|
||||||||
ஆறாம் திருமுறை-6 |
||||||||
6.006.திருவதிகைவீரட்டானம்
திருவடித்திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வீரட்டானேசுவரர்.
தேவியார் - திருவதிகைநாயகி.
2139 அரவணையான் சிந்தித் தரற்றும்மடி
அருமறையான் சென்னிக் கணியாமடி
சரவணத்தான் கைதொழுது சாரும்மடி
சார்ந்தார்கட் கெல்லாஞ் சரணாமடி
பரவுவார் பாவம் பறைக்கும்மடி
பதினெண் கணங்களும் பாடும்மடி
திரைவிரவு தென்கெடில நாடன்னடி
திருவீரட் டானத்தெஞ் செல்வன்னடி.
6.006.1
அலைகள் ஒன்றொடொன்று மோதுகின்ற கெடில நதி பாயும் நாடனாய்த் திருவதிகை வீரட்டானத்தை உகந்தருளியுள்ள எம் செல்வனுடைய திருவடிகள் திருமாலால் தியானித்துப் போற்றப்படும். பிரமனுடைய தலைகளுக்கு அணிகளாகும், முருகனால் தொழப்பட்டு அணுகப்பெறும். பற்றுக் கோடாகக் கொண்ட அடியவர்களுக்கெல்லாம் அடைக்கலம் நல்கும், தம்மை வழிபடுபவர்களுடைய பாவத்தைப் போக்கும், பதினெண் தேவ கணத்தவராலும் பாடப் பெறும்.
2140 கொடுவினையா ரென்றுங் குறுகாவடி
குறைந்தடைந்தார் ஆழாமைக் காக்கும்மடி
படுமுழவம் பாணி பயிற்றும்மடி
பதைத்தெழுந்த வெங்கூற்றைப் பாய்ந்தவடி
கடுமுரணே றூர்ந்தான் கழற்சேவடி
கடல்வையங் காப்பான் கருதும்மடி
நெடுமதியங் கண்ணி யணிந்தானடி
நிறைகெடில வீரட்டம் நீங்காவடி.
6.006.2
விரைந்து செல்வதாய் ஏனைய காளைகளினின்றும் மாறுபட்ட காளையை ஊர்பவனும், நீண்ட பிறையை முடிமாலையாக அணிந்தவனும், கெடில நதிக்கரையிலுள்ள அதிகை வீரட்டானத்தை நீங்காது உகந்தருளியிருப்பவனும் ஆகிய எம்பெருமானுடைய திருவடிகள் தீவினை உடையவரால் ஒரு காலும் அணுகப்பெறாதன. நலிவுற்றுச் சரணாக அடைந்தவரை அழியாமல் காப்பன. முழவு ஒலித்தலையும் தாளம் இடுதலையும் பயிற்றுவிப்பன. வெகுண்டெழுந்த கொடிய கூற்றுவன் மீது பாய்ந்தன. கடலால் சூழப்பட்ட இவ்வுலகைக் காக்கும் திருமாலால் விரும்பிப் போற்றப்படுவன.
2141 வைதெழுவார் காமம்பொய் போகாவடி
வஞ்ச வலைப்பாடொன் றில்லாவடி
கைதொழுது நாமேத்திக் காணும்மடி
கணக்கு வழக்கைக் கடந்தவடி
நெய்தொழுது நாமேத்தி ஆட்டும்மடி
நீள்விசும்பை ஊடறுத்து நின்றவடி
தெய்வப் புனற்கெடில நாடன்னடி
திருவீரட் டானத் தெஞ் செல்வன்னடி.
6.006.3
கெடில நாடனாய் அதிகை வீரட்டத்தை உகந் தருளிய செல்வனாகிய எம்பெருமானுடைய திருவடிகள் எம் பெருமானைத் தூற்றிக் கொண்டே துயிலெழுபவருடைய தீய விருப்பங்களே நிறைவேறச் செய்வன; வஞ்சனையாகிய வலையிலே அகப்படாதன. கையால் தொழுது நாவினால் துதித்து நாம் அகக் கண்ணால் காண வாய்ப்பு அளிப்பன. உலகத்தார் கணக்கிடும் எல்லையைக் கடந்து நிற்பன. அடியவராகிய நாம் உடலால் தொழுது நாவால் துதித்துக் கையால் நெய் அபிடேகம் செய்யப் பொருந்துவன. நீண்ட வானுலகையும் கடந்து எங்கும் நீக்கமற நிறைந்து நிற்பன.
