|
||||||||
நான்காம் திருமுறை-45 |
||||||||
4.045.திருவொற்றியூர்
திருநேரிசை : பண் - கொல்லி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மாணிக்கத்தியாகர்.
தேவியார் - வடிவுடையம்மை.
444 வெள்ளத்தைச் சடையில் வைத்த
வேதகீ தன்றன் பாதம்
மௌளத்தா னடைய வேண்டின்
மெய்தரு ஞானத் தீயால்
கள்ளத்தைக் கழிய நின்றார்
காயத்துக் கலந்து நின்று
உள்ளத்து ளொளியு மாகு
மொற்றியூ ருடைய கோவே.
4.045.1
கங்கையைச் சடையில் வைத்தவனாய் வேதம்பாடும் பெருமானுடைய பாதங்களை மெதுவாக வழுவின்றிப் பெற விரும்பினால், மெய்ப்பொருளை வழங்கும் ஞானமாகிய தீயினால் கள்ளம் முதலிய குற்றங்களாகிய காட்டினை எரித்தொழித்துச் செப்பஞ் செய்த அடியவர்களுடைய உள்ளத்திலே ஒற்றியூர் உடைய பெருமான் சிவப்பிரகாசமாக விளங்குவான்.
445 வசிப்பெனும் வாழ்க்கை வேண்டா
வானவ ரிறைவ னின்று
புசிப்பதோர் பொள்ள லாக்கை
யதனொடும் புணர்வு வேண்டில்
அசிர்ப்பெனு மருந்த வத்தா
லான்மாவி னிடம் தாகி
உசிர்ப்பெனு முணர்வு முள்ளா
ரொற்றியூ ருடைய கோவே.
4.045.2
ஒரு குறுகிய காலத்து உயிர் வாழ்வதாகிய வாழ்க்கையை வாழ விரும்பாது, உணவு உண்பதனாலேயே செயற்படும் ஒன்பது துளைகளை உடைய இவ்வுடம்பில், தேவர்தலைவனாகிய எம் பெருமான் கூடி நிற்றலை விரும்புவீராயின், நீர் உடம்பு இளைக்க நோற்கும் அரிய தவத்தின் பயனாய் உம் ஆன்மாவில் இடம் பெற்று, உம் மூச்சுக்காற்றிலும் உணர்விலும் கலந்து உறைவான் திருவொற்றியூரை இடமாகக் கொண்ட எம்பெருமான்.
446 தானத்தைச் செய்து வாழ்வான்
சலத்துளே யழுந்து கின்றீர்
வானத்தை வணங்க வேண்டில்
வம்மின்கள் வல்லீ ராகில்
ஞானத்தை விளக்கை யேற்றி
நாடியுள் விரவ வல்லார்
ஊனத்தை யொழிப்பர் போலு
மொற்றியூ ருடைய கோவே.
4.045.3
பல கொடைகளைத் தக்கவருக்கு வழங்கி வாழும் பொருட்டுப் பலவித சஞ்சலங்களிலே அழுந்தி மன அலைதலைவுற்று நிற்கின்ற நீங்கள், சஞ்சலமற்ற வாழ்வு தரும் அருள் வெளியை வணங்குதற்கு ஆற்றல் உடையிராயின் வாருங்கள். சிவஞானமாகிய தீபத்தை ஏற்றி ஆராய்ந்து அநுபூதியில் கண்டு சிவனாந்தம் நுகரவல்ல அடியார்களுடைய பிறவிப் பிணியை அடியோடு கழித்து வீடுபேறு நல்குவான் ஒற்றியூர்ப் பெருமான்.
447 காமத்து ளழுந்தி நின்று
கண்டரா லொறுப்புண் ணாதே
சாமத்து வேத மாகி
நின்றதோர் சயம்பு தன்னை
ஏமத்து மிடையி ராவு
மேகாந்த மியம்பு வார்க்கு
ஓமத்து ளொளிய தாகு
மொற்றியூ ருடைய கோவே.
