|
||||||||
கறி அடை (kari adai) |
||||||||
தேவையானவை: மட்டன் – கால் கிலோ இஞ்சி – 2 டீஸ்பூன் பூண்டு – 2 டீஸ்பூன் தயிர் – 3 டேபிள் ஸ்பூன் தக்காளி- 2 வெங்காயம் -பாதி கருவா- சிறியதுண்டு ஏலம்- 2 கிராம்பு – 4 தனியாதூள் – 1 டீஸ்பூன் சோம்புதூள் – 1 டீஸ்பூன் சீரகத்தூள் – 1 டீஸ்பூன் மசலாதூள் – 1 1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள் – 1 1/2 டீஸ்பூன் பச்சைமிளகாய் – 2 அரிசிமாவு – 1 1/2 கப் முட்டை – 1 தேங்காய்பால் – 1 கப் உப்பு – தேவையான அளவு எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் கருவேப்பிலை- சிறிது செய்முறை: 1.முதலில் அரிசிமாவில் தேங்காய்ப்பால் முக்கால் கப் ஊற்றி,முட்டை,சிறிது உப்பு,அரை தேக்கரண்டி மஞ்சள்தூள் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு பிசைந்து தனியே ஊறவைக்கவும் 2.பின்பு கறியை கழுவி மிகவும் சிறியதாக நறுக்கிக்கொள்ளவும்.கறியில் இஞ்சி 1 டீஸ்பூன் ,பூண்டு 1 டீஸ்பூன் ,தயிர் 1 1/2 டேபிள் ஸ்பூன்,தக்காளி பொடியாக நறுக்கிபோடவும்.வெங்காயம்,பொடியாகநறுக்கிபோடவும்மசலாதூள்,மஞ்சள்தூள் தனியாதூள்,சோம்புதூள்,சீரகத்தூள்,உப்பு,பச்சைமிளகாய் கீறிப்போட்டு வைக்கவும் 3.ஒரு கடாயை அடுப்பில் வைத்து 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கருவா,ஏலம்,கிராம்பு,போட்டு பொரிந்ததும்,மீதியுள்ள இஞ்சி,பூண்டு ,தயிர் போட்டு தாளித்து,கருவேப்பிலை,வெங்காயம் சிறிது போட்டு வதக்கி கறியை போட்டு கிளறி கால் கப் தேங்காய்பால் சிறிது தண்ணீர் ஊற்றி வேகவிடவும். 4.கறி நன்கு வெந்ததும் ஒரு தண்ணீர்கூட இல்லாமல் நன்கு வற்றிய உடன் அந்த கறியை எடுத்து அரிசிமாவு கலவையில் சேர்த்து நன்கு பிசைந்துவிடவும். 5.ஒரு தவாவை அடுப்பில் வைத்து ஒன்றைஸ்பூன் மாவை ஊற்றி வெந்ததும் திருப்பிபோட்டு சிறிது எண்ணெய் ஊற்றி வேகவிடவும். வெந்ததும் சூடாக எடுத்து பரிமாறவும் |
||||||||
by kavitha on 30 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|