2142 அரும்பித்த செஞ்ஞாயி றேய்க்கும்மடி
அழகெழுத லாகா அருட்சேவடி
சுரும்பித்த வண்டினங்கள் சூழ்ந்தவடி
சோமனையுங் காலனையுங் காய்ந்தவடி
பெரும்பித்தர் கூடிப் பிதற்றும்மடி
பிழைத்தார் பிழைப்பறிய வல்லவடி
திருந்துநீர்த் தென்கெடில நாடன்னடி
திருவீரட் டானத்தெஞ் செல்வன்னடி.
6.006.4
தௌவான நீரை உடைய கெடில நதி பாயும் நாட்டினனாய், திருவீரட்டானத்தில் உகந்தருளியிருக்கும் எம் செல்வனாகிய எம்பெருமானுடைய திருவடிகள் தாமரையை அரும்பச் செய்யும் காலையில் தோன்றும் செந்நிறக் கதிரவனை நிறத்தாலும் ஒளியாலும் ஒப்பன. தம் அழகை ஓவியத்து எழுதலாகாத வனப்பினவாய் அடியார்களுக்கு அருளை வழங்குவன. சுரும்புகளும் வண்டுகளும் சுற்றித் திரியும் வாய்ப்பினை அளிப்பன. சந்திரனையும் கூற்றுவனையும் வெகுண்டன. பெருவிருப்புடைய அடியவரால் குழாமாகப் போற்றப்படுவன. தவறு செய்தவர்களுடைய தவறுகளை அறியும் ஆற்றல் உடையன.
2143 ஒருகாலத் தொன்றாகி நின்றவடி
ஊழிதோ றூழி உயர்ந்தவடி
பொருகழலும் பல்சிலம்பும் மார்க்கும்மடி
புகழ்வார் புகழ்தகைய வல்லவடி
இருநிலத்தார் இன்புற்றங் கேத்தும்மடி
இன்புற்றார் இட்டபூ ஏறும்மடி
திருவதிகைத் தென்கெடில நாடன்னடி
திருவீரட் டானத்தெஞ் செல்வன்னடி.
6.006.5
கெடில நாட்டுத் திருவதிகை வீரட்டானத்து எம் செல்வனுடைய திருவடிகள் படைப்புக் காலத்து ஒன்றாகி நின்று முற்றழிப்புக் காலத்தில் மாயையைத் தொழிற்படுத்தாது தம் நிலையிலேயே நிற்பன. ஒன்றில் கழலும் மற்றொன்றில் சிலம்பும் ஒலிக்குமாறு அமைந்தன. புகழ்வாருடைய புகழ் உரைகளுக்கு முடிவு காண இயலாதபடி தடுக்கும் ஆற்றல் உடையன. இப்பெரிய நில உலகிலுள்ளார் மகிழ்ந்து துதிக்கும் வாய்ப்பினை அளிப்பன. அவ்வாறு இன்புற்று அடியவர்கள் அருச்சித்த பூக்களைத் தம்பால் தாங்கி நிற்பன.
2144 திருமகட்குச் செந்தா மரையாமடி
சிறந்தவர்க்குத் தேனாய் விளைக்கும்மடி
பொருளவர்க்குப் பொன்னுரையாய் நின்றவடி
புகழ்வார் புகழ்தகைய வல்லவடி
உருவிரண்டு மொன்றோடொன் றொவ்வாவடி
உருவென் றுணரப் படாதவடி
திருவதிகைத் தென்கெடில நாடன்னடி
திருவீரட் டானத்தெஞ் செல்வன்னடி.
