|
||||||||
ஐந்தாம் திருமுறை-82 |
||||||||
5.082.திருவான்மியூர்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மருந்தீசுவரர்.
தேவியார் - சுந்தரமாது (அ) சொக்கநாயகி.
1880 விண்ட மாமலர் கொண்டு விரைந்துநீர்
அண்டர் நாயகன் தன்னடி சூழ்மின்கள்
பண்டு நீர்செய்த பாவம் பறைந்திடும்
வண்டு சேர்பொழில் வான்மியூ ரீசனே. 5.082.1
விரிந்தமாமலர்களைக் கொண்டு விரைந்து நீர், தேவர்நாயகனும் , வண்டுசேர் பொழில்களை உடைய வான்மியூர் ஈசனுமாகிய இறைவன் சேவடியைச் சூழ்வீர்களாக; முன்பு செய்த பாவங்கள் கெடும்.
1881 பொருளுஞ் சுற்றமும் பொய்ம்மையும் விட்டுநீர்
மருளும் மாந்தரை மாற்றி மயக்கறுத்
தருளு மாவல்ல ஆதியா யென்றலும்
மருள றுத்திடும் வான்மியூ ரீசனே. 5.082.2
பொருளும், சுற்றத்தாருமாகிய பொய்ம்மையை விட்டு நீர் மருளுதற்குரிய மாந்தரை மாற்றி மயக்கம் நீக்கி அருளுமாறுவல்ல ஆதியாய்! என்று கூறியதும் வான்மியூர் ஈசன் மயக்கம் நீக்குவன்.
1882 மந்த மாகிய சிந்தை மயக்கறுத்
தந்த மில்குணத் தானை யடைந்துநின்
றெந்தை யீசனென் றேத்திட வல்லிரேல்
வந்து நின்றிடும் வான்மியூ ரீசனே. 5.082.3
மந்தமாகிய சிந்தையின் மயக்கத்தை அறுத்து முடிவற்ற குணத்தை உடையவனாகிய பெருமானை அடைந்துநின்று எந்தையே! ஈசனே! என்று வழிபடவல்லமை உடையீரேயாயின் வான்மியூர் ஈசன் வந்து நின்றிடும்.
1883 உள்ள முள்கலந் தேத்தவல் லார்க்கலால்
கள்ள முள்ள வழிக்கசி வானலன்
வெள்ள மும்மர வும்விர வுஞ்சடை
வள்ள லாகிய வான்மியூ ரீசனே. 5.082.4
கங்கையும் பாம்பும் கலக்கும் சடையோடு கூடிய வள்ளலாகிய வான்மியூர் ஈசன், உள்ளம் கலந்து ஏத்த வல்லவர்க்கு அல்லால் கள்ளம் உள்ளவழிக் கசிவான் அல்லன்.
1884 படங்கொள் பாம்பரைப் பால்மதி சூடியை
வடங்கொள் மென்முலை மாதொரு கூறனைத்
தொடர்ந்து நின்று தொழுதெழு வார்வினை
மடங்க நின்றிடும் வான்மியூ ரீசனே. 5.082.5
படம் கொண்ட பாம்பு உடையவனும் , பால் மதி சூடியவனும் , மாலைகள் கொண்ட மென்முலைமாதாகிய உமையொரு கூறனுமான வான்மியூர் ஈசன், தொடர்ந்து நின்று தொழுது எழுவார் வினைகள் மடங்க முன்னே வந்து நின்று அருளுவான்.
1885 நெஞ்சி லைவர் நினைக்க நினைக்குறார்
பஞ்சின் மெல்லடி யாளுமை பங்கவென்று
அஞ்சி நாண்மலர் தூவி யழுதிரேல்
வஞ்சந் தீர்த்திடும் வான்மியூ ரீசனே. 5.082.6
"நெஞ்சில் நினைக்க ஐம்புலக் கள்வர் நினைக்கவையார்; பஞ்சனைய மெல்லடியாளாகிய உமைபங்கனே!ழு என்று அஞ்சிப் புதிய மலர்கள் தூவி அழுதீரேல் வான்மியூர் ஈசன் உம் வஞ்சனையைத் தீர்ப்பர்.
1886 நுணங்கு நூலயன் மாலு மறிகிலாக்
குணங்கள் தான்பர விக்குறைந் துக்கவர்
சுணங்கு பூண்முலைத் தூமொழி யாரவர்
வணங்க நின்றிடும் வான்மியூ ரீசனே. 5.082.7
நுண்ணிய நூல் பல உணர்ந்த பிரமனும் திருமாலும் அறியும்வல்லமை இல்லாத பேரருட் குணங்களைப் பரவி சுணங்கு படர்ந்த பூண்களை உடைய முலையையும் தூய மொழியையும் உடைய பெண்கள் வணங்க வான்மியூர் ஈசன் நின்றிடுவான்.
