LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- எட்டுத்தொகை

குறுந்தொகை பகுதி -3

 

51. நெய்தல் - தோழி கூற்று
கூன்முண் முண்டகக் கூர்ம்பனி மாமலர்
நூலறு முத்திற் காலொடு பாறித்
துறைதொறும் பரக்குந் தூமணற் சேர்ப்பனை
யானும் காதலென் யாயுநனி வெய்யள்
எந்தையுங் கொடீஇயர் வேண்டும் 5
அம்ப லூரும் அவனொடு மொழிமே.  
- குன்றியனார்.  
52. குறிஞ்சி - தோழி கூற்று
ஆர்களிறு மிதித்த நீர்திகழ் சிலம்பிற்
சூர்நசைந் தனையையாய் நடுங்கல் கண்டே
நரந்த நாறுங் குவையிருங் கூந்தல்
நிரந்திலங்கு வெண்பல் மடந்தை
பரிந்தனென் அல்லனோ இறையிறை யானே. 5
- பனம்பாரனார்  
.
53. மருதம் - தோழி கூற்று
எம்மணங் கினவே மகிழ்ந முன்றில்
நனைமுதிர் புன்கின் பூத்தாழ் வெண்மணல்
வேலன் புனைந்த வெறியயர் களந்தொறும்
செந்நெல் வான்பொரி சிதறி யன்ன
எக்கர் நண்ணிய எம்மூர் வியன்துறை 5
நேரிறை முன்கை பற்றிச்
சூரர மகளிரோ டுற்ற சூளே.  
- கோப்பெருஞ் சோழன்.  
54. குறிஞ்சி - தலைவி கூற்று
யானே யீண்டை யேனே யென்னலனே
ஏனல் காவலர் கவணொலி வெரீஇக்
கான யானை கைவிடு பசுங்கழை
மீனெறி தூண்டிலி னிவக்கும்
கானக நாடனொ டாண்டொழிந் தன்றே. 5
- மீனெறிதூண்டிலார்.  
55. நெய்தல் - தோழி கூற்று
மாக்கழி மணிப்பூக் கூம்பத் தூத்திரைப்
பொங்குபிதிர்த் துவலையொடு மங்குல் தைஇக்
கையற வந்த தைவரல் ஊதையொடு
இன்னா உறையுட் டாகும்
சின்னாட் டம்மவிச் சிறுநல் லூரே. 5
- நெய்தற் கார்க்கியர்.  
56. பாலை - தலைவன் கூற்று
வேட்டச் செந்நாய் கிளைத்தூண் மிச்சில்
குளவி மொய்த்த அழுகற் சின்னீர்
வளையுடைக் கைய ளெம்மோ டுணீஇயர்
வருகதில் அம்ம தானே
அளியளோ அளியளெந் நெஞ்சமர்ந் தோளே. 5
- சிறைக்குடி ஆந்தையார்.  
57. நெய்தல் - தலைவி கூற்று
பூவிடைப் படினும் யாண்டு கழிந்தன்ன
நீருறை மகன்றிற் புணர்ச்சி போலப்
பிரிவரி தாகிய தண்டாக் காமமொடு
உடனுயிர் போகுக தில்ல கடனறிந்
திருவேம் ஆகிய வுலகத் 5
தொருவே மாகிய புன்மை நாம் உயற்கே.  
- சிறைக்குடி ஆந்தையார்.  
58. குறிஞ்சி - தலைவன் கூற்று
இடிக்குங் கேளிர் நுங்குறை ஆக
நிறுக்க லாற்றினோ நன்றுமற் றில்ல
ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கிற்
கையில் ஊமன் கண்ணிற் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போலப் 5
பரந்தன் றிந்நோய் நோன்றுகொளற் கரிதே.  
- வெள்ளி வீதியார்.  
59. பாலை - தோழி கூற்று
பதலைப் பாணிப் பரிசிலர் கோமான்
அதலைக் குன்றத் தகல்வாய்க் குண்டுசுனைக்
குவளையொடு பொதிந்த குளவி நாறுநின்
நறுநுதன் மறப்பரோ மற்றே முயலவும்
சுரம்பல விலங்கிய அரும்பொருள் 5
நிரம்பா ஆகலின் நீடலோ இன்றே.  
- மோசி கீரனார்.  
60. குறிஞ்சி - தலைவி கூற்று
குறுந்தாட் கூதளி யாடிய நெடுவரைப்
பெருந்தேன் கண்ட இருங்கால் முடவன்
உட்கைச் சிறுகுடை கோலிக் கீழிருந்து
சுட்டுபு நக்கி யாங்குக் காதலர்
நல்கார் நயவா ராயினும் 5
பல்காற் காண்டலும் உள்ளத்துக் கினிதே.  
- பரணர்.  
61. மருதம் - தோழி கூற்று
தச்சன் செய்த சிறுமா வையம்
ஊர்ந்தின் புறாஅர் ஆயினுங் கையின்
ஈர்த்தின் புறூஉம் இளையோர் போல
உற்றின் புறேஎம் ஆயினும் நற்றேர்ப்
பொய்கை யூரன் கேண்மை 5
செய்தின் புற்றனெஞ் செறிந்தன வளையே.  
- தும்பிசேர் கீரனார்.  
62. குறிஞ்சி - தலைவன் கூற்று
கோடல் எதிர்முகைப் பசுவீ முல்லை
