|
||||||||
நான்காம் திருமுறை-74 |
||||||||
4.074.நெஞ்சம்ஈசனைநினைந்த
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
716 முத்தினை மணியைப் பொன்னை
முழுமுதற் பவள மேய்க்கும்
கொத்தினை வயிர மாலைக்
கொழுந்தினை யமரர் சூடும்
வித்தினை வேத வேள்விக்
கேள்வியை விளங்க நின்ற
அத்தனை நினைந்த நெஞ்ச
மழகிதா நினைந்த வாறே.
4.074.1
முத்து, மணி, பொன், சிறந்த பவளக்கொத்து, வைரத்தின் இயல்பை உடைய ஒளி எனும் இவற்றை ஒத்தவனாய், தேவர்கள் வழிபடும் வித்து, வேதவேள்வி, வேதம் எனும் இவையாக இருக்கும் தலைவனை, நினைத்த மனம் மிக அழகியதாக நினைத்தது உள்ளவாறு என்னே!
717 முன்பனை யுலகுக் கெல்லா
மூர்த்தியை முனிக ளேத்தும்
இன்பனை யிலங்கு சோதி
யிறைவனை யரிவை யஞ்ச
வன்பனைத் தடக்கை வேள்விக்
களிற்றினை யுரித்த வெங்கள்
அன்பனை நினைந்த நெஞ்ச
மழகிதா நினைந்த வாறே.
4.074.2
வலியனாய், உலகுக்கெல்லாம் தலைவனாய், முனிவர்கள் துதிக்கும் இன்பனாய், ஞான ஒளி வீசும் தலைவனாய் உள்ள, பார்வதி அஞ்சுமாறு தாருகவன முனிவர் யாகத்தில் புறப்பட்ட வலிய பனைபோன்ற துதிக்கையை உடைய யானைத்தோலை உரித்த எங்கள் அன்பனை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்தவாறே.
718 கரும்பினுமினியான் றன்னைக்
காய்கதிர்ச் சோதி யானை
இருங்கட லமுதந் தன்னை
யிறப்பொடு பிறப்பி லானைப்
பெரும்பொருட் கிளவி யானைப்
பெருந்தவ முனிவ ரேத்தும்
அரும்பொனை நினைந்த நெஞ்ச
மழகிதாநினைந்த வாறே.
4.074.3
கரும்பைவிட மிக்கசுவை உடையவனாய், சூரியன் போன்ற ஒளி உடையவனாய், கடலில் தோன்றிய அமுதம் போல்பவனாய், பிறப்பு, இறப்பு இல்லாதவனாய், மகா வாக்கியப் பொருளாய் இருப்பவனாய் உள்ள, பெரிய தவத்தை உடைய முனிவர்கள் துதிக்கும் அரிய பொன் போன்ற பெருமானை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்தவாறே.
719 செருத்தனை யருத்தி செய்து
செஞ்சரஞ் செலுத்தி யூர்மேல்
கருத்தனைக் கனக மேனிக்
கடவுளைக் கருதும் வானோர்க்
கொருத்தனை யொருத்தி பாகம்
பொருத்தியு மருத்தி தீரா
நிருத்தனை நினைந்த நெஞ்ச
நேர்பட நினைந்த வாறே.
4.074.4
போரிடுவதில் விருப்பம் கொண்டு, நேராக அம்பைச் செலுத்தி முப்புரத்தைக் குறிக்கோளாகக் கொண்டு அழித்தவனாய், பொன்மேனி அம்மானாய், தன்னைத் தியானிக்கும் தேவர் களுக்கு ஒப்பற்ற தலைவனாய், பார்வதிபாகமாகியும் அவளிடத்து ஆசை நீங்காத கூத்தனாய் உள்ள பெருமானை நினைந்த நெஞ்சம் நேரிதாகவே நினைந்தவாறு என்னே!
720 கூற்றினை யுதைத்த பாதக்
குழகனை மழலை வெள்ளே
றேற்றனை யிமையோ ரேத்த
விருஞ்சடைக் கற்றை தன்மேல்
ஆற்றனை யடிய ரேத்து
மமுதனை யமுத யோக
நீற்றனை நினைந்த நெஞ்ச
நேர்பட நினைந்த வாறே.
4.074.5
கூற்றுவனை உதைத்த பாதங்களை உடைய இளையவனாய், இளைய வெண்ணிறக் காளையை ஊர்பவனாய், தேவர்கள் போற்றப் பெரிய சடைக் கற்றையில் கங்கையைச் சூடியவனாய், அடியார்கள் போற்றும் அமுதமாய், சிவாமுதம் நல்கும் திருநீற்று மேனியனாய் உள்ள பெருமானை நினைந்த நெஞ்சம் நேர்பட நினைந்தவாறே.