1887 ஆதி யும்மர னாயயன் மாலுமாய்ப்
பாதி பெண்ணுரு வாய பரமனென்
றோதி யுள்குழைந் தேத்தவல் லாரவர்
வாதை தீர்த்திடும் வான்மியூ ரீசனே. 5.082.8
வான்மியூர் ஈசன் முதலாகிய மூர்த்தி அரனும் அயனும் திருமாலும் ஆயவன். பாதிபெண்ணுருவுமாகிய பரமன் என்று ஓதி உள்ளம் குழைந்து ஏத்த வல்லமை உடையவர்களின் துன்பங்களைத் தீர்த்திடுவான்.
1888 ஓட்டை மாடத்தி லொன்பது வாசலும்
காட்டில் வேவதன் முன்னங் கழலடி
நாட்டி நாண்மலர் தூவி வலஞ்சயில்
வாட்டந் தீர்த்திடும் வான்மியூ ரீசசெ. 5.082.9
ஓட்டைமாடமாகிய உடம்பில் உள்ள ஒன்பது வாயில்களும் இடுகாட்டில் வெந்து எரிந்து சாம்பலாவதன் முன், தன்கழலடியை நெஞ்சில் நாட்டிப் புதுமலர் தூவி வலம் செய்தால் வான்மியூரீசன் வாட்டம் தீர்ப்பான்.
1889 பார மாக மலையெடுத் தான்றனைச்
சீர மாகத் திருவிர லூன்றினான்
ஆர்வ மாக அழைத்தவ னேத்தலும்
வார மாயினன் வான்மியூ ரீசனே. 5.082.10
பாரமாகத் திருக்கயிலையை எடுத்த இராவணனைச் சிதையும்படி திருவிரலால் ஊன்றியவனும், ஆர்வம் பெருகி அழைத்து அவன் ஏத்தலும் அன்பு கொண்டவனும் வான்மியூர் ஈசன் ஆவன்.
திருச்சிற்றம்பலம்
5.082.திருவான்மியூர் திருக்குறுந்தொகை திருச்சிற்றம்பலம்
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - மருந்தீசுவரர். தேவியார் - சுந்தரமாது (அ) சொக்கநாயகி.
1880 விண்ட மாமலர் கொண்டு விரைந்துநீர் அண்டர் நாயகன் தன்னடி சூழ்மின்கள் பண்டு நீர்செய்த பாவம் பறைந்திடும் வண்டு சேர்பொழில் வான்மியூ ரீசனே. 5.082.1
விரிந்தமாமலர்களைக் கொண்டு விரைந்து நீர், தேவர்நாயகனும் , வண்டுசேர் பொழில்களை உடைய வான்மியூர் ஈசனுமாகிய இறைவன் சேவடியைச் சூழ்வீர்களாக; முன்பு செய்த பாவங்கள் கெடும்.
1881 பொருளுஞ் சுற்றமும் பொய்ம்மையும் விட்டுநீர் மருளும் மாந்தரை மாற்றி மயக்கறுத் தருளு மாவல்ல ஆதியா யென்றலும் மருள றுத்திடும் வான்மியூ ரீசனே. 5.082.2
பொருளும், சுற்றத்தாருமாகிய பொய்ம்மையை விட்டு நீர் மருளுதற்குரிய மாந்தரை மாற்றி மயக்கம் நீக்கி அருளுமாறுவல்ல ஆதியாய்! என்று கூறியதும் வான்மியூர் ஈசன் மயக்கம் நீக்குவன்.
1882 மந்த மாகிய சிந்தை மயக்கறுத் தந்த மில்குணத் தானை யடைந்துநின் றெந்தை யீசனென் றேத்திட வல்லிரேல் வந்து நின்றிடும் வான்மியூ ரீசனே. 5.082.3
மந்தமாகிய சிந்தையின் மயக்கத்தை அறுத்து முடிவற்ற குணத்தை உடையவனாகிய பெருமானை அடைந்துநின்று எந்தையே! ஈசனே! என்று வழிபடவல்லமை உடையீரேயாயின் வான்மியூர் ஈசன் வந்து நின்றிடும்.