6.006.6
அழகிய கெடிலநாடனாய திருவதிகை வீரட்டானத்து எம்செல்வன் சேவடிகள் திருமகளுக்குச் செந்தாமரை போல்வன. சிறந்து அடியார்களுக்குத் தேன் போல இனிப்பன. செல்வர்களுக்கு அவர்கள் செல்வத்தைச் செலவிடும் திறத்தை ஓர்ந்து அறிய உரைகல்லாய் இருப்பன. புகழ்பவர் புகழ் எல்லையைத் தடுக்க வல்லன. வலம் இடம் இருபுறத்து அடிகளும் ஆண் அடியும் பெண் அடியுமாய் ஒன்றொடொன்று ஒவ்வாது அமைந்திருப்பன. தமக்கு உருவம் உடைமையே இயல்பு என்று உணரப்படமுடியாமல் உருவம் அருவம் என்ற நிலைகளைக் கடந்திருப்பன.
2145 உரைமாலை யெல்லா முடையவடி
உரையா லுணரப் படாதவடி
வரைமாதை வாடாமை வைக்கும்மடி
வானவர்கள் தாம்வணங்கி வாழ்த்தும்மடி
அரைமாத் திரையி லடங்கும்மடி
அகலம் அளக்கிற்பா ரில்லாவடி
கரைமாங் கலிக்கெடில நாடன்னடி
கமழ்வீரட்டானக் கபாலியடி.
6.006.7
கரைகளிலே மக்களின் ஆரவாரத்தை மிகுதியாக உடைய கெடில நதி பாயும் நாட்டில் நறுமணம் கமழும் வீரட்டானத்தை உகந்தருளியிருக்கும், மண்டையோட்டை ஏந்திய சிவபெருமானுடைய திருவடிகள் பாட்டும் உரையுமாகிய சொற்கோவைகளை உடையன. சொற்களால் முழுமையாக உணரப்படாதன, உமா தேவியை மனம் வாடாமல் மகிழ்வாக வைப்பன. வானவர்களால் வணங்கி வாழ்த்தப்படுவன. அரைமாத்திரை ஒலியற்றாகிய பிரணவக் கலையில் அடங்குவன. தம் பரப்பினை யாரும் அளக்கவியலாதபடி எங்கும் பரவி இருப்பன.
2146 நறுமலராய் நாறும் மலர்ச்சேவடி
நடுவா யுலகநா டாயவடி
செறிகதிருந் திங்களுமாய் நின்றவடி
தீத்திரளா யுள்ளே திகழ்ந்தவடி
மறுமதியை மாசு கழுவும்மடி
மந்திரமுந் தந்திரமும் ஆயவடி
செறிகெடில நாடர் பெருமானடி
திருவீரட் டானத்தெஞ் செல்வன்னடி.
6.006.8
கெடிலநாடர் பெருமானாம் திருவீரட்டானத்து எம் செல்வனுடைய திருவடிகள் இயற்கையிலேயே மலர் மணம் உடையனவாய் மலர்களாலும் அருச்சிக்கப் படுவன. அறமும் நீதியும் தம் வடிவமாக உலகியலையும் நாட்டியலையும் நிகழச்செய்வன. உலகிலே கதிரவனும் மதியமுமாய்ப் புறத்து ஒளிகளைத் தருவன. யோகியர் உள்ளத்தே ஒளிப்பிழம்பாய் உள்ளொளி பெருக்குவன. சந்திரனுக்கு ஏற்பட்ட மாசினைக் கழுவியன. மந்திரங்களும் அவற்றைச் செயற்படுத்தும் செயல்களுமாய் உள்ளன.
2147 அணியனவுஞ் சேயனவு மல்லாவடி
யடியார்கட் காரமுத மாயவடி
பணிபவர்க்குப் பாங்காக வல்லவடி
பற்றற்றார் பற்றும் பவளவடி
மணியடி பொன்னடி மாண்பாமடி
மருந்தாய்ப் பிணிதீர்க்க வல்லவடி
தணிபாடு தண்கெடில நாடன்னடி
தகைசார்வீ ரட்டத் தலைவன்னடி.