721 கருப்பனைத் தடக்கை வேழக்
களிற்றினை யுரித்த கண்டன்
விருப்பனை விளங்கு சோதி
வியன்கயி லாய மென்னும்
பொருப்பனைப் பொருப்பன் மங்கை
பங்கனை யங்கை யேற்ற
நெருப்பனை நினைந்த நெஞ்ச
நேர்பட நினைந்த வாறே.
4.074.6
கரிய, பனைபோன்ற துதிக்கையை உடைய யானைத் தோலை உரித்தவனாய், நீலகண்டனாய், எல்லா ஆன்மாக்களையும் விரும்புபவனாய், சோதி வடிவினனாய், கயிலை மலையினனாய், பார்வதி பாகனாய், உள்ளங்கையில் நெருப்பை ஏற்பவனாய் உள்ள பெருமானை நினைந்த நெஞ்சம் நேர்பட நினைந்தவாறே.
722 நீதியா னினைப்பு ளானை
நினைப்பவர் மனத்து ளானைச்
சாதியைச் சங்கவெண் ணீற்
றண்ணலை விண்ணில் வானோர்
சோதியைத் துளக்க மில்லா
விளக்கினை யளக்க லாகா
ஆதியை நினைந்த நெஞ்ச
மழகிதா நினைந்த வாறே.
4.074.7
விதிப்படி தியானிக்கப்படுபவனாய், சாதி மாணிக்கமாய், சங்கைப் போன்ற வெண்ணீற்றை அணிந்த தலைவனாய், வானத்திலுள்ள தேவர்களுக்குச் சோதியாய், தூண்டா விளக்காய் உள்ள, ஒருவராலும் அளக்கமுடியாத ஆதியை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்தவாறே.
723 பழகனை யுலகுக் கெல்லாம்
பருப்பனைப் பொருப்போ டொக்கும்
மழகளி யானையின் றோன்
மலைமக ணடுங்கப் போர்த்த
குழகனைக் குழவித் திங்கள்
குளிர்சடை மருவ வைத்த
அழகனை நினைந்த நெஞ்ச
மழகிதா நினைந்த வாறே.
4.074.8
உலகத்தாருக்கெல்லாம் பழகுதற்கு இனியவனாய், பெருவடிவுடையவனாய், மலையை ஒத்த இளைய மதயானையின் தோலைப் பார்வதி நடுங்குமாறு போர்த்த இளையனாய், பிறையைக் குளிர்ந்த சடையிலே சூடிய அழகனாய் உள்ள பெருமானை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்தவாறே.
724 விண்ணிடை மின்னொப் பானை
மெய்ப்பெரும் பொருளொய் பானைக்
கண்ணிடை மணியொப் பானைக்
கடுவிருட் சுடரொப் பானை
எண்ணிடை யெண்ண லாகா
விருவரை வெருவ நீண்ட
அண்ணலை நினைந்த நெஞ்ச
மழகிதா நினைந்த வாறே.
4.074.9
வானில் தோன்றும் மின்னலை ஒப்பவனாய், தனக்குத் தானே ஒப்பாகும் பெரிய மெய்ப்பொருளாய், கண்ணில் மணி போலவும், செறிந்த இருளில் சுடர்போலவும் ஒளிதருபவனாய், திருமாலும், பிரமனும் தன் மனத்தில் எண்ணமுடியாத வகையில் அவர்கள் அஞ்சுமாறு நீண்ட தீத்தம்பமாகிய தலைமையுடைய பெருமானை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்தவாறே.
725 உரவனைத் திரண்ட திண்டோ
ளரக்கனை யூன்றி மூன்றூர்
நிரவனை நிமிர்ந்த சோதி
நீண்முடி யமரர் தங்கள்
குரவனைக் குளிர்வெண் டிங்கட்
சடையிடைப் பொதியுமை வாய்
அரவனை நினைந்த நெஞ்ச
மழகிதா நினைந்த வாறே.
4.074.10
ஞான வடிவினனாய், திரண்ட வலிய தோள்களை உடைய இராவணனை நசுக்கியவனாய், மும்மதில்களையும் அழித்தவனாய், மிக்க ஒளியும், நீண்ட கிரீடமும் உடைய தேவர்களுக்குக் குருவாய், குளிர்ந்த பிறையைச் சடையில் கொண்டவனாய் உள்ள, ஐந்தலைப் பாம்பை ஆட்டும் பெருமானை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்தவாறே.