நாறிதழ்க் குவளையொ டிடையிடுபு விரைஇ
ஐதுதொடை மாண்ட கோதை போல
நறிய நல்லோள் மேனி
முறியினும் வாய்வது முயங்கற்கும் இனிதே. 5
- சிறைக்குடி ஆந்தையார்.  
63. பாலை - தலைவன் கூற்று
ஈதலும் துய்த்தலும் இல்லோர்க் கில்லெனச்
செய்வினை கைம்மிக எண்ணுதி அவ்வினைக்கு
அம்மா அரிவையும் வருமோ
எம்மை உய்த்தியோ உரைத்திசின் நெஞ்சே.  
- உகாய்க்குடிகிழார்  
64. முல்லை - தலைவி கூற்று
பல்லா நெடுநெறிக் ககன்று வந்தெனப்
புன்றலை மன்றம் நோக்கி மாலை
மடக்கண் குழவி அலவந் தன்ன
நோயேம் ஆகுதல் அறிந்தும்
சேயர்தோழி சேய்நாட் டோரே. 5
- கருவூர்க் கதப்பிள்ளை.  
65. முல்லை - தலைவி கூற்று
வன்பரல் தெள்ளறல் பருகிய இரலைதன்
இன்புறு துணையொடு மறுவந் துகளத்
தான்வந் தன்றே தளிதரு தண்கார்
வாரா துறையுநர் வரனசைஇ
வருந்திநொந் துறைய இருந்திரோ எனவே. 5
- கோவூர்கிழார்.  
66. முல்லை - தோழி கூற்று
மடவ மன்ற தடவுநிலைக் கொன்றை
கல்பிறங் கத்தஞ் சென்றோர் கூறிய
பருவம் வாரா அளவை நெரிதரக்
கொம்புசேர் கொடியிணர் ஊழ்த்த
வம்ப மாரியைக் காரென மதித்தே. 5
- கோவர்த்தனார்.  
67. பாலை - தலைவி கூற்று
உள்ளார் கொல்லோ தோழி கிள்ளை
வளைவாய்க் கொண்ட வேப்ப ஒண்பழம்
புதுநாண் நுழைப்பான் நுதிமாண் வள்ளுகிர்ப்
பொலங்கல ஒருகா சேய்க்கும்
நிலங்கரி கள்ளியங் காடிறந் தோரே. 5
- அள்ளூர் நன்முல்லையார்.  
68. குறிஞ்சி - தலைவி கூற்று
பூழ்க்கா லன்ன செங்கால் உழுந்தின்
ஊழ்ப்படு முதுகாய் உழையினங் கவரும்
அரும்பனி அற்சிரந் தீர்க்கும்
மருந்துபிறி தில்லையவர் மணந்த மார்பே.  
- அள்ளூர் நன்முல்லையார்.  
69. குறிஞ்சி - தோழி கூற்று
கருங்கண் தாக்கலை பெரும்பிறி துற்றெனக்
கைம்மை உய்யாக் காமர் மந்தி
கல்லா வன்பறழ் கிளைமுதற் சேர்த்தி
ஓங்குவரை அடுக்கத்துப் பாய்ந்துயிர் செகுக்கும்
சாரல் நாட நடுநாள் 5
வாரல் வாழியோ வருந்துதும் யாமே.  
- கடுந்தோட் கரவீரனார்.  
70. குறிஞ்சி - தலைவன் கூற்று
ஒடுங்கீர் ஓதி ஒண்ணுதற் குறுமகள்
நறுந்தண் ணீரள் ஆரணங் கினளே
இனையள் என்றவட் புனையள வறியேன்
சிலமெல் லியவே கிளவி
அணைமெல் லியள்யான் முயங்குங் காலே. 5
- ஓரம்போகியார்.  
71. பாலை - தலைவன் கூற்று
மருந்தெனின் மருந்தே வைப்பெனின் வைப்பே
அரும்பிய சுணங்கின் அம்பகட் டிளமுலைப்
பெருந்தோள் நுணுகிய நுசுப்பிற்
கல்கெழு கானவர் நல்குறு மகளே.  
- கருவூர் ஓதஞானியார்.  
72. குறிஞ்சி - தலைவன் கூற்று
பூவொத் தலமருந் தகைய ஏவொத்து
எல்லாரும் அறிய நோய்செய் தனவே
தேமொழித் திரண்ட மென்தோள் மாமலைப்
பரீஇ வித்திய ஏனற்
குரீஇ ஓப்புவாள் பெருமழைக் கண்ணே. 5
- மள்ளனார்.  
73. குறிஞ்சி - தோழி கூற்று
மகிழ்நன் மார்பே வெய்யை யானீ
அழியல் வாழி தோழி நன்னன்
நறுமா கொன்று நாட்டிற் போக்கிய
ஒன்று மொழிக் கோசர் போல
வன்கட் சூழ்ச்சியும் வேண்டுமாற் சிறிதே. 5
- பரணர்.  
74. குறிஞ்சி - தோழி கூற்று
விட்ட குதிரை விசைப்பி னன்ன
விசும்புதோய் பசுங்கழைக் குன்ற நாடன்
யாம்தற் படர்ந்தமை அறியான் தானும்
வேனில் ஆனேறுபோலச்
சாயினன் என்பநம் மாணலம் நயந்தே. 5
- விட்டகுதிரையார்.  
75. மருதம் - தலைவி கூற்று
நீகண் டனையோ கண்டார்க் கேட்டனையோ
ஒன்று தெளிய நசையினம் மொழிமோ
வெண்கோட் டியானை சோணை படியும்
பொன்மலி பாடலி பெறீஇயர்
யார்வாய்க் கேட்டனை காதலர் வரவே. 5
- படுமரத்து மோசிகீரனார்.  

