|
||||||||
மக்கள் சிந்தனைப் பேரவையின் சார்பில் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு எழுச்சிமிக்க பாரட்டு விழா |
||||||||
ஈரோடு மாவட்டத்தில் சென்ற கல்வியாண்டின் அரசுப் பொதுத் தேர்வில் 10 ஆம் வகுப்பிலும் 12 ஆம் வகுப்பிலும் தங்களது பாடங்களில் நூறுசதவிகித மாணவர்களைத் தேர்ச்சிபெற வைத்த அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு மக்கள் சிந்தனைப் பேரவையின் சார்பில் 21.06.2014 ஆம் தேதி சனிக்கிழமை ஈரோடு கொங்கு கலையரங்கில் பாராட்டு விழா நடைபெற்றது. காலை 10 மணிக்கு தொடங்கியவிழா 1.30 மணிக்கு நிறைவுபெற்றது.
பேராசிரியர் அப்துல்காதர் தனது ஒருமணி நேர உரையில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் பெற்றுத்தருவதோடு வாழ்வின் மதிப்புகளையும் பண்பாட்டையும் மனிதநேயத்தையும் கற்றுத்தரவேண்டும் என்ற கருத்தை வெவ்வேறு உதாரணங்களைச் சொல்லி விளக்கிப் பேசினார். இப்பாராட்டு விழா ஒரு ஆசிரியர் மாநாட்டைப் போல் எழுச்சிகரமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவ்விழாவில் 2000 க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர். ஊர்பிரமுகர்கள், பெற்றோர்கழகப் பொறுப்பாளர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். ஈரோடு மாவட்டத்தில் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு ஆகிய இரண்டு தேர்வுகளிலும் நூறு சதவிகிதம் தேர்ச்சி கொடுத்த அரசு மேல் நிலைப்பள்ளிகளுக்கு சிறப்பு பாரட்டுமடலை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார். 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 74 அரசுப் பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. 12 ஆம் வகுப்பில் 19 மேல்நிலைப்பள்ளிகளில் தேர்வுஎழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்தப் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களும் தலைமையாசிரியருடன் மேடைக்கு வரவழைத்து பாராட்டுமடல்கள் வழங்கப்பட்டன. அத்தோடு இம்மாவட்டத்தில் தன்னுடைய பாடத்தில் 100% மாணவர்களை தேர்ச்சி பெறவைத்த 1,800 அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கும் தனித்தனியாக மேடையில் பாராட்டுமடல்கள் வழங்கப்பட்டன.
செஞ்சிலுவைச் சங்கம், விளையாட்டு,சாரணர் இயக்கம் போன்ற அமைப்புகளில் அரசுப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் ஆர்வம் காட்டி மாணவர்களை ஊக்குவித்தமைக்காக சில ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கும் பாராட்டுமடல்கள் வழங்கப்பட்டன.
10 ஆம் வகுப்பிலும் 12 ஆம் வகுப்பிலும் அரசுப்பள்ளிகளுள் இம்மாவட்டத்தில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கும் பரிசளிக்கப்பட்டது.
தொர்டந்து 12 ஆவது ஆண்டாக மக்கள் சிந்தனைப் பேரவையால் நடத்தப்பட்ட அரசுப் பள்ளி ஆசிரியர்களைப் பாராட்டும் இவ்விழா ஆசிரியர்களுக்குப் புத்துணர்ச்சியையும் புதிய நம்பிக்கையையும் அளித்துள்ளது. இக்கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் கல்விகுறித்த பல துண்டறிக்கைகள் பேரவையால் வழங்கப்பட்டது. |
||||||||
by Swathi on 22 Jun 2014 0 Comments | ||||||||
Tags: த.ஸ்டாலின் குணசேகரன் மக்கள் சிந்தனைப் பேரவை Makkal Sinthanai Peravai | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|