சர்க்கரை நோய் ஏற்படுவதற்கான காரணங்கள் :
உணவில் வெல்லம், சர்க்கரை, புதிய அரிசி, மாவுப் பண்டங்கள், எருமைப்பால், தயிர் மீன் முதலியவற்றைச் தொடர்ந்து அதிக அளவில் சாப்பிடுதல், உடற்பயிற்சி இல்லாமை, பகல் தூக்கம், மிருதுவான சோபா மெத்தைகளில் எப்போதும் அமர்ந்திருத்தல், எவ்வித அலுவலும் சிந்தனையும் சிறிதும் செய்யாமல் உண்ணல், உறங்கலுடன் சோம்பேறியாய் இருத்தல், அதிக கலைவ, துக்கம் போன்ற காரணங்களால் ரக்தம், மாம்சம், மேதஸ் என்னும் தாதுக்களில் உணவின் சாராம்சத்தை ஜீரணிக்கச் செய்யும் அக்னி எனும் நெருப்பின் சக்தி குன்றிவிடுவதால் இனிப்புடன் கூடிய அன்னரசம் தாதுக்களில் ஜீர்ணமாகிச் சேராமல் இனிப்பாகவே ஊடுருவிக் கொண்டிருக்கிறது. உடலின் திரவமான கழிவுப் பொருள்களில் முக்கியமான சிறுநீர் வழியே இந்த இனிப்பான உணவின் சாராம்சம் முழுமையாக வெளிப்படுகிறது.சிறுநீர் அதிக அளவில் வெளியாதல், தீவிரமான தண்ணீர் தாகம், கை -கால் எரிச்சல், அதிக தளர்ச்சி, சோர்வு, தோலில் வறட்சி, மலச்சிக்கல், நாக்கில் மாவு படிதல் போன்ற அறிகுறிகள் நீரிழிவுப் நோய் வந்துள்ளதைக் காட்டுகின்றன.
சர்க்கரை நோய் வராமல் தடுக்க :
இந்த நோய் வராமல் தடுக்க உணவை எப்போதும் பசி நன்கு வந்த பிறகுதான் சாப்பிட வேண்டும். சாப்பிட்டதும் சிறிது நேரம் அரசனைப் போல் அமர்ந்து பிறகு குறைந்தது நூறு அடிகளாவது நடக்க வேண்டும். நொறுக்குத் தீனிகளைத் தவிர்த்து சத்துள்ள உணவை மட்டுமே உட்கொள்ள வேண்டும். உடற்பயிற்சியின் மூலம் பசியும் தாதுக்களிலுள்ள நெருப்பும் தூண்டப்படுவதால் ஜீரண உறுப்புக்களின் சீரான செயல்பாடுகளால் எவ்வித நோயும் அண்டாமல் பாதுகாத்துக் கொள்ளமுடியும். இந்த நோய்க்கான தீர்வை ஆயுர்வேதம் மூன்று வகையில் குறிப்பிடுகின்றது. அவை பத்தியம், நடவடிக்கை, மற்றும் மருந்துகள்.
மருந்து :
பத்தியத்தில் உணவாக பழைய புழுங்கலரிசி மற்றும் கோதுமை தனியாகவும் இரண்டும் கலந்தும் முக்கிய உணவாய்ச் சாப்பிடலாம். இவைகளுடன் கேழ்வரகு, கொத்துக் கடலை, துவரை, கொள்ளு, பாசிப்பயிறு போன்றவைகளை மிதமாய்க் கூடவே சேர்க்கவும். காய்கறிகள் முக்கியமாய்க் கசப்பு, துவர்ப்புச் சுவையுள்ள கீரைகளும் தாராளமாய்ச் சேர்க்க வேண்டும். புளிப்பும் கூடாது. நெய்யும் அதிகம் சேர்க்கக்கூடாது. முடிந்தவரை அதிகமாக மஞ்சள் கிழங்கை உணவில் சேர்ப்பது உத்தமம்.
அது போல் முற்றிய பச்சை நெல்லிக்காய் மிகவும் சிறந்தது. துவையல் செய்தும் சாறு எடுத்து சாதத்தில் கலந்தும் சாப்பிடுவது நல்லது. பத்தியமும் உடற்பயிற்சியும் விடாது செய்துகொண்டிருக்க வேண்டும். நோயின் சீற்றத்தைக் குறைக்க 1. வில்வபத்ர ஸ்வரஸம் - சுமார் 10 கிராம் வில்வ இலையை கெட்டியாக அரைத்து சுமார் 50 மி.லி. பாலில் அல்லது நீரில் குழப்பிப் பிசைந்து வடிகட்டி காலை, மாலை வெறும் வயிற்றில் குடிக்கவும்.நிம்ப பத்ர ஸ்வரஸம் - வேப்பிலையை வில்வ இலை போல் செய்து சாப்பிடவும்.3. நிசா ஆம்லகீ சூர்ணம் 3-5 கிராம் வெந்நீருடன் காலை இரவு உணவிற்கு முன்பு சாப்பிடவும். முழுமையான தீர்வை, பத்தியம், உடற்பயிற்சி மற்றும் மருந்துகளால் நிச்சயம் பெற முடியும்.
|
Disclaimer: Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை. |