LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

இரண்டாம் திருமுறை-79

 

2.079.திருவாரூர் 
பண் - காந்தாரம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - முல்லைவனேசுவரர். 
தேவியார் - கரும்பனையாளம்மை. 
2324 பவனமாய்ச் சோடையாய் நாவெழாப் பஞ்சுதோய்ச் 
சட்ட வுண்டு 
சிவனதாட் சிந்தியாப் பேதைமார் போலநீ 
வெள்கி னாயே 
கவனமாய்ப் பாய்வதோ ரேறுகந் தேறிய 
காள கண்டன் 
அவனதா ரூர்தொழு துய்யலா மையல்கொண் 
டஞ்ச னெஞ்சே.
2.079. 1
பெருமூச்சு வாங்கும் நிலையை அடைந்து வறட்சி நிலை எய்தி, நா எழாதுலர்ந்து பிறர் பஞ்சில் தேய்த்துப்பால் முதலியவற்றைப் பிழிய உண்டு மரணமுறுங்காலத்தில் சிவபெருமானின் திருவடிகளைச் சிந்தியாது இறக்கும் அஞ்ஞானியரைப் போல நமக்கும் இந்நிலை வருமா என நெஞ்சே நீ நாணுகின்றாய். கவனத்தோடு பாய்ந்து செல்லும் விடை ஏற்றில் ஏறிவரும் நீலகண்டனாகிய சிவபிரானது ஆரூரைச் சென்று தொழுதால் உய்யலாம். மையல் கொண்டு அஞ்சாதே! 
2325 தந்தையார் போயினார் தாயாரும் போயினார் 
தாமும் போவார் 
கொந்தவேல் கொண்டொரு கூற்றத்தார் பார்க்கின்றார் 
கொண்டுபோவார் 
எந்தநாள் வாழ்வதற் கேமனம் வைத்தியா 
லேழை நெஞ்சே 
அந்தணா ரூர்தொழு துய்யலா மையல்கொண் 
டஞ்ச னெஞ்சே.
2.079.2
ஏழை நெஞ்சே! தந்தை தாயர் இறந்தனர். தாமும் ஒருநாள் இறக்கத்தான் போகின்றார். இயம தூதர்கள் வேலைக் கையில் கொண்டு குத்தி உயிர் போக்கப் பார்த்துக் கொண்டுள்ளனர். இப்படி வாழ்க்கை நிலையாமையில் இருத்தலால் நெஞ்சே இறவாமல் வாழ்வதற்கு எந்த நாள் மனம் வைப்பாய்? ஆரூர் இறைவனைத் தொழுதால் நீ உய்யலாம். மையல்கொண்டு அஞ்சாதே! 
2326 நிணங்குடர் தோனரம் பென்புசே ராக்கைதா 
னிலாய தன்றால் 
குணங்களார்க் கல்லது குற்றநீங் காதெனக் 
குலுங்கி னாயே 
வணங்குவார் வானவர் தானவர் வைகலு 
மனங்கொ டேத்தும் 
அணங்கனா ரூர்தொழு துய்யலா மையல்கொண் 
டஞ்ச னெஞ்சே.
2.079.3
நிணம், குடல், தோல், நரம்பு, என்பு இவற்றால் இயன்ற ஆக்கை நிலையானது அன்று. நல்ல குணங்கள் உடையார்க் கன்றித் தீய குணங்கள் உடையார்க்கு உளதாகும் குற்றங்கள் நீங்கா. நீயோ நடுங்கிநின்றாய். தேவர் அசுரர் முதலானோர் அனைவரும் வந்து வணங்கி மனம் கொண்டு வழிபடும் ஆரூர் இறைவனைத் தொழுதால் உய்யலாம். மையல் கொண்டு அஞ்சாதே! 
2327 நீதியால் வாழ்கிலை நாள்செலா நின்றன 
நித்த நோய்கள் 
வாதியா வாதலா னாளுநா ளின்பமே 
மருவி னாயே 
சாதியார் கின்னரர் தருமனும் வருணர்க 
ளேத்து முக்கண் 
ஆதியா ரூர்தொழு துய்யலா மையல்கொண் 
டஞ்ச னெஞ்சே.
2.079. 4
