|
|||||
பொறியியலும் மருத்துவமும் இணைவது அவசியம்தான் : டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் |
|||||
சென்னை: மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படிக்கும்போதே ஆராய்ச்சிகளிலும் ஈடுபட வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கூறினார். சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்களுடன் நடந்த கலந்துரையாடலில் அவர் கூறியதாவது:
சென்னை மருத்துவக் கல்லூரி 175வது ஆண்டை கொண்டாடி வருகிறது. அப்படியென்றால் இந்தக் கல்லூரி சூரியனை 175 ஆண்டுகள் சுற்றி வந்துவிட்டது என்று அர்த்தம். மாணவர்களுக்கு கற்பனைத் திறன், நேர்மை, பொறுமை, ஈடுபாடு, தைரியம் அனைத்தும் அவசியம். வாழ்க்கையின் இறுதி வரை எதையாவது கற்றுக் கொண்டே இருங்கள்.
மருத்துவ மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படிப்பின்போதே ஆராய்ச்சிகளில் ஈடுபட வேண்டும். ஏழைகளும், கிராமப்புற மக்களும் பயனடையும் வகையில் குறைந்த செலவில் நவீன மற்றும் தரமான மருந்துகளை கண்டுபிடிக்க வேண்டும்.நோயால் வேதனைப்பட்டு வரும் மக்களிடம் சரியான முறையில் நோயைக் கண்டறியுங்கள். அந்த சோதனை, இந்த சோதனை என அவர்களின் வேதனையை அதிகரிக்காதீர்கள்.
ஐ.ஐ.டியில் மருத்துவப் படிப்பு அறிமுகப்படுத்தப்படுவது நல்ல விஷயம் தான். வாழ்க்கை அறிவியலின் தேவைக்கு பொறியியலும் மருத்துவமும் இணைவது அவசியம்தான்.வாழ்க்கையில் எழும் பிரச்சனைகளுக்கு நீங்கள் தலைவராக இருங்கள். பிரச்சனைகளை உங்களுக்கு தலைவராகாமல் பாரித்துக் கொள்ளுங்கள் என்றார் கலாம். |
|||||
by Swathi on 22 Sep 2011 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|