6.006.9
இனிய இசை பாடப்படும் குளிர்ந்த கெடிலநதி பாயும் நாட்டில் பெருமைபொருந்திய அதிகைவீரட்டானத் தலைவனுடைய திருவடிகள் அடியார்களுக்குப் பக்கத்தில் உள்ளனவாயும், அடியார் அல்லார்க்கு தூரத்தில் உள்ளவாயும் அமைந்திருப்பன. அடியவர்களுக்குக் கிட்டுதற்கு அரிய அமுதம் போன்று உள்ளன. வழிபடுபவர்களுக்குத் துணையாகும் ஆற்றல் உடையன. உலகப் பற்றற்ற சான்றோர்கள் பற்றும் தகையவாய்ப் பவள நிறத்தை உடையன. மணிகள் போலவும் பொன் போலவும் மதிப்பிடற்கரிய பெருமை உடையன. மருந்தாய்ப் பிறவிப் பிணியை அடியோடு நீக்கும் ஆற்றல் உடையன.
2148 அந்தா மரைப்போ தலர்ந்தவடி
அரக்கனையும் ஆற்ற லழித்தவடி
முந்தாகி முன்னே முளைத்தவடி
முழங்கழலாய் நீண்டஎம் மூர்த்தியடி
பந்தாடு மெல்விரலாள் பாகன்னடி
பவளத் தடவரையே போல்வானடி
வெந்தார் சுடலைநீ றாடும்மடி
வீரட்டங் காதல் விமலன்னடி.
6.006.10
ஒலிக்கும் தழற்பிழம்பாய் வளர்ந்த வடிவினனும் பந்தினை விளையாடும் மெல்லிய விரல்களை உடைய பார்வதி பாகனும், பெரிய பவள மலை போல்வானும், அதிகை வீரட்டத்தை உகந்தருளியிருக்கும் தூயோனும் ஆகிய எம் பெருமானுடைய திருவடிகள் தாமரைப் பூக்கள் போல மலர்ந்துள்ளன. இராவணனுடைய ஆற்றலையும் போக்கியன, ஏனைய பொருள்களின் தோற்றங்களுக்கு முன்னே தோன்றியன. சுடுகாட்டில் எரிக்கப்பட்டவருடைய சாம்பலில் தோய்வனவாம்.
திருச்சிற்றம்பலம்
6.006.திருவதிகைவீரட்டானம் திருவடித்திருத்தாண்டகம் திருச்சிற்றம்பலம்
இத்தலம் நடுநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - வீரட்டானேசுவரர். தேவியார் - திருவதிகைநாயகி.
2139 அரவணையான் சிந்தித் தரற்றும்மடி அருமறையான் சென்னிக் கணியாமடி சரவணத்தான் கைதொழுது சாரும்மடி சார்ந்தார்கட் கெல்லாஞ் சரணாமடி பரவுவார் பாவம் பறைக்கும்மடி பதினெண் கணங்களும் பாடும்மடி திரைவிரவு தென்கெடில நாடன்னடி திருவீரட் டானத்தெஞ் செல்வன்னடி. 6.006.1
அலைகள் ஒன்றொடொன்று மோதுகின்ற கெடில நதி பாயும் நாடனாய்த் திருவதிகை வீரட்டானத்தை உகந்தருளியுள்ள எம் செல்வனுடைய திருவடிகள் திருமாலால் தியானித்துப் போற்றப்படும். பிரமனுடைய தலைகளுக்கு அணிகளாகும், முருகனால் தொழப்பட்டு அணுகப்பெறும். பற்றுக் கோடாகக் கொண்ட அடியவர்களுக்கெல்லாம் அடைக்கலம் நல்கும், தம்மை வழிபடுபவர்களுடைய பாவத்தைப் போக்கும், பதினெண் தேவ கணத்தவராலும் பாடப் பெறும்.
