தேவையானவை :
கறிவேப்பிலை - 1 கட்டு சின்ன வெங்காயம் - 1 கப் தக்காளி - ஒன்று பச்சை மிளகாய் - 2 கடலைப்பருப்பு - அரை டேபிள் ஸ்பூன் உடைத்த உளுந்து - அரை டேபிள் ஸ்பூன் புளி - சிறியது தேங்காய் துருவல் - 1 டேபிள் ஸ்பூன் பூண்டு - 3 இஞ்சி - சிறு துண்டு உப்பு - தேவையான அளவு
தாளிக்க
கடுகு - அரை டேபிள் ஸ்பூன் கடலைப்பருப்பு - கால் டேபிள் ஸ்பூன் உடைத்த உளுந்து - கால் டேபிள் ஸ்பூன் பெருங்காயம் - சிறிது எண்ணெய் - சிறிது கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை :
1.சிறிது எண்ணெயை விட்டு கருவேப்பிலையை நன்றாக வறுத்துக்கொள்ளவும். 2. வாணலியில் சிறிது எண்ணெயைவிட்டு கடலைபருப்பையும் உளுந்தையும் சிவக்க வறுத்துக் கொள்ளவும். 3. பிறகு அதில் வெங்காயத்தைக் கொட்டி சிவக்க வதக்கவும். 4.அதனுடன் தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு போட்டு, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். 5. பிறகு அதில் புளியைச் சேர்க்கவும். பின்னர் இறக்கிவைத்து தேங்காய் துருவலைச் சேர்த்து ஆறவைக்கவும். 6.பிறகு அனைத்தையும் சேர்த்து கெட்டியாக அரைக்கவேண்டும் அதனுடன் உப்பு செரித்து ருசிபார்க்கவும் . 7. அடுத்து தாளிக்கும் பொருள்களைக் கொண்டு தாளிக்கவேண்டும் .சுவையான தக்காளி சட்னி தயார்.இட்லிக்கு பொருத்தமாக இருக்கும்.
|