LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

நான்காம் திருமுறை-74

 

4.074.நெஞ்சம்ஈசனைநினைந்த 
திருநேரிசை 
திருச்சிற்றம்பலம் 
716 முத்தினை மணியைப் பொன்னை
முழுமுதற் பவள மேய்க்கும்
கொத்தினை வயிர மாலைக்
கொழுந்தினை யமரர் சூடும்
வித்தினை வேத வேள்விக்
கேள்வியை விளங்க நின்ற
அத்தனை நினைந்த நெஞ்ச
மழகிதா நினைந்த வாறே. 
4.074.1
முத்து, மணி, பொன், சிறந்த பவளக்கொத்து, வைரத்தின் இயல்பை உடைய ஒளி எனும் இவற்றை ஒத்தவனாய், தேவர்கள் வழிபடும் வித்து, வேதவேள்வி, வேதம் எனும் இவையாக இருக்கும் தலைவனை, நினைத்த மனம் மிக அழகியதாக நினைத்தது உள்ளவாறு என்னே!
717 முன்பனை யுலகுக் கெல்லா
மூர்த்தியை முனிக ளேத்தும்
இன்பனை யிலங்கு சோதி
யிறைவனை யரிவை யஞ்ச
வன்பனைத் தடக்கை வேள்விக்
களிற்றினை யுரித்த வெங்கள்
அன்பனை நினைந்த நெஞ்ச
மழகிதா நினைந்த வாறே.
4.074.2
வலியனாய், உலகுக்கெல்லாம் தலைவனாய், முனிவர்கள் துதிக்கும் இன்பனாய், ஞான ஒளி வீசும் தலைவனாய் உள்ள, பார்வதி அஞ்சுமாறு தாருகவன முனிவர் யாகத்தில் புறப்பட்ட வலிய பனைபோன்ற துதிக்கையை உடைய யானைத்தோலை உரித்த எங்கள் அன்பனை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்தவாறே.
718 கரும்பினுமினியான் றன்னைக்
காய்கதிர்ச் சோதி யானை
இருங்கட லமுதந் தன்னை
யிறப்பொடு பிறப்பி லானைப்
பெரும்பொருட் கிளவி யானைப்
பெருந்தவ முனிவ ரேத்தும்
அரும்பொனை நினைந்த நெஞ்ச
மழகிதாநினைந்த வாறே.
4.074.3
கரும்பைவிட மிக்கசுவை உடையவனாய், சூரியன் போன்ற ஒளி உடையவனாய், கடலில் தோன்றிய அமுதம் போல்பவனாய், பிறப்பு, இறப்பு இல்லாதவனாய், மகா வாக்கியப் பொருளாய் இருப்பவனாய் உள்ள, பெரிய தவத்தை உடைய முனிவர்கள் துதிக்கும் அரிய பொன் போன்ற பெருமானை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்தவாறே.
719 செருத்தனை யருத்தி செய்து
செஞ்சரஞ் செலுத்தி யூர்மேல்
கருத்தனைக் கனக மேனிக்
கடவுளைக் கருதும் வானோர்க்
கொருத்தனை யொருத்தி பாகம்
பொருத்தியு மருத்தி தீரா
நிருத்தனை நினைந்த நெஞ்ச
நேர்பட நினைந்த வாறே.
4.074.4
போரிடுவதில் விருப்பம் கொண்டு, நேராக அம்பைச் செலுத்தி முப்புரத்தைக் குறிக்கோளாகக் கொண்டு அழித்தவனாய், பொன்மேனி அம்மானாய், தன்னைத் தியானிக்கும் தேவர் களுக்கு ஒப்பற்ற தலைவனாய், பார்வதிபாகமாகியும் அவளிடத்து ஆசை நீங்காத கூத்தனாய் உள்ள பெருமானை நினைந்த நெஞ்சம் நேரிதாகவே நினைந்தவாறு என்னே!
720 கூற்றினை யுதைத்த பாதக்
குழகனை மழலை வெள்ளே
றேற்றனை யிமையோ ரேத்த
விருஞ்சடைக் கற்றை தன்மேல்
ஆற்றனை யடிய ரேத்து
மமுதனை யமுத யோக
நீற்றனை நினைந்த நெஞ்ச
நேர்பட நினைந்த வாறே.
4.074.5
கூற்றுவனை உதைத்த பாதங்களை உடைய இளையவனாய், இளைய வெண்ணிறக் காளையை ஊர்பவனாய், தேவர்கள் போற்றப் பெரிய சடைக் கற்றையில் கங்கையைச் சூடியவனாய், அடியார்கள் போற்றும் அமுதமாய், சிவாமுதம் நல்கும் திருநீற்று மேனியனாய் உள்ள பெருமானை நினைந்த நெஞ்சம் நேர்பட நினைந்தவாறே.