2140 கொடுவினையா ரென்றுங் குறுகாவடி குறைந்தடைந்தார் ஆழாமைக் காக்கும்மடி படுமுழவம் பாணி பயிற்றும்மடி பதைத்தெழுந்த வெங்கூற்றைப் பாய்ந்தவடி கடுமுரணே றூர்ந்தான் கழற்சேவடி கடல்வையங் காப்பான் கருதும்மடி நெடுமதியங் கண்ணி யணிந்தானடி நிறைகெடில வீரட்டம் நீங்காவடி. 6.006.2
விரைந்து செல்வதாய் ஏனைய காளைகளினின்றும் மாறுபட்ட காளையை ஊர்பவனும், நீண்ட பிறையை முடிமாலையாக அணிந்தவனும், கெடில நதிக்கரையிலுள்ள அதிகை வீரட்டானத்தை நீங்காது உகந்தருளியிருப்பவனும் ஆகிய எம்பெருமானுடைய திருவடிகள் தீவினை உடையவரால் ஒரு காலும் அணுகப்பெறாதன. நலிவுற்றுச் சரணாக அடைந்தவரை அழியாமல் காப்பன. முழவு ஒலித்தலையும் தாளம் இடுதலையும் பயிற்றுவிப்பன. வெகுண்டெழுந்த கொடிய கூற்றுவன் மீது பாய்ந்தன. கடலால் சூழப்பட்ட இவ்வுலகைக் காக்கும் திருமாலால் விரும்பிப் போற்றப்படுவன.
2141 வைதெழுவார் காமம்பொய் போகாவடி வஞ்ச வலைப்பாடொன் றில்லாவடி கைதொழுது நாமேத்திக் காணும்மடி கணக்கு வழக்கைக் கடந்தவடி நெய்தொழுது நாமேத்தி ஆட்டும்மடி நீள்விசும்பை ஊடறுத்து நின்றவடி தெய்வப் புனற்கெடில நாடன்னடி திருவீரட் டானத் தெஞ் செல்வன்னடி. 6.006.3
கெடில நாடனாய் அதிகை வீரட்டத்தை உகந் தருளிய செல்வனாகிய எம்பெருமானுடைய திருவடிகள் எம் பெருமானைத் தூற்றிக் கொண்டே துயிலெழுபவருடைய தீய விருப்பங்களே நிறைவேறச் செய்வன; வஞ்சனையாகிய வலையிலே அகப்படாதன. கையால் தொழுது நாவினால் துதித்து நாம் அகக் கண்ணால் காண வாய்ப்பு அளிப்பன. உலகத்தார் கணக்கிடும் எல்லையைக் கடந்து நிற்பன. அடியவராகிய நாம் உடலால் தொழுது நாவால் துதித்துக் கையால் நெய் அபிடேகம் செய்யப் பொருந்துவன. நீண்ட வானுலகையும் கடந்து எங்கும் நீக்கமற நிறைந்து நிற்பன.
2142 அரும்பித்த செஞ்ஞாயி றேய்க்கும்மடி அழகெழுத லாகா அருட்சேவடி சுரும்பித்த வண்டினங்கள் சூழ்ந்தவடி சோமனையுங் காலனையுங் காய்ந்தவடி பெரும்பித்தர் கூடிப் பிதற்றும்மடி பிழைத்தார் பிழைப்பறிய வல்லவடி திருந்துநீர்த் தென்கெடில நாடன்னடி திருவீரட் டானத்தெஞ் செல்வன்னடி. 6.006.4
தௌவான நீரை உடைய கெடில நதி பாயும் நாட்டினனாய், திருவீரட்டானத்தில் உகந்தருளியிருக்கும் எம் செல்வனாகிய எம்பெருமானுடைய திருவடிகள் தாமரையை அரும்பச் செய்யும் காலையில் தோன்றும் செந்நிறக் கதிரவனை நிறத்தாலும் ஒளியாலும் ஒப்பன. தம் அழகை ஓவியத்து எழுதலாகாத வனப்பினவாய் அடியார்களுக்கு அருளை வழங்குவன. சுரும்புகளும் வண்டுகளும் சுற்றித் திரியும் வாய்ப்பினை அளிப்பன. சந்திரனையும் கூற்றுவனையும் வெகுண்டன. பெருவிருப்புடைய அடியவரால் குழாமாகப் போற்றப்படுவன. தவறு செய்தவர்களுடைய தவறுகளை அறியும் ஆற்றல் உடையன.
