|
||||||||
மனதின் ஓங்காரம் |
||||||||
கூரையில் பொத்தல் கலயங்களும் ஈர பசையின்றி அதி காலையில் வடித்த அரைக்காப்படி சாதமும் ஓற்றி எடுக்க பட்ட பருக்கையும் விளக்காமல் கழுவிய கலயம் அடைக்க பட்ட தென்னை கீற்றுக்களால் பினைக்க பட்ட கதவில் பற்றி கொண்ட கரையான் செம் மண் தரையில் ஏற்ப்பட்ட குண்டு குழியால் வந்த விளைவு சூடு ஆறியதால் படுத்து உறங்க அடுப்படிக்குள் நுழைந்த பூனை வானில் கருக்கல் பரவியதால் ஏதோ இனம் புரியாமல் பற்றி கொண்ட பயம் ஊத காற்று தென்னை கீற்றுகளோடு வேகமாக உரசியதால் ஓங்காரமிடும் சப்தம் சட சட வென பற்றிக் கொண்ட மழை செய்வதறியா திகைப்பில் புடவையில் பந்தலிட தூவானங்களால் பலனின்றி போனது .. ஆறுதல் அடையா மனது அழுது புலம்பியது....இறைவா.. யாவரையும் சகல வசதியால் சமமாக படைத்தால் உன் இறைவன் எனும் சகலரும் மதிக்கும் கீரிடம் இறங்கியா போய் விடும்! -ரஸ்வின் |
||||||||
by G R on 29 Mar 2015 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|