|
||||||||
ஆறாம் திருமுறை-21 |
||||||||
6.021.திருவாக்கூர்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சுயம்புநாதவீசுவரர்.
தேவியார் - கட்கநேத்திராம்பிகை.
2296 முடித்தா மரையணிந்த மூர்த்தி போலும்
மூவுலகுந் தாமாகி நின்றார் போலும்
கடித்தா மரையேய்ந்த கண்ணார் போலும்
கல்லலகு பாணி பயின்றார் போலும்
கொடித்தா மரைக்காடே நாடுந் தொண்டர்
குற்றேவல் தாம்மகிழ்ந்த குழகர் போலும்
அடித்தா மரைமலர்மேல் வைத்தார் போலும்
ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே.
6.021.1
முடியில் தாமரை மலரை அணிந்த மூர்த்தியாய் மூவுலகும் பரந்தவராய், தாமரைக் கண்ணராய், கல்லலகு என்ற வாச்சியத்தை ஒலிக்கப் பழகியவராய், தம்மை அருச்சிப்பதற்குத் தாமரைக் கூட்டத்தை நாடும் அடியவர்கள் செய்யும் குற்றேவலை மகிழ்ந்த இளையராய், தம் திருவடித் தாமரைகளை அடியவர்களின் உள்ளத்தாமரையில் வைத்தவராய், ஆக்கூரிலே (தாமாகவே இலிங்க வடிவில் எழுந்தருளியவர்) தான்தோன்றியப்பர் உள்ளார்.
2297 ஓதிற் றொருநூலு மில்லை போலும்
உணரப் படாததொன் றில்லை போலும்
காதிற் குழையிலங்கப் பெய்தார் போலுங்
கவலைப் பிறப்பிடும்பை காப்பார் போலும்
வேதத்தோ டாறங்கஞ் சொன்னார் போலும்
விடஞ்சூழ்ந் திருண்ட மிடற்றார் போலும்
ஆதிக் களவாகி நின்றார் போலும்
ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே.
6.021.2
ஒரு நூலையும் ஆசிரியர்பால் கல்லாது எல்லா நூல்களையும் அறிந்தவராய் எல்லாச் செய்திகளையும் உணர்ந்த வராய்க் காதில் ஒளி வீசுமாறு குழையை அணிந்தவராய்க் கவலைக்கு இடமாகிய பிறவித்துன்பம் அடியவருக்கு வாராமல் தடுப்பவராய், வேதங்களும் ஆறு அங்கங்களும் ஓதியவராய், விடத்தால் சூழப்பட்டுக் கறுத்த கழுத்தினராய்த் தாமே எல்லாவற்றிற்கும் ஆதியாய்த் தமக்கு ஓர் ஆதியின்றி ஆக்கூரில் தான் தோன்றியப்பர் உகந்தருளியுள்ளார்.
2298 மையார் மலர்க்கண்ணாள் பாகர் போலும்
மணிநீல கண்ட முடையார் போலும்
நெய்யார் திரிசூலங் கையார் போலும்
நீறேறு தோளெட் டுடையார் போலும்
வையார் மழுவாட் படையார் போலும்
வளர்ஞாயி றன்ன வொளியார் போலும்
ஐவாய் அரவமொன் றார்த்தார் போலும்
ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே.
6.021.3
மைபூசிய மலர்போன்ற கண்களை உடைய பார்வதி பாகராய், நீலகண்டராய், நெய் அணிந்த முத்தலைச்சூலக் கையராய். திருநீறுபூசிய எண் தோளராய், கூரிய மழுப்படையினராய், காலைச் சூரியன் போன்ற செந்நிற ஒளியினராய், ஐந்தலைப் பாம்பினை இடையில் இறுகக் கட்டியவராய்த் தான் தோன்றியப்பர் அடியவர் அக்கண்களுக்குக் காட்சி வழங்குகின்றார்.