2143 ஒருகாலத் தொன்றாகி நின்றவடி ஊழிதோ றூழி உயர்ந்தவடி பொருகழலும் பல்சிலம்பும் மார்க்கும்மடி புகழ்வார் புகழ்தகைய வல்லவடி இருநிலத்தார் இன்புற்றங் கேத்தும்மடி இன்புற்றார் இட்டபூ ஏறும்மடி திருவதிகைத் தென்கெடில நாடன்னடி திருவீரட் டானத்தெஞ் செல்வன்னடி. 6.006.5
கெடில நாட்டுத் திருவதிகை வீரட்டானத்து எம் செல்வனுடைய திருவடிகள் படைப்புக் காலத்து ஒன்றாகி நின்று முற்றழிப்புக் காலத்தில் மாயையைத் தொழிற்படுத்தாது தம் நிலையிலேயே நிற்பன. ஒன்றில் கழலும் மற்றொன்றில் சிலம்பும் ஒலிக்குமாறு அமைந்தன. புகழ்வாருடைய புகழ் உரைகளுக்கு முடிவு காண இயலாதபடி தடுக்கும் ஆற்றல் உடையன. இப்பெரிய நில உலகிலுள்ளார் மகிழ்ந்து துதிக்கும் வாய்ப்பினை அளிப்பன. அவ்வாறு இன்புற்று அடியவர்கள் அருச்சித்த பூக்களைத் தம்பால் தாங்கி நிற்பன.
2144 திருமகட்குச் செந்தா மரையாமடி சிறந்தவர்க்குத் தேனாய் விளைக்கும்மடி பொருளவர்க்குப் பொன்னுரையாய் நின்றவடி புகழ்வார் புகழ்தகைய வல்லவடி உருவிரண்டு மொன்றோடொன் றொவ்வாவடி உருவென் றுணரப் படாதவடி திருவதிகைத் தென்கெடில நாடன்னடி திருவீரட் டானத்தெஞ் செல்வன்னடி. 6.006.6
அழகிய கெடிலநாடனாய திருவதிகை வீரட்டானத்து எம்செல்வன் சேவடிகள் திருமகளுக்குச் செந்தாமரை போல்வன. சிறந்து அடியார்களுக்குத் தேன் போல இனிப்பன. செல்வர்களுக்கு அவர்கள் செல்வத்தைச் செலவிடும் திறத்தை ஓர்ந்து அறிய உரைகல்லாய் இருப்பன. புகழ்பவர் புகழ் எல்லையைத் தடுக்க வல்லன. வலம் இடம் இருபுறத்து அடிகளும் ஆண் அடியும் பெண் அடியுமாய் ஒன்றொடொன்று ஒவ்வாது அமைந்திருப்பன. தமக்கு உருவம் உடைமையே இயல்பு என்று உணரப்படமுடியாமல் உருவம் அருவம் என்ற நிலைகளைக் கடந்திருப்பன.
2145 உரைமாலை யெல்லா முடையவடி உரையா லுணரப் படாதவடி வரைமாதை வாடாமை வைக்கும்மடி வானவர்கள் தாம்வணங்கி வாழ்த்தும்மடி அரைமாத் திரையி லடங்கும்மடி அகலம் அளக்கிற்பா ரில்லாவடி கரைமாங் கலிக்கெடில நாடன்னடி கமழ்வீரட்டானக் கபாலியடி. 6.006.7
கரைகளிலே மக்களின் ஆரவாரத்தை மிகுதியாக உடைய கெடில நதி பாயும் நாட்டில் நறுமணம் கமழும் வீரட்டானத்தை உகந்தருளியிருக்கும், மண்டையோட்டை ஏந்திய சிவபெருமானுடைய திருவடிகள் பாட்டும் உரையுமாகிய சொற்கோவைகளை உடையன. சொற்களால் முழுமையாக உணரப்படாதன, உமா தேவியை மனம் வாடாமல் மகிழ்வாக வைப்பன. வானவர்களால் வணங்கி வாழ்த்தப்படுவன. அரைமாத்திரை ஒலியற்றாகிய பிரணவக் கலையில் அடங்குவன. தம் பரப்பினை யாரும் அளக்கவியலாதபடி எங்கும் பரவி இருப்பன.