721 கருப்பனைத் தடக்கை வேழக்
களிற்றினை யுரித்த கண்டன்
விருப்பனை விளங்கு சோதி
வியன்கயி லாய மென்னும்
பொருப்பனைப் பொருப்பன் மங்கை
பங்கனை யங்கை யேற்ற
நெருப்பனை நினைந்த நெஞ்ச
நேர்பட நினைந்த வாறே.
4.074.6
கரிய, பனைபோன்ற துதிக்கையை உடைய யானைத் தோலை உரித்தவனாய், நீலகண்டனாய், எல்லா ஆன்மாக்களையும் விரும்புபவனாய், சோதி வடிவினனாய், கயிலை மலையினனாய், பார்வதி பாகனாய், உள்ளங்கையில் நெருப்பை ஏற்பவனாய் உள்ள பெருமானை நினைந்த நெஞ்சம் நேர்பட நினைந்தவாறே.
722 நீதியா னினைப்பு ளானை
நினைப்பவர் மனத்து ளானைச்
சாதியைச் சங்கவெண் ணீற்
றண்ணலை விண்ணில் வானோர்
சோதியைத் துளக்க மில்லா
விளக்கினை யளக்க லாகா
ஆதியை நினைந்த நெஞ்ச
மழகிதா நினைந்த வாறே. 
4.074.7
விதிப்படி தியானிக்கப்படுபவனாய், சாதி மாணிக்கமாய், சங்கைப் போன்ற வெண்ணீற்றை அணிந்த தலைவனாய், வானத்திலுள்ள தேவர்களுக்குச் சோதியாய், தூண்டா விளக்காய் உள்ள, ஒருவராலும் அளக்கமுடியாத ஆதியை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்தவாறே.
723 பழகனை யுலகுக் கெல்லாம்
பருப்பனைப் பொருப்போ டொக்கும்
மழகளி யானையின் றோன்
மலைமக ணடுங்கப் போர்த்த
குழகனைக் குழவித் திங்கள்
குளிர்சடை மருவ வைத்த
அழகனை நினைந்த நெஞ்ச
மழகிதா நினைந்த வாறே.
4.074.8
உலகத்தாருக்கெல்லாம் பழகுதற்கு இனியவனாய், பெருவடிவுடையவனாய், மலையை ஒத்த இளைய மதயானையின் தோலைப் பார்வதி நடுங்குமாறு போர்த்த இளையனாய், பிறையைக் குளிர்ந்த சடையிலே சூடிய அழகனாய் உள்ள பெருமானை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்தவாறே.
724 விண்ணிடை மின்னொப் பானை
மெய்ப்பெரும் பொருளொய் பானைக்
கண்ணிடை மணியொப் பானைக்
கடுவிருட் சுடரொப் பானை
எண்ணிடை யெண்ண லாகா
விருவரை வெருவ நீண்ட
அண்ணலை நினைந்த நெஞ்ச
மழகிதா நினைந்த வாறே.
4.074.9
வானில் தோன்றும் மின்னலை ஒப்பவனாய், தனக்குத் தானே ஒப்பாகும் பெரிய மெய்ப்பொருளாய், கண்ணில் மணி போலவும், செறிந்த இருளில் சுடர்போலவும் ஒளிதருபவனாய், திருமாலும், பிரமனும் தன் மனத்தில் எண்ணமுடியாத வகையில் அவர்கள் அஞ்சுமாறு நீண்ட தீத்தம்பமாகிய தலைமையுடைய பெருமானை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்தவாறே.
725 உரவனைத் திரண்ட திண்டோ
ளரக்கனை யூன்றி மூன்றூர்
நிரவனை நிமிர்ந்த சோதி
நீண்முடி யமரர் தங்கள்
குரவனைக் குளிர்வெண் டிங்கட்
சடையிடைப் பொதியுமை வாய்
அரவனை நினைந்த நெஞ்ச
மழகிதா நினைந்த வாறே.
4.074.10
ஞான வடிவினனாய், திரண்ட வலிய தோள்களை உடைய இராவணனை நசுக்கியவனாய், மும்மதில்களையும் அழித்தவனாய், மிக்க ஒளியும், நீண்ட கிரீடமும் உடைய தேவர்களுக்குக் குருவாய், குளிர்ந்த பிறையைச் சடையில் கொண்டவனாய் உள்ள, ஐந்தலைப் பாம்பை ஆட்டும் பெருமானை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்தவாறே.
திருச்சிற்றம்பலம்