2299 வடிவிளங்கு வெண்மழுவாள் வல்லார் போலும்
வஞ்சக் கருங்கடல்நஞ் சுண்டார் போலும்
பொடிவிளங்கு முந்நூல்சேர் மார்பர் போலும்
பூங்கங்கை தோய்ந்த சடையார் போலும்
கடிவிளங்கு கொன்றையந் தாரார் போலும்
கட்டங்கம் ஏந்திய கையார் போலும்
அடிவிளங்கு செம்பொற் கழலார் போலும்.
ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே.
6.021.4
கூர்மை விளங்கும் வெள்ளிய மழுப்படையைக் கையாளுதலில் வல்லவராய்க் கடலில் தோன்றிய வஞ்சனை உடைய கரிய நஞ்சினை உண்டவராய்த் திருநீற்றோடு பூணூலை அணிந்த மார்பினராய், அழகிய கங்கை தோய்ந்த சடையினராய், மணம்நாறும் கொன்றை மாலையினராய்க் கட்டங்கம் என்ற படையை ஏந்திய கையராய்த் திருவடியில் பொற்கழல் அணிந்தவராய்த் தான்தோன்றியப்பர் ஆக்கூரில் காட்சிவழங்குகிறார்.
2300 ஏகாச மாம்புலித்தோல் பாம்பு தாழ
இடுவெண் தலைகலனா ஏந்தி நாளும்
மேகாசங் கட்டழித்த வெள்ளி மாலை
புனலார் சடைமுடிமேற் புனைந்தார் போலும்
மாகாச மாயவெண் ணீருந் தீயும்
மதியும் மதிபிறந்த விண்ணும் மண்ணும்
ஆகாச மென்றிவையு மானார் போலும்
ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே.
6.021.5
புலித்தோலை இடையில் உடுத்துப் பாம்பு மேலாடையாக உடல்மேல் தொங்க மண்டையோட்டினையே பிச்சை வாங்கும் பாத்திரமாக ஏந்தி மின்னலை வென்று ஒளிவீசும் கங்கை தங்கும் சடைமுடிமேல் வெண்பூமாலைகளைச் சூடி மிக்க ஒளியை உடைய வெள்ளிய நீரும் தீயும் சந்திரனும் சந்திரன் உலவும் விண்ணும் மண்ணுலகம் வானுலகும் ஆகிய எங்கும் பரந்திருப்பவராகிய தான் தோன்றியப்பர் ஆக்கூரில் காட்சி வழங்குகிறார்.
2301 மாதூரும் வாள்நெடுங்கண் செவ்வாய் மென்தோள்
மலைமகளை மார்பத் தணைத்தார் போலும்
மூதூர் முதுதிரைக ளானார் போலும்
முதலும் இறுதியு மில்லார் போலும்
தீதூர நல்வினையாய் நின்றார் போலுந்
திசையெட்டுந் தாமேயாஞ் செல்வர் போலும்
ஆதிரை நாளா வமர்ந்தார் போலும்
ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே.
6.021.6
காதல் மிகுகின்ற ஒளியை உடைய நெடிய கண்கள், சிவந்த வாய், மெல்லிய தோள்கள் இவற்றை உடைய பார்வதியை மார்பில் அணைத்துப்பின் பாகமாகக் கொண்டு நிலமும் கடலுமாய், ஆதியந்தம் அற்றவராய்த் தீங்குகளை வெல்லும் நல்வினை வடிவினராய், எண்திசைகளும் தமக்கே உடைமையாக உடைய செல்வராய், ஆதிரை நட்சத்திரத்தை விரும்பிக் கொள்பவராய்த் தான் தோன்றியப்பர் ஆக்கூரில் காட்சி வழங்குகின்றார்.
2302 மால்யானை மத்தகத்தைக் கீண்டார் போலும்
மான்தோ லுடையா மகிழ்ந்தார் போலும்
கோலானைக் கோவழலாற் காய்ந்தார் போலும்
குழவிப் பிறைசடைமேல் வைத்தார் போலும்
காலனைக் காலாற் கடந்தார் போலுங்
கயிலாயந் தம்மிடமாக் கொண்டார் போலும்
ஆலானைந் தாடல் உகப்பார் போலும்
ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே.