திருச்சிற்றம்பலம்
4.074.நெஞ்சம்ஈசனைநினைந்த திருநேரிசை திருச்சிற்றம்பலம்
716 முத்தினை மணியைப் பொன்னை முழுமுதற் பவள மேய்க்கும் கொத்தினை வயிர மாலைக் கொழுந்தினை யமரர் சூடும் வித்தினை வேத வேள்விக் கேள்வியை விளங்க நின்ற அத்தனை நினைந்த நெஞ்ச மழகிதா நினைந்த வாறே. 4.074.1
முத்து, மணி, பொன், சிறந்த பவளக்கொத்து, வைரத்தின் இயல்பை உடைய ஒளி எனும் இவற்றை ஒத்தவனாய், தேவர்கள் வழிபடும் வித்து, வேதவேள்வி, வேதம் எனும் இவையாக இருக்கும் தலைவனை, நினைத்த மனம் மிக அழகியதாக நினைத்தது உள்ளவாறு என்னே!
717 முன்பனை யுலகுக் கெல்லா மூர்த்தியை முனிக ளேத்தும் இன்பனை யிலங்கு சோதி யிறைவனை யரிவை யஞ்ச வன்பனைத் தடக்கை வேள்விக் களிற்றினை யுரித்த வெங்கள் அன்பனை நினைந்த நெஞ்ச மழகிதா நினைந்த வாறே. 4.074.2
வலியனாய், உலகுக்கெல்லாம் தலைவனாய், முனிவர்கள் துதிக்கும் இன்பனாய், ஞான ஒளி வீசும் தலைவனாய் உள்ள, பார்வதி அஞ்சுமாறு தாருகவன முனிவர் யாகத்தில் புறப்பட்ட வலிய பனைபோன்ற துதிக்கையை உடைய யானைத்தோலை உரித்த எங்கள் அன்பனை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்தவாறே.
718 கரும்பினுமினியான் றன்னைக் காய்கதிர்ச் சோதி யானை இருங்கட லமுதந் தன்னை யிறப்பொடு பிறப்பி லானைப் பெரும்பொருட் கிளவி யானைப் பெருந்தவ முனிவ ரேத்தும் அரும்பொனை நினைந்த நெஞ்ச மழகிதாநினைந்த வாறே. 4.074.3
கரும்பைவிட மிக்கசுவை உடையவனாய், சூரியன் போன்ற ஒளி உடையவனாய், கடலில் தோன்றிய அமுதம் போல்பவனாய், பிறப்பு, இறப்பு இல்லாதவனாய், மகா வாக்கியப் பொருளாய் இருப்பவனாய் உள்ள, பெரிய தவத்தை உடைய முனிவர்கள் துதிக்கும் அரிய பொன் போன்ற பெருமானை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்தவாறே.
719 செருத்தனை யருத்தி செய்து செஞ்சரஞ் செலுத்தி யூர்மேல் கருத்தனைக் கனக மேனிக் கடவுளைக் கருதும் வானோர்க் கொருத்தனை யொருத்தி பாகம் பொருத்தியு மருத்தி தீரா நிருத்தனை நினைந்த நெஞ்ச நேர்பட நினைந்த வாறே. 4.074.4
போரிடுவதில் விருப்பம் கொண்டு, நேராக அம்பைச் செலுத்தி முப்புரத்தைக் குறிக்கோளாகக் கொண்டு அழித்தவனாய், பொன்மேனி அம்மானாய், தன்னைத் தியானிக்கும் தேவர் களுக்கு ஒப்பற்ற தலைவனாய், பார்வதிபாகமாகியும் அவளிடத்து ஆசை நீங்காத கூத்தனாய் உள்ள பெருமானை நினைந்த நெஞ்சம் நேரிதாகவே நினைந்தவாறு என்னே!
720 கூற்றினை யுதைத்த பாதக் குழகனை மழலை வெள்ளே றேற்றனை யிமையோ ரேத்த விருஞ்சடைக் கற்றை தன்மேல் ஆற்றனை யடிய ரேத்து மமுதனை யமுத யோக நீற்றனை நினைந்த நெஞ்ச நேர்பட நினைந்த வாறே. 4.074.5
கூற்றுவனை உதைத்த பாதங்களை உடைய இளையவனாய், இளைய வெண்ணிறக் காளையை ஊர்பவனாய், தேவர்கள் போற்றப் பெரிய சடைக் கற்றையில் கங்கையைச் சூடியவனாய், அடியார்கள் போற்றும் அமுதமாய், சிவாமுதம் நல்கும் திருநீற்று மேனியனாய் உள்ள பெருமானை நினைந்த நெஞ்சம் நேர்பட நினைந்தவாறே.