 

4.074.நெஞ்சம்ஈசனைநினைந்த 

திருநேரிசை 

திருச்சிற்றம்பலம் 

 

716 முத்தினை மணியைப் பொன்னை

முழுமுதற் பவள மேய்க்கும்

கொத்தினை வயிர மாலைக்

கொழுந்தினை யமரர் சூடும்

வித்தினை வேத வேள்விக்

கேள்வியை விளங்க நின்ற

அத்தனை நினைந்த நெஞ்ச

மழகிதா நினைந்த வாறே. 

4.074.1

 

  முத்து, மணி, பொன், சிறந்த பவளக்கொத்து, வைரத்தின் இயல்பை உடைய ஒளி எனும் இவற்றை ஒத்தவனாய், தேவர்கள் வழிபடும் வித்து, வேதவேள்வி, வேதம் எனும் இவையாக இருக்கும் தலைவனை, நினைத்த மனம் மிக அழகியதாக நினைத்தது உள்ளவாறு என்னே!

 

 

717 முன்பனை யுலகுக் கெல்லா

மூர்த்தியை முனிக ளேத்தும்

இன்பனை யிலங்கு சோதி

யிறைவனை யரிவை யஞ்ச

வன்பனைத் தடக்கை வேள்விக்

களிற்றினை யுரித்த வெங்கள்

அன்பனை நினைந்த நெஞ்ச

மழகிதா நினைந்த வாறே.

4.074.2

 

  வலியனாய், உலகுக்கெல்லாம் தலைவனாய், முனிவர்கள் துதிக்கும் இன்பனாய், ஞான ஒளி வீசும் தலைவனாய் உள்ள, பார்வதி அஞ்சுமாறு தாருகவன முனிவர் யாகத்தில் புறப்பட்ட வலிய பனைபோன்ற துதிக்கையை உடைய யானைத்தோலை உரித்த எங்கள் அன்பனை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்தவாறே.

 

 

718 கரும்பினுமினியான் றன்னைக்

காய்கதிர்ச் சோதி யானை

இருங்கட லமுதந் தன்னை

யிறப்பொடு பிறப்பி லானைப்

பெரும்பொருட் கிளவி யானைப்

பெருந்தவ முனிவ ரேத்தும்

அரும்பொனை நினைந்த நெஞ்ச

மழகிதாநினைந்த வாறே.

4.074.3

 

  கரும்பைவிட மிக்கசுவை உடையவனாய், சூரியன் போன்ற ஒளி உடையவனாய், கடலில் தோன்றிய அமுதம் போல்பவனாய், பிறப்பு, இறப்பு இல்லாதவனாய், மகா வாக்கியப் பொருளாய் இருப்பவனாய் உள்ள, பெரிய தவத்தை உடைய முனிவர்கள் துதிக்கும் அரிய பொன் போன்ற பெருமானை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்தவாறே.

 

 

719 செருத்தனை யருத்தி செய்து

செஞ்சரஞ் செலுத்தி யூர்மேல்

கருத்தனைக் கனக மேனிக்

கடவுளைக் கருதும் வானோர்க்

கொருத்தனை யொருத்தி பாகம்

பொருத்தியு மருத்தி தீரா

நிருத்தனை நினைந்த நெஞ்ச

நேர்பட நினைந்த வாறே.

4.074.4

 

  போரிடுவதில் விருப்பம் கொண்டு, நேராக அம்பைச் செலுத்தி முப்புரத்தைக் குறிக்கோளாகக் கொண்டு அழித்தவனாய், பொன்மேனி அம்மானாய், தன்னைத் தியானிக்கும் தேவர் களுக்கு ஒப்பற்ற தலைவனாய், பார்வதிபாகமாகியும் அவளிடத்து ஆசை நீங்காத கூத்தனாய் உள்ள பெருமானை நினைந்த நெஞ்சம் நேரிதாகவே நினைந்தவாறு என்னே!

 

 

720 கூற்றினை யுதைத்த பாதக்

குழகனை மழலை வெள்ளே

றேற்றனை யிமையோ ரேத்த

விருஞ்சடைக் கற்றை தன்மேல்

ஆற்றனை யடிய ரேத்து

மமுதனை யமுத யோக

நீற்றனை நினைந்த நெஞ்ச

நேர்பட நினைந்த வாறே.

4.074.5

 

  கூற்றுவனை உதைத்த பாதங்களை உடைய இளையவனாய், இளைய வெண்ணிறக் காளையை ஊர்பவனாய், தேவர்கள் போற்றப் பெரிய சடைக் கற்றையில் கங்கையைச் சூடியவனாய், அடியார்கள் போற்றும் அமுதமாய், சிவாமுதம் நல்கும் திருநீற்று மேனியனாய் உள்ள பெருமானை நினைந்த நெஞ்சம் நேர்பட நினைந்தவாறே.