நெஞ்சே! நீ நீதிவழியே வாழவில்லை. வாழ் நாள்கள் பல செல்லா நின்றன. நாள்தோறும் நோய்கள் பல துன்பம் செய்யாவாய் உள்ளன. ஆதலால் ஒவ்வொரு நாளும் நீ இன்பத்தையே கருதி நிற்கின்றாய். நற்குலத்தில் தோன்றிய கின்ன. தருமன், வருணன் முதலியோர் வழிபட்டுப் போற்றும் ஆரூர் ஆதி முதல்வனாய முக்கண் மூர்த்தியைத் தொழுதால் நோய்கள் செய்ய உள்ள துயர்களிலிருந்து உய்யலாம். மையல் கொண்டு அஞ்சாதே! 
2328 பிறவியால் வருவன கேடுள வாதலாற் 
பெரிய வின்பத் 
துறவியார்க் கல்லது துன்பநீங் காதெனத் 
தூங்கி னாயே 
மறவனீ மார்க் மே நண்ணினாய் தீர்த்தநீர் 
மல்கு சென்னி 
அறவனா ரூர்தொழு துய்யலா மையல்கொண் 
டஞ்ச னெஞ்சே.
2.079. 5
நெஞ்சே! பிறவியால் கேடுகளே விளையும். பெரிய இன்பத்தை அடைய விரும்பும் துறவியர்க்கு அல்லது துன்பம் நீங்காது என மனம் சோர்கின்றாய். இறைவனை ஒருபோதும் மறவாதே! பெரியோர் கூறிய நல்வழிகளையே நீ பின்பற்றி வாழ்கின்றாய், புனிதமான கங்கை தங்கிய சடையினனாகிய அறவாழி அந்தணன் ஆரூர் சென்று தொழுதால் உய்யலாம். மையல் கொண்டு அஞ்சாதே! 
2329 செடி கொள்நோ யாக்கையைம் பாம்பின் வாய்த் 
தேரைவாய்ச்சிறு பறவை 
கடிகொள்பூந் தேன்சுவைத் தின்புற லாமென்று 
கருதி னாயே 
முடிகளால் வானவர் முன்பணிந் தன்பரா 
யேத்து முக்கண் 
அடிகளா ரூர்தொழு துய்யலா மையல்கொண் 
டஞ்ச னெஞ்சே.
2.079. 6
முடைநாற்றம் கொண்ட உடலகத்தே ஐம்பாம்பின் வாயில் அகப்பட்ட தேரையின் வாயில் அகப்பட்ட வண்டு, மணம் கமழும் பூந்தேனைச் சுவைத்து இன்புறக் கருதுவது போல உலகியல் இன்பங்களை நுகரக் கருதுகின்றாய். தேவர்கள் முடிதாழ்த்திப் பணிந்து அன்பராய்ப் போற்றும் ஆரூர் முக்கண் அடிகளைத் தொழுதால் உய்யலாம். மையல் கொண்டு அஞ்சாதே! 
2330 ஏறுமால் யானையே சிவிகையந் தளகமீச் 
சோப்பி வட்டின் 
மாறிவா ழுடம்பினார் படுவதோர் நடலைக்கு 
மயங்கி னாயே 
மாறிலா வனமுலை மங்கையோர் பங்கினர் 
மதியம் வைத்த 
ஆறனா ரூர்தொழு துய்யலா மையல்கொண் 
டஞ்ச னெஞ்சே.
2.079.7
நெஞ்சே! உலாவரும் பெரிய யானை, சிவிகை, கவசம், விருது முதலியவற்றை ஆடைகளை மாற்றுவது போல மாற்றப்படும் பல பிறவிகள் எடுக்கும் உடலை உடையார் தற்காலிகமாகப் பெறும் துன்பமயமான வாழ்வைக்கண்டு மயங்குகின்றாய். ஒப்பற்ற அழகிய தனபாரங்களைக் கொண்ட உமையம்மை பங்கினரும், பிறைமதியையும் கங்கையையும் சூடிய முடியினரும் ஆகிய ஆரூர் இறைவரைத் தொழுதால் உய்யலாம். மையல் கொண்டு அஞ்சாதே! 
2331 என்பினாற் கழிநிரைத் திறைச்சிமண் சுவரெறிந் 
திதுநம் மில்லம் 
புன்புலா னாறுதோல் போர்த்துப்பொல் லாமையான் 
முகடு கொண்டு 
முன்பெலா மொன்பது வாய்தலார் குரம்பையின் 