2146 நறுமலராய் நாறும் மலர்ச்சேவடி நடுவா யுலகநா டாயவடி செறிகதிருந் திங்களுமாய் நின்றவடி தீத்திரளா யுள்ளே திகழ்ந்தவடி மறுமதியை மாசு கழுவும்மடி மந்திரமுந் தந்திரமும் ஆயவடி செறிகெடில நாடர் பெருமானடி திருவீரட் டானத்தெஞ் செல்வன்னடி. 6.006.8
கெடிலநாடர் பெருமானாம் திருவீரட்டானத்து எம் செல்வனுடைய திருவடிகள் இயற்கையிலேயே மலர் மணம் உடையனவாய் மலர்களாலும் அருச்சிக்கப் படுவன. அறமும் நீதியும் தம் வடிவமாக உலகியலையும் நாட்டியலையும் நிகழச்செய்வன. உலகிலே கதிரவனும் மதியமுமாய்ப் புறத்து ஒளிகளைத் தருவன. யோகியர் உள்ளத்தே ஒளிப்பிழம்பாய் உள்ளொளி பெருக்குவன. சந்திரனுக்கு ஏற்பட்ட மாசினைக் கழுவியன. மந்திரங்களும் அவற்றைச் செயற்படுத்தும் செயல்களுமாய் உள்ளன.
2147 அணியனவுஞ் சேயனவு மல்லாவடி யடியார்கட் காரமுத மாயவடி பணிபவர்க்குப் பாங்காக வல்லவடி பற்றற்றார் பற்றும் பவளவடி மணியடி பொன்னடி மாண்பாமடி மருந்தாய்ப் பிணிதீர்க்க வல்லவடி தணிபாடு தண்கெடில நாடன்னடி தகைசார்வீ ரட்டத் தலைவன்னடி. 6.006.9
இனிய இசை பாடப்படும் குளிர்ந்த கெடிலநதி பாயும் நாட்டில் பெருமைபொருந்திய அதிகைவீரட்டானத் தலைவனுடைய திருவடிகள் அடியார்களுக்குப் பக்கத்தில் உள்ளனவாயும், அடியார் அல்லார்க்கு தூரத்தில் உள்ளவாயும் அமைந்திருப்பன. அடியவர்களுக்குக் கிட்டுதற்கு அரிய அமுதம் போன்று உள்ளன. வழிபடுபவர்களுக்குத் துணையாகும் ஆற்றல் உடையன. உலகப் பற்றற்ற சான்றோர்கள் பற்றும் தகையவாய்ப் பவள நிறத்தை உடையன. மணிகள் போலவும் பொன் போலவும் மதிப்பிடற்கரிய பெருமை உடையன. மருந்தாய்ப் பிறவிப் பிணியை அடியோடு நீக்கும் ஆற்றல் உடையன.
2148 அந்தா மரைப்போ தலர்ந்தவடி அரக்கனையும் ஆற்ற லழித்தவடி முந்தாகி முன்னே முளைத்தவடி முழங்கழலாய் நீண்டஎம் மூர்த்தியடி பந்தாடு மெல்விரலாள் பாகன்னடி பவளத் தடவரையே போல்வானடி வெந்தார் சுடலைநீ றாடும்மடி வீரட்டங் காதல் விமலன்னடி. 6.006.10
ஒலிக்கும் தழற்பிழம்பாய் வளர்ந்த வடிவினனும் பந்தினை விளையாடும் மெல்லிய விரல்களை உடைய பார்வதி பாகனும், பெரிய பவள மலை போல்வானும், அதிகை வீரட்டத்தை உகந்தருளியிருக்கும் தூயோனும் ஆகிய எம் பெருமானுடைய திருவடிகள் தாமரைப் பூக்கள் போல மலர்ந்துள்ளன. இராவணனுடைய ஆற்றலையும் போக்கியன, ஏனைய பொருள்களின் தோற்றங்களுக்கு முன்னே தோன்றியன. சுடுகாட்டில் எரிக்கப்பட்டவருடைய சாம்பலில் தோய்வனவாம்.
திருச்சிற்றம்பலம் |
||||||||
by C.Malarvizhi on 21 Jul 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|