 

 

721 கருப்பனைத் தடக்கை வேழக்

களிற்றினை யுரித்த கண்டன்

விருப்பனை விளங்கு சோதி

வியன்கயி லாய மென்னும்

பொருப்பனைப் பொருப்பன் மங்கை

பங்கனை யங்கை யேற்ற

நெருப்பனை நினைந்த நெஞ்ச

நேர்பட நினைந்த வாறே.

4.074.6

 

  கரிய, பனைபோன்ற துதிக்கையை உடைய யானைத் தோலை உரித்தவனாய், நீலகண்டனாய், எல்லா ஆன்மாக்களையும் விரும்புபவனாய், சோதி வடிவினனாய், கயிலை மலையினனாய், பார்வதி பாகனாய், உள்ளங்கையில் நெருப்பை ஏற்பவனாய் உள்ள பெருமானை நினைந்த நெஞ்சம் நேர்பட நினைந்தவாறே.

 

 

722 நீதியா னினைப்பு ளானை

நினைப்பவர் மனத்து ளானைச்

சாதியைச் சங்கவெண் ணீற்

றண்ணலை விண்ணில் வானோர்

சோதியைத் துளக்க மில்லா

விளக்கினை யளக்க லாகா

ஆதியை நினைந்த நெஞ்ச

மழகிதா நினைந்த வாறே. 

4.074.7

 

  விதிப்படி தியானிக்கப்படுபவனாய், சாதி மாணிக்கமாய், சங்கைப் போன்ற வெண்ணீற்றை அணிந்த தலைவனாய், வானத்திலுள்ள தேவர்களுக்குச் சோதியாய், தூண்டா விளக்காய் உள்ள, ஒருவராலும் அளக்கமுடியாத ஆதியை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்தவாறே.

 

 

723 பழகனை யுலகுக் கெல்லாம்

பருப்பனைப் பொருப்போ டொக்கும்

மழகளி யானையின் றோன்

மலைமக ணடுங்கப் போர்த்த

குழகனைக் குழவித் திங்கள்

குளிர்சடை மருவ வைத்த

அழகனை நினைந்த நெஞ்ச

மழகிதா நினைந்த வாறே.

4.074.8

 

  உலகத்தாருக்கெல்லாம் பழகுதற்கு இனியவனாய், பெருவடிவுடையவனாய், மலையை ஒத்த இளைய மதயானையின் தோலைப் பார்வதி நடுங்குமாறு போர்த்த இளையனாய், பிறையைக் குளிர்ந்த சடையிலே சூடிய அழகனாய் உள்ள பெருமானை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்தவாறே.

 

 

724 விண்ணிடை மின்னொப் பானை

மெய்ப்பெரும் பொருளொய் பானைக்

கண்ணிடை மணியொப் பானைக்

கடுவிருட் சுடரொப் பானை

எண்ணிடை யெண்ண லாகா

விருவரை வெருவ நீண்ட

அண்ணலை நினைந்த நெஞ்ச

மழகிதா நினைந்த வாறே.

4.074.9

 

  வானில் தோன்றும் மின்னலை ஒப்பவனாய், தனக்குத் தானே ஒப்பாகும் பெரிய மெய்ப்பொருளாய், கண்ணில் மணி போலவும், செறிந்த இருளில் சுடர்போலவும் ஒளிதருபவனாய், திருமாலும், பிரமனும் தன் மனத்தில் எண்ணமுடியாத வகையில் அவர்கள் அஞ்சுமாறு நீண்ட தீத்தம்பமாகிய தலைமையுடைய பெருமானை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்தவாறே.

 

 

725 உரவனைத் திரண்ட திண்டோ

ளரக்கனை யூன்றி மூன்றூர்

நிரவனை நிமிர்ந்த சோதி

நீண்முடி யமரர் தங்கள்

குரவனைக் குளிர்வெண் டிங்கட்

சடையிடைப் பொதியுமை வாய்

அரவனை நினைந்த நெஞ்ச

மழகிதா நினைந்த வாறே.

4.074.10

 

  ஞான வடிவினனாய், திரண்ட வலிய தோள்களை உடைய இராவணனை நசுக்கியவனாய், மும்மதில்களையும் அழித்தவனாய், மிக்க ஒளியும், நீண்ட கிரீடமும் உடைய தேவர்களுக்குக் குருவாய், குளிர்ந்த பிறையைச் சடையில் கொண்டவனாய் உள்ள, ஐந்தலைப் பாம்பை ஆட்டும் பெருமானை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்தவாறே.

 

 

திருச்சிற்றம்பலம்

by C.Malarvizhi   on 19 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.