மூழ்கி டாதே 
அன்பனா ரூர்தொழ துய்யலா மையல்கொண் 
டஞ்ச னெஞ்சே.
2.079. 8
நெஞ்சே! எலும்புகளாய கழிகளைக் கட்டி இறைச்சியாகிய மண் சுவர் எழுப்பி, அற்பமான புலால் மணம் கமழும் தோலைப் போர்த்துப் பொல்லாமையாகிய முகடுவேய்ந்தமைத்தது நம் இல்லமாகிய உடல். பண்டு தொட்டு ஒன்பது வாயில்களை உடைய நம் உடலைப் பேணுதலாகிய முயற்சியிலேயே மூழ்கிவிடாமல் நம்மேல் அன்புடையனாய ஆரூர் இறைவனை வணங்கினால் உய்தி பெறலாம். மையல் கொண்டு அஞ்சாதே! 
2332 தந்தைதாய் தன்னுடன் றோன்றினார் புத்திரர் 
தார மென்னும் 
பந்தநீங் காதவர்க் குய்ந்துபோக் கில்லெனப் 
பற்றி னாயே 
வெந்தநீ றாடியா ராதியார் சோதியார் 
வேத கீதர் 
எந்தையா ரூர்தொழு துய்யலா மையல்கொண் 
டஞ்ச னெஞ்சே.
2.079. 9
நெஞ்சே! தந்தை, தாய், உடன் பிறந்தார், புத்திரர், மனைவி ஆகிய பந்தங்களிலிருந்து விடுபடாதவர்க்கு உய்தி அடையும் உபாயம் இல்லை எனத் தௌந்து, வெந்த வெண்பொடி பூசியவரும், ஆதியான வரும் சோதியரும் வேதப்பாடல்களைப் பாடுபவரும், எந்தையும் ஆகிய ஆரூர் இறைவனைத் தொழுதால் உய்யலாம். மையல் கொண்டு அஞ்சாதே! 
2333 நெடியமால் பிரமனு நீண்டுமண் ணிடந்தின்ன 
நேடிக் காணாப் 
படியனார் பவளம்போல் உருவனார் பனிவளர் 
மலையாள் பாக 
வடிவனார் மதிபொதி சடையனார் மணியணி 
கண்டத் தெண்டோள் 
அடிகளா ரூர்தொழு துய்யலா மையல்கொண் 
டஞ்ச னெஞ்சே.
2.079.10
நெஞ்சே! நெடிய உருவெடுத்த திருமால், பன்றி உருவெடுத்து மண்ணிடந்தும், பிரமன் அன்னவடிவெடுத்துப் பறந்து சென்றும் இன்றுவரை தேடிக் காணாத நிலையில் தன்மையால் உயர்ந்தவரும், பவளம் போன்ற உருவினரும் இமவான் மகளாகிய பார்வதி தேவியைப் பாகமாகக் கொண்ட வடிவினரும், பிறையணிந்த தலை முடியினரும் நீலமணிபோன்ற அழகிய கண்டத்தினரும் எட்டுத் தோள்களைக் கொண்டுள்ளவருமாகிய ஆரூர் அடிகளைத் தொழுதால் உய்யலாம். மையல் கொண்டு அஞ்சாதே! 
2334 பல்லிதழ் மாதவி யல்லிவண் டியாழ்செயுங் 
காழி யூரன் 
நல்லவே நல்லவே சொல்லிய ஞானசம் 
பந்த னாரூர் 
எல்லியம் போதெரி யாடுமெம் மீசனை 
யேத்து பாடல் 
சொல்லவே வல்லவர் நீதிலா ரோதநீர் 
வைய கத்தே.
2.079.11
பலவாகிய இதழ்களையுடைய மாதவி மலரின், அக இதழ்களில் வண்டுகள் யாழ் போல ஒலி செய்து தேனுண்டு மகிழும் காழிப் பதியூரனும் நல்லனவற்றையே நாள்தோறும் சொல்லிவருபவனும் ஆகிய ஞானசம்பந்தன் இராப்போதில் எரியில் நின்று ஆடும், ஆரூரில் எழுந்தருளிய எம் ஈசனை ஏத்திப் போற்றிய இப்பதிகப் பாடல்களைச் சொல்லி வழிபட வல்லவர்கள் கடல் நீரால் சூழப்பட்ட இவ்வையத்தில் தீதிலர். 
திருச்சிற்றம்பலம்