1883 உள்ள முள்கலந் தேத்தவல் லார்க்கலால் கள்ள முள்ள வழிக்கசி வானலன் வெள்ள மும்மர வும்விர வுஞ்சடை வள்ள லாகிய வான்மியூ ரீசனே. 5.082.4
கங்கையும் பாம்பும் கலக்கும் சடையோடு கூடிய வள்ளலாகிய வான்மியூர் ஈசன், உள்ளம் கலந்து ஏத்த வல்லவர்க்கு அல்லால் கள்ளம் உள்ளவழிக் கசிவான் அல்லன்.
1884 படங்கொள் பாம்பரைப் பால்மதி சூடியை வடங்கொள் மென்முலை மாதொரு கூறனைத் தொடர்ந்து நின்று தொழுதெழு வார்வினை மடங்க நின்றிடும் வான்மியூ ரீசனே. 5.082.5
படம் கொண்ட பாம்பு உடையவனும் , பால் மதி சூடியவனும் , மாலைகள் கொண்ட மென்முலைமாதாகிய உமையொரு கூறனுமான வான்மியூர் ஈசன், தொடர்ந்து நின்று தொழுது எழுவார் வினைகள் மடங்க முன்னே வந்து நின்று அருளுவான்.
1885 நெஞ்சி லைவர் நினைக்க நினைக்குறார் பஞ்சின் மெல்லடி யாளுமை பங்கவென்று அஞ்சி நாண்மலர் தூவி யழுதிரேல் வஞ்சந் தீர்த்திடும் வான்மியூ ரீசனே. 5.082.6
"நெஞ்சில் நினைக்க ஐம்புலக் கள்வர் நினைக்கவையார்; பஞ்சனைய மெல்லடியாளாகிய உமைபங்கனே!ழு என்று அஞ்சிப் புதிய மலர்கள் தூவி அழுதீரேல் வான்மியூர் ஈசன் உம் வஞ்சனையைத் தீர்ப்பர்.
1886 நுணங்கு நூலயன் மாலு மறிகிலாக் குணங்கள் தான்பர விக்குறைந் துக்கவர் சுணங்கு பூண்முலைத் தூமொழி யாரவர் வணங்க நின்றிடும் வான்மியூ ரீசனே. 5.082.7
நுண்ணிய நூல் பல உணர்ந்த பிரமனும் திருமாலும் அறியும்வல்லமை இல்லாத பேரருட் குணங்களைப் பரவி சுணங்கு படர்ந்த பூண்களை உடைய முலையையும் தூய மொழியையும் உடைய பெண்கள் வணங்க வான்மியூர் ஈசன் நின்றிடுவான்.
1887 ஆதி யும்மர னாயயன் மாலுமாய்ப் பாதி பெண்ணுரு வாய பரமனென் றோதி யுள்குழைந் தேத்தவல் லாரவர் வாதை தீர்த்திடும் வான்மியூ ரீசனே. 5.082.8
வான்மியூர் ஈசன் முதலாகிய மூர்த்தி அரனும் அயனும் திருமாலும் ஆயவன். பாதிபெண்ணுருவுமாகிய பரமன் என்று ஓதி உள்ளம் குழைந்து ஏத்த வல்லமை உடையவர்களின் துன்பங்களைத் தீர்த்திடுவான்.
1888 ஓட்டை மாடத்தி லொன்பது வாசலும் காட்டில் வேவதன் முன்னங் கழலடி நாட்டி நாண்மலர் தூவி வலஞ்சயில் வாட்டந் தீர்த்திடும் வான்மியூ ரீசசெ. 5.082.9
ஓட்டைமாடமாகிய உடம்பில் உள்ள ஒன்பது வாயில்களும் இடுகாட்டில் வெந்து எரிந்து சாம்பலாவதன் முன், தன்கழலடியை நெஞ்சில் நாட்டிப் புதுமலர் தூவி வலம் செய்தால் வான்மியூரீசன் வாட்டம் தீர்ப்பான்.
1889 பார மாக மலையெடுத் தான்றனைச் சீர மாகத் திருவிர லூன்றினான் ஆர்வ மாக அழைத்தவ னேத்தலும் வார மாயினன் வான்மியூ ரீசனே. 5.082.10
பாரமாகத் திருக்கயிலையை எடுத்த இராவணனைச் சிதையும்படி திருவிரலால் ஊன்றியவனும், ஆர்வம் பெருகி அழைத்து அவன் ஏத்தலும் அன்பு கொண்டவனும் வான்மியூர் ஈசன் ஆவன்.
திருச்சிற்றம்பலம் |
||||||||
by C.Malarvizhi on 20 Jul 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|