4.045.4
உலக வாழ்வில் பலபற்றுக்களில் பெரிதும் ஈடுபட்டுக் கூற்றுவனுடைய ஏவலர்களால் தண்டிக்கப்பெறாமல் சாமவேத கீதனாகிய தான்தோன்றி நாதனைப் பகற்பொழுதில் நான்கு யாமங்களிலும் இரவுப் பொழுதில் நள்ளிரவு ஒழிந்த யாமங்களிலும் தனித்திருந்து உறுதியாக மந்திரம் உச்சரித்து வழிபடுபவர்களுக்கு ஒற்றியூர்ப் பெருமான் வேள்வியின் ஞானத்தீயாகக் காட்சி வழங்குவான்.
448 சமையமே லாறு மாகித்
தானொரு சயம்பு வாகி
இமையவர் பரவி யேத்த
வினிதினங் கிருந்த வீசன்
கமையினை யுடைய ராகிக்
கழலடி பரவு வார்க்கு
உமையொரு பாகர் போலு
மொற்றியூ ருடைய கோவே.
4.045.5
அறுவகை வைதிகச் சமயங்களாகித் தான்தோன்றி நாதராய்த் தேவர்கள் முன்நின்று புகழ்ந்து துதிக்க, அவர்களிடையே மகிழ்வுடன் இருக்கும், எல்லோரையும் அடக்கியாளும் பெருமானாய், பகைவர் செய்யும் தீங்குகளையும் பொறுக்கும் பொறுமை உடையவர் ஆகித் தம் திருவடிகளை முன் நின்று வழிபடுபவர்களுக்கு பார்வதி பாகராய்க் காட்சி வழங்குவார் ஒற்றியூர்ப்பெருமான்.
449 ஒருத்திதன் றலைச்சென் றாளைக்
கரந்திட்டா னுலக மேத்த
ஒருத்திக்கு நல்ல னாகி
மறுப்படுத் தொளித்து மீண்டே
ஒருத்தியைப் பாகம் வைத்தா
னுணர்வினா லைய முண்ணி
ஒருத்திக்கு நல்ல னல்ல
னொற்றியூ ருடைய கோவே.
4.045.6
ஒற்றியூர்ப்பெருமான். தன் தலையை அடைந்த கங்கையைச் சடையில் மறைத்து அக்கங்கைக்கு இனியவன் போன்று அவளைச் சிறை செய்து மறைத்து, மீண்டும் பார்வதியாகிய ஒருத்தியை உடம்பின் ஒருபாகமாகக்கொண்டு, தன் விருப்பத்தோடு பிச்சை எடுத்து உண்ணும் அப்பெருமான் கங்கை உமை என்ற இருவருள் ஒருவருக்கும் நல்லவன் அல்லன்.
450 பிணமுடை யுடலுக் காகப்
பித்தராய்த் திரிந்து நீங்கள்
புணர்வெனும் போகம் வேண்டா
போக்கலாம் பொய்யை நீங்க
நிணமுடை நெஞ்சி னுள்ளா
னினைக்குமா நினைக்கின் றாருக்கு
உணர்வினோ டிருப்பர் போலு
மொற்றியூ ருடைய கோவே.
4.045.7
பிணமாதலும் முடை நாற்றமும் உடைய இவ்வுடம்பைப் பேணிப் பாதுகாப்பதற்காக அதனிடத்து விருப்பினிராய்த் திரிந்து சிற்றின்ப வேட்கையை நீவிர்கொள்ளற்க. போக்குவதற்கு உரியதாகும் பொய்யான இப்பிறவிப்பிணியைப் போக்க, கொழுப்பினை உடைய இவ்வுடலின் நெஞ்சினுள் கரந்து உறையும் இறைவரைத் தியானிக்கும் முறையாலே தியானிக்கும் அடியவர்களுக்கு ஒற்றியூர்ப் பெருமான் வாய்த்த சிவஞானத்தோடு குணியாய் இருந்து விளங்குவார்.
