மதுரையில் கூடல் அழகர் பெருமாள் கோயில் தெப்பம் மீட்பு
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள கூடல் அழகர் பெருமாள் கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று ஆகும். இதன் தெப்பக்குளத்தைச் சுற்றி உள்ள பகுதிகளைக் கோயில் நிர்வாகம் வியாபாரிகளுக்காக 1980ம் ஆண்டே வாடகைக்கு விட்டது. இதனால் கோயில் தெப்பக்குளம் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் தெப்பக்குளத்தின் படிக்கட்டுகள் ஆக்கிரமிக்கப்பட்டன. கடைகளை முழுமையாக அகற்றினால் தான் தெப்பக்குளத்தை மீட்க முடியும் என்ற நிலை உருவானது. இதைத் தொடர்ந்து மதுரையில் 60 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை கூடல் அழகர் பெருமாள் கோயில் தெப்பக்குளம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு புத்துயிர் பெற்று வருகிறது. மேலும் இங்குப் பாரம்பரிய முறைப்படி திருவிழா நடத்த இந்து சமய அறநிலையத் துறை திட்டமிட்டுள்ளது.
|