6.021.7
பெரிய யானையின் தலையைப் பிளந்தவராய் மான்தோலை உடையாக விரும்பி ஏற்று, அம்பினை உடைய மன்மதனைத் தம் கண் நெருப்பினால் கோபித்துச் சாம்பலாக்கி இளம்பிறையைச் சடைமேல் சூடிக் காலனைக் காலால் ஒறுத்துக்கயிலாயத்தைத் தம் இருப்பிடமாக ஏற்றுப் பஞ்சகவ்வியத்தால் அபிடேகம் செய்யப் படுவதனை உகந்த தான்தோன்றி அப்பர் ஆக்கூரில் காட்சி வழங்குகிறார்.
2303 கண்ணார்ந்த நெற்றி யுடையார் போலுங்
காமனையுங் கண்ணழலாற் காய்ந்தார் போலும்
உண்ணா அருநஞ்ச முண்டார் போலும்
ஊழித்தீ யன்ன வொளியார் போலும்
எண்ணா யிரங்கோடி பேரார் போலும்
ஏறேறிச் செல்லும் இறைவர் போலும்
அண்ணாவும் ஆரூரும் மேயார் போலும்
ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே.
6.021.8
நெற்றிக் கண்ணராய்க் காமனை அக்கண்ணின் தீயினால் எரித்தவராய்ப் பிறர் உண்ணாத கொடிய நஞ்சினை உண்டவராய், ஊழித் தீப்போன்ற ஒளியினை உடையவராய்ப் பல கோடிப் பேர்களுக்கு உரியவராய், காளையை இவர்ந்து செல்லும் தலைவராய், அண்ணாமலையையும், ஆரூரையும் உகந்தருளியிருப்பவராய்த் தான் தோன்றி அப்பர் ஆக்கூரில் காட்சி வழங்குகிறார்.
2304 கடியார் தளிர்கலந்த கொன்றை மாலை
கதிர்போது தாதணிந்த கண்ணி போலும்
நெடியான் சதுர்முகனு நேட நின்ற
நீலநற் கண்டத் திறையார் போலும்
படியேல் அழல்வண்ணஞ் செம்பொன் மேனி
மணிவண்ணந் தம்வண்ண மாவார் போலும்
அடியார் புகலிடம தானார் போலும்
ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே.
6.021.9
புதுமை நிறைந்த தளிர்கள் கலந்த கொன்றைப் பூ மாலை, விடு பூக்கள் மகரந்தம் நிரம்பிய முடிமாலை இவற்றைச் சூடியவராய்த் திருமாலும் பிரமனும் தேடுமாறு ஒளிப்பிழம்பாய் நின்ற நீலகண்ட இறைவராய்த் தீவண்ணமும் பொன்வண்ணமும் தம் கூற்றிலும் நீல மணிவண்ணம் தேவியின் கூற்றிலும் அமைந்த திருமேனியராய் அடியவர்களுக்கு அடைக்கலம் தரும் இடமாக உள்ளதான் தோன்றியப்பர் ஆக்கூரில் காட்சி வழங்குகிறார்.
2305 திரையானுஞ் செந்தா மரைமே லானுந்
தேர்ந்தவர்கள் தாந்தேடிக் காணார் நாணும்
புரையா னெனப்படுவார் தாமே போலும்
போரேறு தாமேறிச் செல்வார் போலும்
கரையா வரைவில்லே நாகம் நாணாக்
காலத் தீயன்ன கனலார் போலும்
வரையார் மதிலெய்த வண்ணர் போலும்
ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே.
6.021.10
பாற்கடற்பரமனும், செந்தாமரைமேல் உறையும் பிரமனும் ஆராய்ந்து தேடியும்காண முடியாது நாணுமாறு செய்த மேம்பட்டவராய், போரிடும் காளையை இவர்ந்து செல்பவராய், நெகிழ்ச்சியில்லாத மலையையே வில்லாகவும் பாம்பையே நாணாகவும் கொண்டு ஊழித்தீயை ஒத்த கோலத்தை உடையவராய்ப் பகைவர்களின் மும்மதில்களையும் அழித்த செயலுடைய தான் தோன்றியப்பர் ஆக்கூரில் காட்சி வழங்குகிறார்.