451 பின்னுவார் சடையான் றன்னைப்
பிதற்றிலாப் பேதை மார்கள்
துன்னுவார் நரகந் தன்னுட்
டொல்வினை தீர வேண்டின்
மன்னுவான் மறைக ளோதி
மனத்தினுள் விளக்கொன் றேற்றி
உன்னுவா ருள்ளத் துள்ளா
ரொற்றியூ ருடைய கோவே.
4.045.8
முறுக்கேறிய நீண்ட சடையை உடைய ஒற்றியூர்ப் பெருமானுடைய திருநாமங்களை அடைவு கேடாகப் பலகாலும் வாய்விட்டு உரைக்காத அறிவிலிகளே! நீர் இனி அடையப்போகும் நரகத்தில் அனுபவிக்கக் கூடிய பழைய வினைகள் நீங்கவேண்டும் என்று நீர் கருதினால் நிலைபெற்ற மேலான வேதங்களை ஓதி மனத்தினுள்ளே ஞானச் சுடர்விளக்கை ஏற்றித் தியானிப்பவர் உள்ளத்தில் அவர் உள்ளார் என்பதனை உணர்ந்து செயற்படுவீராக.
452 முள்குவார் போகம் வேண்டின்
முயற்றியா லிடர்கள் வந்தால்
எள்குவா ரௌகி நின்றங்
கிதுவொரு மாய மென்பார்
பள்குவார் பத்த ராகிப்
பாடியு மாடி நின்றும்
உள்குவா ருள்ளத் துள்ளா
ரொற்றியூ ருடைய கோவே.
4.045.9
நெஞ்சமே! உன்னால் தழுவப்படும் மகளிருடைய இன்பத்தை நீ விரும்பினால் அதனை அடையப்பலகாலும் முயல்கின்றாய், அவர்கள் உனக்கு ஒரு துயரம் வந்தால் அதனைத் தீர்க்க முற்படாமல் உன்னைப் பரிகசிப்பர். உன்னுடைய இந்த நிலை புதுமையாய் இருக்கிறது என்று இகழ்வார்கள். அம்மகளிர் மோகத்தை அச்சத்தால் விடுத்தவராய் ஒற்றியூர்ப் பெருமானுக்கு அடியவராய்ப் பாடியும் ஆடியும் நின்று தியானிப்பவர் உள்ளத்தில் அவர் நிலை பெற்றிருப்பவராய்த் துன்பம் வரும்போது அதனைத் துடைப்பவர் ஆவார் என்பதனை உணர்ந்து வாழ்.
453 வெறுத்துகப் புலன்க ளைந்தும்
வேண்டிற்று வேண்டு நெஞ்சே
மறுத்துக வார்வச் செற்றக்
குரோதங்க ளான மாயப்
பொறுத்துகப் புட்ப கத்தே
ருடையானை யடர வூன்றி
ஒறுத்துகந் தருள்கள் செய்தா
ரொற்றியூ ருடைய கோவே.
4.045.10
நெஞ்சே! புலன்கள் ஐந்தனையும் நுகரச் செய்யும் பொறிகள் ஐந்தும் நீ வெறுத்து அழியுமாறு தாம் முன்பு வேண்டியவற்றையே பலகாலும் வேண்டி நிற்கும். பொறிகளுக்கு இரை வழங்குதலை மறுத்து ஆர்வம் பகை கோபம் எனும் இவை அழியுமாறு மற்றவரால் வரக்கூடிய துன்பங்களைப் பொறுத்து மகிழ்வோடிருப்பாயாக. புட்பகவிமானத்தை உடைய இராவணனை முதலில் ஒறுத்துப் பின் உகந்து அருள் செய்தவர் ஒற்றியூர்ப் பெருமான்.