51. நெய்தல் - தோழி கூற்று
கூன்முண் முண்டகக் கூர்ம்பனி மாமலர்நூலறு முத்திற் காலொடு பாறித்துறைதொறும் பரக்குந் தூமணற் சேர்ப்பனையானும் காதலென் யாயுநனி வெய்யள்எந்தையுங் கொடீஇயர் வேண்டும் 5அம்ப லூரும் அவனொடு மொழிமே.  - குன்றியனார்.  


52. குறிஞ்சி - தோழி கூற்று
ஆர்களிறு மிதித்த நீர்திகழ் சிலம்பிற்சூர்நசைந் தனையையாய் நடுங்கல் கண்டேநரந்த நாறுங் குவையிருங் கூந்தல்நிரந்திலங்கு வெண்பல் மடந்தைபரிந்தனென் அல்லனோ இறையிறை யானே. 5- பனம்பாரனார்  
.

53. மருதம் - தோழி கூற்று
எம்மணங் கினவே மகிழ்ந முன்றில்நனைமுதிர் புன்கின் பூத்தாழ் வெண்மணல்வேலன் புனைந்த வெறியயர் களந்தொறும்செந்நெல் வான்பொரி சிதறி யன்னஎக்கர் நண்ணிய எம்மூர் வியன்துறை 5நேரிறை முன்கை பற்றிச்சூரர மகளிரோ டுற்ற சூளே.  - கோப்பெருஞ் சோழன்.  


54. குறிஞ்சி - தலைவி கூற்று
யானே யீண்டை யேனே யென்னலனேஏனல் காவலர் கவணொலி வெரீஇக்கான யானை கைவிடு பசுங்கழைமீனெறி தூண்டிலி னிவக்கும்கானக நாடனொ டாண்டொழிந் தன்றே. 5- மீனெறிதூண்டிலார்.  


55. நெய்தல் - தோழி கூற்று
மாக்கழி மணிப்பூக் கூம்பத் தூத்திரைப்பொங்குபிதிர்த் துவலையொடு மங்குல் தைஇக்கையற வந்த தைவரல் ஊதையொடுஇன்னா உறையுட் டாகும்சின்னாட் டம்மவிச் சிறுநல் லூரே. 5- நெய்தற் கார்க்கியர்.  