திருச்சிற்றம்பலம்
6.021.திருவாக்கூர் திருத்தாண்டகம் திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - சுயம்புநாதவீசுவரர். தேவியார் - கட்கநேத்திராம்பிகை.
2296 முடித்தா மரையணிந்த மூர்த்தி போலும் மூவுலகுந் தாமாகி நின்றார் போலும் கடித்தா மரையேய்ந்த கண்ணார் போலும் கல்லலகு பாணி பயின்றார் போலும் கொடித்தா மரைக்காடே நாடுந் தொண்டர் குற்றேவல் தாம்மகிழ்ந்த குழகர் போலும் அடித்தா மரைமலர்மேல் வைத்தார் போலும் ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே. 6.021.1
முடியில் தாமரை மலரை அணிந்த மூர்த்தியாய் மூவுலகும் பரந்தவராய், தாமரைக் கண்ணராய், கல்லலகு என்ற வாச்சியத்தை ஒலிக்கப் பழகியவராய், தம்மை அருச்சிப்பதற்குத் தாமரைக் கூட்டத்தை நாடும் அடியவர்கள் செய்யும் குற்றேவலை மகிழ்ந்த இளையராய், தம் திருவடித் தாமரைகளை அடியவர்களின் உள்ளத்தாமரையில் வைத்தவராய், ஆக்கூரிலே (தாமாகவே இலிங்க வடிவில் எழுந்தருளியவர்) தான்தோன்றியப்பர் உள்ளார்.
2297 ஓதிற் றொருநூலு மில்லை போலும் உணரப் படாததொன் றில்லை போலும் காதிற் குழையிலங்கப் பெய்தார் போலுங் கவலைப் பிறப்பிடும்பை காப்பார் போலும் வேதத்தோ டாறங்கஞ் சொன்னார் போலும் விடஞ்சூழ்ந் திருண்ட மிடற்றார் போலும் ஆதிக் களவாகி நின்றார் போலும் ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே. 6.021.2
ஒரு நூலையும் ஆசிரியர்பால் கல்லாது எல்லா நூல்களையும் அறிந்தவராய் எல்லாச் செய்திகளையும் உணர்ந்த வராய்க் காதில் ஒளி வீசுமாறு குழையை அணிந்தவராய்க் கவலைக்கு இடமாகிய பிறவித்துன்பம் அடியவருக்கு வாராமல் தடுப்பவராய், வேதங்களும் ஆறு அங்கங்களும் ஓதியவராய், விடத்தால் சூழப்பட்டுக் கறுத்த கழுத்தினராய்த் தாமே எல்லாவற்றிற்கும் ஆதியாய்த் தமக்கு ஓர் ஆதியின்றி ஆக்கூரில் தான் தோன்றியப்பர் உகந்தருளியுள்ளார்.
2298 மையார் மலர்க்கண்ணாள் பாகர் போலும் மணிநீல கண்ட முடையார் போலும் நெய்யார் திரிசூலங் கையார் போலும் நீறேறு தோளெட் டுடையார் போலும் வையார் மழுவாட் படையார் போலும் வளர்ஞாயி றன்ன வொளியார் போலும் ஐவாய் அரவமொன் றார்த்தார் போலும் ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே. 6.021.3
மைபூசிய மலர்போன்ற கண்களை உடைய பார்வதி பாகராய், நீலகண்டராய், நெய் அணிந்த முத்தலைச்சூலக் கையராய். திருநீறுபூசிய எண் தோளராய், கூரிய மழுப்படையினராய், காலைச் சூரியன் போன்ற செந்நிற ஒளியினராய், ஐந்தலைப் பாம்பினை இடையில் இறுகக் கட்டியவராய்த் தான் தோன்றியப்பர் அடியவர் அக்கண்களுக்குக் காட்சி வழங்குகின்றார்.