721 கருப்பனைத் தடக்கை வேழக் களிற்றினை யுரித்த கண்டன் விருப்பனை விளங்கு சோதி வியன்கயி லாய மென்னும் பொருப்பனைப் பொருப்பன் மங்கை பங்கனை யங்கை யேற்ற நெருப்பனை நினைந்த நெஞ்ச நேர்பட நினைந்த வாறே. 4.074.6
கரிய, பனைபோன்ற துதிக்கையை உடைய யானைத் தோலை உரித்தவனாய், நீலகண்டனாய், எல்லா ஆன்மாக்களையும் விரும்புபவனாய், சோதி வடிவினனாய், கயிலை மலையினனாய், பார்வதி பாகனாய், உள்ளங்கையில் நெருப்பை ஏற்பவனாய் உள்ள பெருமானை நினைந்த நெஞ்சம் நேர்பட நினைந்தவாறே.
722 நீதியா னினைப்பு ளானை நினைப்பவர் மனத்து ளானைச் சாதியைச் சங்கவெண் ணீற் றண்ணலை விண்ணில் வானோர் சோதியைத் துளக்க மில்லா விளக்கினை யளக்க லாகா ஆதியை நினைந்த நெஞ்ச மழகிதா நினைந்த வாறே. 4.074.7
விதிப்படி தியானிக்கப்படுபவனாய், சாதி மாணிக்கமாய், சங்கைப் போன்ற வெண்ணீற்றை அணிந்த தலைவனாய், வானத்திலுள்ள தேவர்களுக்குச் சோதியாய், தூண்டா விளக்காய் உள்ள, ஒருவராலும் அளக்கமுடியாத ஆதியை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்தவாறே.
723 பழகனை யுலகுக் கெல்லாம் பருப்பனைப் பொருப்போ டொக்கும் மழகளி யானையின் றோன் மலைமக ணடுங்கப் போர்த்த குழகனைக் குழவித் திங்கள் குளிர்சடை மருவ வைத்த அழகனை நினைந்த நெஞ்ச மழகிதா நினைந்த வாறே. 4.074.8
உலகத்தாருக்கெல்லாம் பழகுதற்கு இனியவனாய், பெருவடிவுடையவனாய், மலையை ஒத்த இளைய மதயானையின் தோலைப் பார்வதி நடுங்குமாறு போர்த்த இளையனாய், பிறையைக் குளிர்ந்த சடையிலே சூடிய அழகனாய் உள்ள பெருமானை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்தவாறே.
724 விண்ணிடை மின்னொப் பானை மெய்ப்பெரும் பொருளொய் பானைக் கண்ணிடை மணியொப் பானைக் கடுவிருட் சுடரொப் பானை எண்ணிடை யெண்ண லாகா விருவரை வெருவ நீண்ட அண்ணலை நினைந்த நெஞ்ச மழகிதா நினைந்த வாறே. 4.074.9
வானில் தோன்றும் மின்னலை ஒப்பவனாய், தனக்குத் தானே ஒப்பாகும் பெரிய மெய்ப்பொருளாய், கண்ணில் மணி போலவும், செறிந்த இருளில் சுடர்போலவும் ஒளிதருபவனாய், திருமாலும், பிரமனும் தன் மனத்தில் எண்ணமுடியாத வகையில் அவர்கள் அஞ்சுமாறு நீண்ட தீத்தம்பமாகிய தலைமையுடைய பெருமானை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்தவாறே.
725 உரவனைத் திரண்ட திண்டோ ளரக்கனை யூன்றி மூன்றூர் நிரவனை நிமிர்ந்த சோதி நீண்முடி யமரர் தங்கள் குரவனைக் குளிர்வெண் டிங்கட் சடையிடைப் பொதியுமை வாய் அரவனை நினைந்த நெஞ்ச மழகிதா நினைந்த வாறே. 4.074.10
ஞான வடிவினனாய், திரண்ட வலிய தோள்களை உடைய இராவணனை நசுக்கியவனாய், மும்மதில்களையும் அழித்தவனாய், மிக்க ஒளியும், நீண்ட கிரீடமும் உடைய தேவர்களுக்குக் குருவாய், குளிர்ந்த பிறையைச் சடையில் கொண்டவனாய் உள்ள, ஐந்தலைப் பாம்பை ஆட்டும் பெருமானை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்தவாறே.
திருச்சிற்றம்பலம் |
||||||||
by C.Malarvizhi on 19 Jul 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|