56. பாலை - தலைவன் கூற்று
வேட்டச் செந்நாய் கிளைத்தூண் மிச்சில்குளவி மொய்த்த அழுகற் சின்னீர்வளையுடைக் கைய ளெம்மோ டுணீஇயர்வருகதில் அம்ம தானேஅளியளோ அளியளெந் நெஞ்சமர்ந் தோளே. 5- சிறைக்குடி ஆந்தையார்.  


57. நெய்தல் - தலைவி கூற்று
பூவிடைப் படினும் யாண்டு கழிந்தன்னநீருறை மகன்றிற் புணர்ச்சி போலப்பிரிவரி தாகிய தண்டாக் காமமொடுஉடனுயிர் போகுக தில்ல கடனறிந்திருவேம் ஆகிய வுலகத் 5தொருவே மாகிய புன்மை நாம் உயற்கே.  - சிறைக்குடி ஆந்தையார்.  


58. குறிஞ்சி - தலைவன் கூற்று
இடிக்குங் கேளிர் நுங்குறை ஆகநிறுக்க லாற்றினோ நன்றுமற் றில்லஞாயிறு காயும் வெவ்வறை மருங்கிற்கையில் ஊமன் கண்ணிற் காக்கும்வெண்ணெய் உணங்கல் போலப் 5பரந்தன் றிந்நோய் நோன்றுகொளற் கரிதே.  - வெள்ளி வீதியார்.  


59. பாலை - தோழி கூற்று
பதலைப் பாணிப் பரிசிலர் கோமான்அதலைக் குன்றத் தகல்வாய்க் குண்டுசுனைக்குவளையொடு பொதிந்த குளவி நாறுநின்நறுநுதன் மறப்பரோ மற்றே முயலவும்சுரம்பல விலங்கிய அரும்பொருள் 5நிரம்பா ஆகலின் நீடலோ இன்றே.  - மோசி கீரனார்.  


60. குறிஞ்சி - தலைவி கூற்று
குறுந்தாட் கூதளி யாடிய நெடுவரைப்பெருந்தேன் கண்ட இருங்கால் முடவன்உட்கைச் சிறுகுடை கோலிக் கீழிருந்துசுட்டுபு நக்கி யாங்குக் காதலர்நல்கார் நயவா ராயினும் 5பல்காற் காண்டலும் உள்ளத்துக் கினிதே.  - பரணர்.  


61. மருதம் - தோழி கூற்று
தச்சன் செய்த சிறுமா வையம்ஊர்ந்தின் புறாஅர் ஆயினுங் கையின்ஈர்த்தின் புறூஉம் இளையோர் போலஉற்றின் புறேஎம் ஆயினும் நற்றேர்ப்பொய்கை யூரன் கேண்மை 5செய்தின் புற்றனெஞ் செறிந்தன வளையே.  - தும்பிசேர் கீரனார்.  


62. குறிஞ்சி - தலைவன் கூற்று
கோடல் எதிர்முகைப் பசுவீ முல்லைநாறிதழ்க் குவளையொ டிடையிடுபு விரைஇஐதுதொடை மாண்ட கோதை போலநறிய நல்லோள் மேனிமுறியினும் வாய்வது முயங்கற்கும் இனிதே. 5- சிறைக்குடி ஆந்தையார்.  


63. பாலை - தலைவன் கூற்று
ஈதலும் துய்த்தலும் இல்லோர்க் கில்லெனச்செய்வினை கைம்மிக எண்ணுதி அவ்வினைக்குஅம்மா அரிவையும் வருமோஎம்மை உய்த்தியோ உரைத்திசின் நெஞ்சே.  - உகாய்க்குடிகிழார்  


64. முல்லை - தலைவி கூற்று
பல்லா நெடுநெறிக் ககன்று வந்தெனப்புன்றலை மன்றம் நோக்கி மாலைமடக்கண் குழவி அலவந் தன்னநோயேம் ஆகுதல் அறிந்தும்சேயர்தோழி சேய்நாட் டோரே. 5- கருவூர்க் கதப்பிள்ளை.  