திருச்சிற்றம்பலம்
4.045.திருவொற்றியூர் திருநேரிசை : பண் - கொல்லி திருச்சிற்றம்பலம்
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - மாணிக்கத்தியாகர். தேவியார் - வடிவுடையம்மை.
444 வெள்ளத்தைச் சடையில் வைத்த வேதகீ தன்றன் பாதம் மௌளத்தா னடைய வேண்டின் மெய்தரு ஞானத் தீயால் கள்ளத்தைக் கழிய நின்றார் காயத்துக் கலந்து நின்று உள்ளத்து ளொளியு மாகு மொற்றியூ ருடைய கோவே.(4.045.1)
கங்கையைச் சடையில் வைத்தவனாய் வேதம்பாடும் பெருமானுடைய பாதங்களை மெதுவாக வழுவின்றிப் பெற விரும்பினால், மெய்ப்பொருளை வழங்கும் ஞானமாகிய தீயினால் கள்ளம் முதலிய குற்றங்களாகிய காட்டினை எரித்தொழித்துச் செப்பஞ் செய்த அடியவர்களுடைய உள்ளத்திலே ஒற்றியூர் உடைய பெருமான் சிவப்பிரகாசமாக விளங்குவான். 445 வசிப்பெனும் வாழ்க்கை வேண்டா வானவ ரிறைவ னின்று புசிப்பதோர் பொள்ள லாக்கை யதனொடும் புணர்வு வேண்டில் அசிர்ப்பெனு மருந்த வத்தா லான்மாவி னிடம் தாகி உசிர்ப்பெனு முணர்வு முள்ளா ரொற்றியூ ருடைய கோவே.(4.045.2)
ஒரு குறுகிய காலத்து உயிர் வாழ்வதாகிய வாழ்க்கையை வாழ விரும்பாது, உணவு உண்பதனாலேயே செயற்படும் ஒன்பது துளைகளை உடைய இவ்வுடம்பில், தேவர்தலைவனாகிய எம் பெருமான் கூடி நிற்றலை விரும்புவீராயின், நீர் உடம்பு இளைக்க நோற்கும் அரிய தவத்தின் பயனாய் உம் ஆன்மாவில் இடம் பெற்று, உம் மூச்சுக்காற்றிலும் உணர்விலும் கலந்து உறைவான் திருவொற்றியூரை இடமாகக் கொண்ட எம்பெருமான். 446 தானத்தைச் செய்து வாழ்வான் சலத்துளே யழுந்து கின்றீர் வானத்தை வணங்க வேண்டில் வம்மின்கள் வல்லீ ராகில் ஞானத்தை விளக்கை யேற்றி நாடியுள் விரவ வல்லார் ஊனத்தை யொழிப்பர் போலு மொற்றியூ ருடைய கோவே.(4.045.3)
பல கொடைகளைத் தக்கவருக்கு வழங்கி வாழும் பொருட்டுப் பலவித சஞ்சலங்களிலே அழுந்தி மன அலைதலைவுற்று நிற்கின்ற நீங்கள், சஞ்சலமற்ற வாழ்வு தரும் அருள் வெளியை வணங்குதற்கு ஆற்றல் உடையிராயின் வாருங்கள். சிவஞானமாகிய தீபத்தை ஏற்றி ஆராய்ந்து அநுபூதியில் கண்டு சிவனாந்தம் நுகரவல்ல அடியார்களுடைய பிறவிப் பிணியை அடியோடு கழித்து வீடுபேறு நல்குவான் ஒற்றியூர்ப் பெருமான்.
