்பட்டது . திலகர் கட்டிடத்தில் 1960 ஆம் ஆண்டு ஒரு கூட்டம் நடந்தது . அதில் அண்ணா உரையற்றிக்கொண்டிருந்த போது திரு . எம் . ஜி . ஆர் . வந்தார் . உடனே அவரைக் கண்ட கூட்டத்தினர் ஆரவாரக் குரல் எழுப்ப அண்ணாவாலேயே சில நொடிகள்பேச முடியாத நிலை ஏற்பட்டது . இதே போன்ற சோதனை பெருந்தலைவருக்கு ஏற்பட்டபோது அதை சாமர்த்தியமாகச் சமாளித்தார் . 1964 ஆம் ஆண்டு தமிழ் தேசியக் கட்சி இந்திய தேசியக் காங்கிரசோடு இணைந்த கூட்டம் நடந்தது . அதில் இனிமையாகப் பேசக் கூடியவர் திரு . ஈ . வி . கே சம்பத் . மென்மையான சொற்களால் வன்மையாகப் பேசக் கூடியவர் கண்ணதாசன் . திருச்சியில் இரு கட்சி இணைப்புக்கும் பின் நடந்த காங்கிரஸ் மாநாட்டின் மாலை நேரப் பொதுக்கூட்டம் . பலர்பேசிய பின் காமராசர் பேசிக் கொண்டிருந்தார் . நாட்டு நடப்பு , மக்கள் நிலை பற்றி ஆழமாகவும் , அழுத்தமாகவும் உரையாற்றிக்கொண்டிருந்தார் . அப்போது திடீரென கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது . கைதட்டல் வந்த இடத்தை தலைவர் கூர்ந்து பார்த்தார் . அங்கே வந்து கொண்டிருந்தவர் கவியரசர் கண்ணதாசன் . அவரைப் பார்த்து விட்ட தலைவர் “ யாரு ? கண்ணதாசனா ? ஏ கிறுக்கா அப்படியே உட்காரு ” என்று ஒலி பெருக்கியிலேயே ஒரு போடு போட்டார் . கண்ணதாசனும் அப்படியே தரையில் அமர்ந்தார் . தவைர் உரை தொடர்ந்து நடந்து முடிந்தது . அதன் பின்னர் கண்ணதாசன் என்ற எரிமலை முழங்கிட கூட்டம் நிறைவு பெற்றது . தலைவர் தன்னைக் “ கிறுக்கா ” என்று சொல்லி வாழ்த்த மாட்டாரா என்று ஏங்கியவர்கள் பலர் உண்டு . ஏனெனில்தலைவர் தனது இதயபூர்வமான அன்பை அந்தச்சொல் மூலமே வெளிப்படுத்துவார் . |
||||||||
by Swathi on 03 Sep 2015 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|