2299 வடிவிளங்கு வெண்மழுவாள் வல்லார் போலும் வஞ்சக் கருங்கடல்நஞ் சுண்டார் போலும் பொடிவிளங்கு முந்நூல்சேர் மார்பர் போலும் பூங்கங்கை தோய்ந்த சடையார் போலும் கடிவிளங்கு கொன்றையந் தாரார் போலும் கட்டங்கம் ஏந்திய கையார் போலும் அடிவிளங்கு செம்பொற் கழலார் போலும். ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே. 6.021.4
கூர்மை விளங்கும் வெள்ளிய மழுப்படையைக் கையாளுதலில் வல்லவராய்க் கடலில் தோன்றிய வஞ்சனை உடைய கரிய நஞ்சினை உண்டவராய்த் திருநீற்றோடு பூணூலை அணிந்த மார்பினராய், அழகிய கங்கை தோய்ந்த சடையினராய், மணம்நாறும் கொன்றை மாலையினராய்க் கட்டங்கம் என்ற படையை ஏந்திய கையராய்த் திருவடியில் பொற்கழல் அணிந்தவராய்த் தான்தோன்றியப்பர் ஆக்கூரில் காட்சிவழங்குகிறார்.
2300 ஏகாச மாம்புலித்தோல் பாம்பு தாழ இடுவெண் தலைகலனா ஏந்தி நாளும் மேகாசங் கட்டழித்த வெள்ளி மாலை புனலார் சடைமுடிமேற் புனைந்தார் போலும் மாகாச மாயவெண் ணீருந் தீயும் மதியும் மதிபிறந்த விண்ணும் மண்ணும் ஆகாச மென்றிவையு மானார் போலும் ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே. 6.021.5
புலித்தோலை இடையில் உடுத்துப் பாம்பு மேலாடையாக உடல்மேல் தொங்க மண்டையோட்டினையே பிச்சை வாங்கும் பாத்திரமாக ஏந்தி மின்னலை வென்று ஒளிவீசும் கங்கை தங்கும் சடைமுடிமேல் வெண்பூமாலைகளைச் சூடி மிக்க ஒளியை உடைய வெள்ளிய நீரும் தீயும் சந்திரனும் சந்திரன் உலவும் விண்ணும் மண்ணுலகம் வானுலகும் ஆகிய எங்கும் பரந்திருப்பவராகிய தான் தோன்றியப்பர் ஆக்கூரில் காட்சி வழங்குகிறார்.
2301 மாதூரும் வாள்நெடுங்கண் செவ்வாய் மென்தோள் மலைமகளை மார்பத் தணைத்தார் போலும் மூதூர் முதுதிரைக ளானார் போலும் முதலும் இறுதியு மில்லார் போலும் தீதூர நல்வினையாய் நின்றார் போலுந் திசையெட்டுந் தாமேயாஞ் செல்வர் போலும் ஆதிரை நாளா வமர்ந்தார் போலும் ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே. 6.021.6
காதல் மிகுகின்ற ஒளியை உடைய நெடிய கண்கள், சிவந்த வாய், மெல்லிய தோள்கள் இவற்றை உடைய பார்வதியை மார்பில் அணைத்துப்பின் பாகமாகக் கொண்டு நிலமும் கடலுமாய், ஆதியந்தம் அற்றவராய்த் தீங்குகளை வெல்லும் நல்வினை வடிவினராய், எண்திசைகளும் தமக்கே உடைமையாக உடைய செல்வராய், ஆதிரை நட்சத்திரத்தை விரும்பிக் கொள்பவராய்த் தான் தோன்றியப்பர் ஆக்கூரில் காட்சி வழங்குகின்றார்.
2302 மால்யானை மத்தகத்தைக் கீண்டார் போலும் மான்தோ லுடையா மகிழ்ந்தார் போலும் கோலானைக் கோவழலாற் காய்ந்தார் போலும் குழவிப் பிறைசடைமேல் வைத்தார் போலும் காலனைக் காலாற் கடந்தார் போலுங் கயிலாயந் தம்மிடமாக் கொண்டார் போலும் ஆலானைந் தாடல் உகப்பார் போலும் ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே. 6.021.7
பெரிய யானையின் தலையைப் பிளந்தவராய் மான்தோலை உடையாக விரும்பி ஏற்று, அம்பினை உடைய மன்மதனைத் தம் கண் நெருப்பினால் கோபித்துச் சாம்பலாக்கி இளம்பிறையைச் சடைமேல் சூடிக் காலனைக் காலால் ஒறுத்துக்கயிலாயத்தைத் தம் இருப்பிடமாக ஏற்றுப் பஞ்சகவ்வியத்தால் அபிடேகம் செய்யப் படுவதனை உகந்த தான்தோன்றி அப்பர் ஆக்கூரில் காட்சி வழங்குகிறார்.