447 காமத்து ளழுந்தி நின்று கண்டரா லொறுப்புண் ணாதே சாமத்து வேத மாகி நின்றதோர் சயம்பு தன்னை ஏமத்து மிடையி ராவு மேகாந்த மியம்பு வார்க்கு ஓமத்து ளொளிய தாகு மொற்றியூ ருடைய கோவே. 4.045.4
உலக வாழ்வில் பலபற்றுக்களில் பெரிதும் ஈடுபட்டுக் கூற்றுவனுடைய ஏவலர்களால் தண்டிக்கப்பெறாமல் சாமவேத கீதனாகிய தான்தோன்றி நாதனைப் பகற்பொழுதில் நான்கு யாமங்களிலும் இரவுப் பொழுதில் நள்ளிரவு ஒழிந்த யாமங்களிலும் தனித்திருந்து உறுதியாக மந்திரம் உச்சரித்து வழிபடுபவர்களுக்கு ஒற்றியூர்ப் பெருமான் வேள்வியின் ஞானத்தீயாகக் காட்சி வழங்குவான்.
448 சமையமே லாறு மாகித் தானொரு சயம்பு வாகி இமையவர் பரவி யேத்த வினிதினங் கிருந்த வீசன் கமையினை யுடைய ராகிக் கழலடி பரவு வார்க்கு உமையொரு பாகர் போலு மொற்றியூ ருடைய கோவே.(4.045.5)
அறுவகை வைதிகச் சமயங்களாகித் தான்தோன்றி நாதராய்த் தேவர்கள் முன்நின்று புகழ்ந்து துதிக்க, அவர்களிடையே மகிழ்வுடன் இருக்கும், எல்லோரையும் அடக்கியாளும் பெருமானாய், பகைவர் செய்யும் தீங்குகளையும் பொறுக்கும் பொறுமை உடையவர் ஆகித் தம் திருவடிகளை முன் நின்று வழிபடுபவர்களுக்கு பார்வதி பாகராய்க் காட்சி வழங்குவார் ஒற்றியூர்ப்பெருமான்.
449 ஒருத்திதன் றலைச்சென் றாளைக் கரந்திட்டா னுலக மேத்த ஒருத்திக்கு நல்ல னாகி மறுப்படுத் தொளித்து மீண்டே ஒருத்தியைப் பாகம் வைத்தா னுணர்வினா லைய முண்ணி ஒருத்திக்கு நல்ல னல்ல னொற்றியூ ருடைய கோவே.(4.045.6)
ஒற்றியூர்ப்பெருமான். தன் தலையை அடைந்த கங்கையைச் சடையில் மறைத்து அக்கங்கைக்கு இனியவன் போன்று அவளைச் சிறை செய்து மறைத்து, மீண்டும் பார்வதியாகிய ஒருத்தியை உடம்பின் ஒருபாகமாகக்கொண்டு, தன் விருப்பத்தோடு பிச்சை எடுத்து உண்ணும் அப்பெருமான் கங்கை உமை என்ற இருவருள் ஒருவருக்கும் நல்லவன் அல்லன். 450 பிணமுடை யுடலுக் காகப் பித்தராய்த் திரிந்து நீங்கள் புணர்வெனும் போகம் வேண்டா போக்கலாம் பொய்யை நீங்க நிணமுடை நெஞ்சி னுள்ளா னினைக்குமா நினைக்கின் றாருக்கு உணர்வினோ டிருப்பர் போலு மொற்றியூ ருடைய கோவே.(4.045.7)
பிணமாதலும் முடை நாற்றமும் உடைய இவ்வுடம்பைப் பேணிப் பாதுகாப்பதற்காக அதனிடத்து விருப்பினிராய்த் திரிந்து சிற்றின்ப வேட்கையை நீவிர்கொள்ளற்க. போக்குவதற்கு உரியதாகும் பொய்யான இப்பிறவிப்பிணியைப் போக்க, கொழுப்பினை உடைய இவ்வுடலின் நெஞ்சினுள் கரந்து உறையும் இறைவரைத் தியானிக்கும் முறையாலே தியானிக்கும் அடியவர்களுக்கு ஒற்றியூர்ப் பெருமான் வாய்த்த சிவஞானத்தோடு குணியாய் இருந்து விளங்குவார்.