2.079.திருவாரூர் 
பண் - காந்தாரம் 
திருச்சிற்றம்பலம் 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - முல்லைவனேசுவரர். தேவியார் - கரும்பனையாளம்மை. 

2324 பவனமாய்ச் சோடையாய் நாவெழாப் பஞ்சுதோய்ச் சட்ட வுண்டு சிவனதாட் சிந்தியாப் பேதைமார் போலநீ வெள்கி னாயே கவனமாய்ப் பாய்வதோ ரேறுகந் தேறிய காள கண்டன் அவனதா ரூர்தொழு துய்யலா மையல்கொண் டஞ்ச னெஞ்சே.2.079. 1
பெருமூச்சு வாங்கும் நிலையை அடைந்து வறட்சி நிலை எய்தி, நா எழாதுலர்ந்து பிறர் பஞ்சில் தேய்த்துப்பால் முதலியவற்றைப் பிழிய உண்டு மரணமுறுங்காலத்தில் சிவபெருமானின் திருவடிகளைச் சிந்தியாது இறக்கும் அஞ்ஞானியரைப் போல நமக்கும் இந்நிலை வருமா என நெஞ்சே நீ நாணுகின்றாய். கவனத்தோடு பாய்ந்து செல்லும் விடை ஏற்றில் ஏறிவரும் நீலகண்டனாகிய சிவபிரானது ஆரூரைச் சென்று தொழுதால் உய்யலாம். மையல் கொண்டு அஞ்சாதே! 

2325 தந்தையார் போயினார் தாயாரும் போயினார் தாமும் போவார் கொந்தவேல் கொண்டொரு கூற்றத்தார் பார்க்கின்றார் கொண்டுபோவார் எந்தநாள் வாழ்வதற் கேமனம் வைத்தியா லேழை நெஞ்சே அந்தணா ரூர்தொழு துய்யலா மையல்கொண் டஞ்ச னெஞ்சே.2.079.2
ஏழை நெஞ்சே! தந்தை தாயர் இறந்தனர். தாமும் ஒருநாள் இறக்கத்தான் போகின்றார். இயம தூதர்கள் வேலைக் கையில் கொண்டு குத்தி உயிர் போக்கப் பார்த்துக் கொண்டுள்ளனர். இப்படி வாழ்க்கை நிலையாமையில் இருத்தலால் நெஞ்சே இறவாமல் வாழ்வதற்கு எந்த நாள் மனம் வைப்பாய்? ஆரூர் இறைவனைத் தொழுதால் நீ உய்யலாம். மையல்கொண்டு அஞ்சாதே! 

2326 நிணங்குடர் தோனரம் பென்புசே ராக்கைதா னிலாய தன்றால் குணங்களார்க் கல்லது குற்றநீங் காதெனக் குலுங்கி னாயே வணங்குவார் வானவர் தானவர் வைகலு மனங்கொ டேத்தும் அணங்கனா ரூர்தொழு துய்யலா மையல்கொண் டஞ்ச னெஞ்சே.2.079.3
நிணம், குடல், தோல், நரம்பு, என்பு இவற்றால் இயன்ற ஆக்கை நிலையானது அன்று. நல்ல குணங்கள் உடையார்க் கன்றித் தீய குணங்கள் உடையார்க்கு உளதாகும் குற்றங்கள் நீங்கா. நீயோ நடுங்கிநின்றாய். தேவர் அசுரர் முதலானோர் அனைவரும் வந்து வணங்கி மனம் கொண்டு வழிபடும் ஆரூர் இறைவனைத் தொழுதால் உய்யலாம். மையல் கொண்டு அஞ்சாதே! 