2303 கண்ணார்ந்த நெற்றி யுடையார் போலுங் காமனையுங் கண்ணழலாற் காய்ந்தார் போலும் உண்ணா அருநஞ்ச முண்டார் போலும் ஊழித்தீ யன்ன வொளியார் போலும் எண்ணா யிரங்கோடி பேரார் போலும் ஏறேறிச் செல்லும் இறைவர் போலும் அண்ணாவும் ஆரூரும் மேயார் போலும் ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே. 6.021.8
நெற்றிக் கண்ணராய்க் காமனை அக்கண்ணின் தீயினால் எரித்தவராய்ப் பிறர் உண்ணாத கொடிய நஞ்சினை உண்டவராய், ஊழித் தீப்போன்ற ஒளியினை உடையவராய்ப் பல கோடிப் பேர்களுக்கு உரியவராய், காளையை இவர்ந்து செல்லும் தலைவராய், அண்ணாமலையையும், ஆரூரையும் உகந்தருளியிருப்பவராய்த் தான் தோன்றி அப்பர் ஆக்கூரில் காட்சி வழங்குகிறார்.
2304 கடியார் தளிர்கலந்த கொன்றை மாலை கதிர்போது தாதணிந்த கண்ணி போலும் நெடியான் சதுர்முகனு நேட நின்ற நீலநற் கண்டத் திறையார் போலும் படியேல் அழல்வண்ணஞ் செம்பொன் மேனி மணிவண்ணந் தம்வண்ண மாவார் போலும் அடியார் புகலிடம தானார் போலும் ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே. 6.021.9
புதுமை நிறைந்த தளிர்கள் கலந்த கொன்றைப் பூ மாலை, விடு பூக்கள் மகரந்தம் நிரம்பிய முடிமாலை இவற்றைச் சூடியவராய்த் திருமாலும் பிரமனும் தேடுமாறு ஒளிப்பிழம்பாய் நின்ற நீலகண்ட இறைவராய்த் தீவண்ணமும் பொன்வண்ணமும் தம் கூற்றிலும் நீல மணிவண்ணம் தேவியின் கூற்றிலும் அமைந்த திருமேனியராய் அடியவர்களுக்கு அடைக்கலம் தரும் இடமாக உள்ளதான் தோன்றியப்பர் ஆக்கூரில் காட்சி வழங்குகிறார்.
2305 திரையானுஞ் செந்தா மரைமே லானுந் தேர்ந்தவர்கள் தாந்தேடிக் காணார் நாணும் புரையா னெனப்படுவார் தாமே போலும் போரேறு தாமேறிச் செல்வார் போலும் கரையா வரைவில்லே நாகம் நாணாக் காலத் தீயன்ன கனலார் போலும் வரையார் மதிலெய்த வண்ணர் போலும் ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே. 6.021.10
பாற்கடற்பரமனும், செந்தாமரைமேல் உறையும் பிரமனும் ஆராய்ந்து தேடியும்காண முடியாது நாணுமாறு செய்த மேம்பட்டவராய், போரிடும் காளையை இவர்ந்து செல்பவராய், நெகிழ்ச்சியில்லாத மலையையே வில்லாகவும் பாம்பையே நாணாகவும் கொண்டு ஊழித்தீயை ஒத்த கோலத்தை உடையவராய்ப் பகைவர்களின் மும்மதில்களையும் அழித்த செயலுடைய தான் தோன்றியப்பர் ஆக்கூரில் காட்சி வழங்குகிறார்.
திருச்சிற்றம்பலம் |
||||||||
by C.Malarvizhi on 21 Jul 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|