65. முல்லை - தலைவி கூற்று
வன்பரல் தெள்ளறல் பருகிய இரலைதன்இன்புறு துணையொடு மறுவந் துகளத்தான்வந் தன்றே தளிதரு தண்கார்வாரா துறையுநர் வரனசைஇவருந்திநொந் துறைய இருந்திரோ எனவே. 5- கோவூர்கிழார்.  


66. முல்லை - தோழி கூற்று
மடவ மன்ற தடவுநிலைக் கொன்றைகல்பிறங் கத்தஞ் சென்றோர் கூறியபருவம் வாரா அளவை நெரிதரக்கொம்புசேர் கொடியிணர் ஊழ்த்தவம்ப மாரியைக் காரென மதித்தே. 5- கோவர்த்தனார்.  


67. பாலை - தலைவி கூற்று
உள்ளார் கொல்லோ தோழி கிள்ளைவளைவாய்க் கொண்ட வேப்ப ஒண்பழம்புதுநாண் நுழைப்பான் நுதிமாண் வள்ளுகிர்ப்பொலங்கல ஒருகா சேய்க்கும்நிலங்கரி கள்ளியங் காடிறந் தோரே. 5- அள்ளூர் நன்முல்லையார்.  


68. குறிஞ்சி - தலைவி கூற்று
பூழ்க்கா லன்ன செங்கால் உழுந்தின்ஊழ்ப்படு முதுகாய் உழையினங் கவரும்அரும்பனி அற்சிரந் தீர்க்கும்மருந்துபிறி தில்லையவர் மணந்த மார்பே.  - அள்ளூர் நன்முல்லையார்.  


69. குறிஞ்சி - தோழி கூற்று
கருங்கண் தாக்கலை பெரும்பிறி துற்றெனக்கைம்மை உய்யாக் காமர் மந்திகல்லா வன்பறழ் கிளைமுதற் சேர்த்திஓங்குவரை அடுக்கத்துப் பாய்ந்துயிர் செகுக்கும்சாரல் நாட நடுநாள் 5வாரல் வாழியோ வருந்துதும் யாமே.  - கடுந்தோட் கரவீரனார்.  


70. குறிஞ்சி - தலைவன் கூற்று
ஒடுங்கீர் ஓதி ஒண்ணுதற் குறுமகள்நறுந்தண் ணீரள் ஆரணங் கினளேஇனையள் என்றவட் புனையள வறியேன்சிலமெல் லியவே கிளவிஅணைமெல் லியள்யான் முயங்குங் காலே. 5- ஓரம்போகியார்.  


71. பாலை - தலைவன் கூற்று
மருந்தெனின் மருந்தே வைப்பெனின் வைப்பேஅரும்பிய சுணங்கின் அம்பகட் டிளமுலைப்பெருந்தோள் நுணுகிய நுசுப்பிற்கல்கெழு கானவர் நல்குறு மகளே.  - கருவூர் ஓதஞானியார்.  


72. குறிஞ்சி - தலைவன் கூற்று
பூவொத் தலமருந் தகைய ஏவொத்துஎல்லாரும் அறிய நோய்செய் தனவேதேமொழித் திரண்ட மென்தோள் மாமலைப்பரீஇ வித்திய ஏனற்குரீஇ ஓப்புவாள் பெருமழைக் கண்ணே. 5- மள்ளனார்.  


73. குறிஞ்சி - தோழி கூற்று
மகிழ்நன் மார்பே வெய்யை யானீஅழியல் வாழி தோழி நன்னன்நறுமா கொன்று நாட்டிற் போக்கியஒன்று மொழிக் கோசர் போலவன்கட் சூழ்ச்சியும் வேண்டுமாற் சிறிதே. 5- பரணர்.  


74. குறிஞ்சி - தோழி கூற்று
விட்ட குதிரை விசைப்பி னன்னவிசும்புதோய் பசுங்கழைக் குன்ற நாடன்யாம்தற் படர்ந்தமை அறியான் தானும்வேனில் ஆனேறுபோலச்சாயினன் என்பநம் மாணலம் நயந்தே. 5- விட்டகுதிரையார்.  


75. மருதம் - தலைவி கூற்று
நீகண் டனையோ கண்டார்க் கேட்டனையோஒன்று தெளிய நசையினம் மொழிமோவெண்கோட் டியானை சோணை படியும்பொன்மலி பாடலி பெறீஇயர்யார்வாய்க் கேட்டனை காதலர் வரவே. 5- படுமரத்து மோசிகீரனார்.

by C.Malarvizhi   on 27 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.