2327 நீதியால் வாழ்கிலை நாள்செலா நின்றன நித்த நோய்கள் வாதியா வாதலா னாளுநா ளின்பமே மருவி னாயே சாதியார் கின்னரர் தருமனும் வருணர்க ளேத்து முக்கண் ஆதியா ரூர்தொழு துய்யலா மையல்கொண் டஞ்ச னெஞ்சே.2.079. 4
நெஞ்சே! நீ நீதிவழியே வாழவில்லை. வாழ் நாள்கள் பல செல்லா நின்றன. நாள்தோறும் நோய்கள் பல துன்பம் செய்யாவாய் உள்ளன. ஆதலால் ஒவ்வொரு நாளும் நீ இன்பத்தையே கருதி நிற்கின்றாய். நற்குலத்தில் தோன்றிய கின்ன. தருமன், வருணன் முதலியோர் வழிபட்டுப் போற்றும் ஆரூர் ஆதி முதல்வனாய முக்கண் மூர்த்தியைத் தொழுதால் நோய்கள் செய்ய உள்ள துயர்களிலிருந்து உய்யலாம். மையல் கொண்டு அஞ்சாதே! 

2328 பிறவியால் வருவன கேடுள வாதலாற் பெரிய வின்பத் துறவியார்க் கல்லது துன்பநீங் காதெனத் தூங்கி னாயே மறவனீ மார்க் மே நண்ணினாய் தீர்த்தநீர் மல்கு சென்னி அறவனா ரூர்தொழு துய்யலா மையல்கொண் டஞ்ச னெஞ்சே.2.079. 5
நெஞ்சே! பிறவியால் கேடுகளே விளையும். பெரிய இன்பத்தை அடைய விரும்பும் துறவியர்க்கு அல்லது துன்பம் நீங்காது என மனம் சோர்கின்றாய். இறைவனை ஒருபோதும் மறவாதே! பெரியோர் கூறிய நல்வழிகளையே நீ பின்பற்றி வாழ்கின்றாய், புனிதமான கங்கை தங்கிய சடையினனாகிய அறவாழி அந்தணன் ஆரூர் சென்று தொழுதால் உய்யலாம். மையல் கொண்டு அஞ்சாதே! 

2329 செடி கொள்நோ யாக்கையைம் பாம்பின் வாய்த் தேரைவாய்ச்சிறு பறவை கடிகொள்பூந் தேன்சுவைத் தின்புற லாமென்று கருதி னாயே முடிகளால் வானவர் முன்பணிந் தன்பரா யேத்து முக்கண் அடிகளா ரூர்தொழு துய்யலா மையல்கொண் டஞ்ச னெஞ்சே.2.079. 6
முடைநாற்றம் கொண்ட உடலகத்தே ஐம்பாம்பின் வாயில் அகப்பட்ட தேரையின் வாயில் அகப்பட்ட வண்டு, மணம் கமழும் பூந்தேனைச் சுவைத்து இன்புறக் கருதுவது போல உலகியல் இன்பங்களை நுகரக் கருதுகின்றாய். தேவர்கள் முடிதாழ்த்திப் பணிந்து அன்பராய்ப் போற்றும் ஆரூர் முக்கண் அடிகளைத் தொழுதால் உய்யலாம். மையல் கொண்டு அஞ்சாதே! 

2330 ஏறுமால் யானையே சிவிகையந் தளகமீச் சோப்பி வட்டின் மாறிவா ழுடம்பினார் படுவதோர் நடலைக்கு மயங்கி னாயே மாறிலா வனமுலை மங்கையோர் பங்கினர் மதியம் வைத்த ஆறனா ரூர்தொழு துய்யலா மையல்கொண் டஞ்ச னெஞ்சே.2.079.7
நெஞ்சே! உலாவரும் பெரிய யானை, சிவிகை, கவசம், விருது முதலியவற்றை ஆடைகளை மாற்றுவது போல மாற்றப்படும் பல பிறவிகள் எடுக்கும் உடலை உடையார் தற்காலிகமாகப் பெறும் துன்பமயமான வாழ்வைக்கண்டு மயங்குகின்றாய். ஒப்பற்ற அழகிய தனபாரங்களைக் கொண்ட உமையம்மை பங்கினரும், பிறைமதியையும் கங்கையையும் சூடிய முடியினரும் ஆகிய ஆரூர் இறைவரைத் தொழுதால் உய்யலாம். மையல் கொண்டு அஞ்சாதே! 