451 பின்னுவார் சடையான் றன்னைப் பிதற்றிலாப் பேதை மார்கள் துன்னுவார் நரகந் தன்னுட் டொல்வினை தீர வேண்டின் மன்னுவான் மறைக ளோதி மனத்தினுள் விளக்கொன் றேற்றி உன்னுவா ருள்ளத் துள்ளா ரொற்றியூ ருடைய கோவே.(4.045.8)
முறுக்கேறிய நீண்ட சடையை உடைய ஒற்றியூர்ப் பெருமானுடைய திருநாமங்களை அடைவு கேடாகப் பலகாலும் வாய்விட்டு உரைக்காத அறிவிலிகளே! நீர் இனி அடையப்போகும் நரகத்தில் அனுபவிக்கக் கூடிய பழைய வினைகள் நீங்கவேண்டும் என்று நீர் கருதினால் நிலைபெற்ற மேலான வேதங்களை ஓதி மனத்தினுள்ளே ஞானச் சுடர்விளக்கை ஏற்றித் தியானிப்பவர் உள்ளத்தில் அவர் உள்ளார் என்பதனை உணர்ந்து செயற்படுவீராக.
452 முள்குவார் போகம் வேண்டின் முயற்றியா லிடர்கள் வந்தால் எள்குவா ரௌகி நின்றங் கிதுவொரு மாய மென்பார் பள்குவார் பத்த ராகிப் பாடியு மாடி நின்றும் உள்குவா ருள்ளத் துள்ளா ரொற்றியூ ருடைய கோவே.(4.045.9)
நெஞ்சமே! உன்னால் தழுவப்படும் மகளிருடைய இன்பத்தை நீ விரும்பினால் அதனை அடையப்பலகாலும் முயல்கின்றாய், அவர்கள் உனக்கு ஒரு துயரம் வந்தால் அதனைத் தீர்க்க முற்படாமல் உன்னைப் பரிகசிப்பர். உன்னுடைய இந்த நிலை புதுமையாய் இருக்கிறது என்று இகழ்வார்கள். அம்மகளிர் மோகத்தை அச்சத்தால் விடுத்தவராய் ஒற்றியூர்ப் பெருமானுக்கு அடியவராய்ப் பாடியும் ஆடியும் நின்று தியானிப்பவர் உள்ளத்தில் அவர் நிலை பெற்றிருப்பவராய்த் துன்பம் வரும்போது அதனைத் துடைப்பவர் ஆவார் என்பதனை உணர்ந்து வாழ்.
453 வெறுத்துகப் புலன்க ளைந்தும் வேண்டிற்று வேண்டு நெஞ்சே மறுத்துக வார்வச் செற்றக் குரோதங்க ளான மாயப் பொறுத்துகப் புட்ப கத்தே ருடையானை யடர வூன்றி ஒறுத்துகந் தருள்கள் செய்தா ரொற்றியூ ருடைய கோவே.(4.045.10)
நெஞ்சே! புலன்கள் ஐந்தனையும் நுகரச் செய்யும் பொறிகள் ஐந்தும் நீ வெறுத்து அழியுமாறு தாம் முன்பு வேண்டியவற்றையே பலகாலும் வேண்டி நிற்கும். பொறிகளுக்கு இரை வழங்குதலை மறுத்து ஆர்வம் பகை கோபம் எனும் இவை அழியுமாறு மற்றவரால் வரக்கூடிய துன்பங்களைப் பொறுத்து மகிழ்வோடிருப்பாயாக. புட்பகவிமானத்தை உடைய இராவணனை முதலில் ஒறுத்துப் பின் உகந்து அருள் செய்தவர் ஒற்றியூர்ப் பெருமான்.
திருச்சிற்றம்பலம் |
||||||||
by Swathi on 18 Jul 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|