2331 என்பினாற் கழிநிரைத் திறைச்சிமண் சுவரெறிந் திதுநம் மில்லம் புன்புலா னாறுதோல் போர்த்துப்பொல் லாமையான் முகடு கொண்டு முன்பெலா மொன்பது வாய்தலார் குரம்பையின் மூழ்கி டாதே அன்பனா ரூர்தொழ துய்யலா மையல்கொண் டஞ்ச னெஞ்சே.2.079. 8
நெஞ்சே! எலும்புகளாய கழிகளைக் கட்டி இறைச்சியாகிய மண் சுவர் எழுப்பி, அற்பமான புலால் மணம் கமழும் தோலைப் போர்த்துப் பொல்லாமையாகிய முகடுவேய்ந்தமைத்தது நம் இல்லமாகிய உடல். பண்டு தொட்டு ஒன்பது வாயில்களை உடைய நம் உடலைப் பேணுதலாகிய முயற்சியிலேயே மூழ்கிவிடாமல் நம்மேல் அன்புடையனாய ஆரூர் இறைவனை வணங்கினால் உய்தி பெறலாம். மையல் கொண்டு அஞ்சாதே! 

2332 தந்தைதாய் தன்னுடன் றோன்றினார் புத்திரர் தார மென்னும் பந்தநீங் காதவர்க் குய்ந்துபோக் கில்லெனப் பற்றி னாயே வெந்தநீ றாடியா ராதியார் சோதியார் வேத கீதர் எந்தையா ரூர்தொழு துய்யலா மையல்கொண் டஞ்ச னெஞ்சே.2.079. 9
நெஞ்சே! தந்தை, தாய், உடன் பிறந்தார், புத்திரர், மனைவி ஆகிய பந்தங்களிலிருந்து விடுபடாதவர்க்கு உய்தி அடையும் உபாயம் இல்லை எனத் தௌந்து, வெந்த வெண்பொடி பூசியவரும், ஆதியான வரும் சோதியரும் வேதப்பாடல்களைப் பாடுபவரும், எந்தையும் ஆகிய ஆரூர் இறைவனைத் தொழுதால் உய்யலாம். மையல் கொண்டு அஞ்சாதே! 

2333 நெடியமால் பிரமனு நீண்டுமண் ணிடந்தின்ன நேடிக் காணாப் படியனார் பவளம்போல் உருவனார் பனிவளர் மலையாள் பாக வடிவனார் மதிபொதி சடையனார் மணியணி கண்டத் தெண்டோள் அடிகளா ரூர்தொழு துய்யலா மையல்கொண் டஞ்ச னெஞ்சே.2.079.10
நெஞ்சே! நெடிய உருவெடுத்த திருமால், பன்றி உருவெடுத்து மண்ணிடந்தும், பிரமன் அன்னவடிவெடுத்துப் பறந்து சென்றும் இன்றுவரை தேடிக் காணாத நிலையில் தன்மையால் உயர்ந்தவரும், பவளம் போன்ற உருவினரும் இமவான் மகளாகிய பார்வதி தேவியைப் பாகமாகக் கொண்ட வடிவினரும், பிறையணிந்த தலை முடியினரும் நீலமணிபோன்ற அழகிய கண்டத்தினரும் எட்டுத் தோள்களைக் கொண்டுள்ளவருமாகிய ஆரூர் அடிகளைத் தொழுதால் உய்யலாம். மையல் கொண்டு அஞ்சாதே! 

2334 பல்லிதழ் மாதவி யல்லிவண் டியாழ்செயுங் காழி யூரன் நல்லவே நல்லவே சொல்லிய ஞானசம் பந்த னாரூர் எல்லியம் போதெரி யாடுமெம் மீசனை யேத்து பாடல் சொல்லவே வல்லவர் நீதிலா ரோதநீர் வைய கத்தே.2.079.11
பலவாகிய இதழ்களையுடைய மாதவி மலரின், அக இதழ்களில் வண்டுகள் யாழ் போல ஒலி செய்து தேனுண்டு மகிழும் காழிப் பதியூரனும் நல்லனவற்றையே நாள்தோறும் சொல்லிவருபவனும் ஆகிய ஞானசம்பந்தன் இராப்போதில் எரியில் நின்று ஆடும், ஆரூரில் எழுந்தருளிய எம் ஈசனை ஏத்திப் போற்றிய இப்பதிகப் பாடல்களைச் சொல்லி வழிபட வல்லவர்கள் கடல் நீரால் சூழப்பட்ட இவ்வையத்தில் தீதிலர். 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 31 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.