|
||||||||
ஐந்தாம் திருமுறை-37 |
||||||||
5.037.திருக்கடவூர்வீரட்டம்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பிரமபுரீசுவரர்.
தேவியார் - மலர்க்குழல்மின்னம்மை.
1437 மலைக்கொ ளானை மயக்கிய வல்வினை
நிலைக்கொ ளானை நினைப்புறு நெஞ்சமே
கொலைக்கை யானையுங் கொன்றிடு மாதலால்
கலைக்கை யானைகண் டீர்கட வூரரே. 5.037.1
திருக்கடவூரில் மேவும் பெருமான், மலையில் வாழும் யானை போன்று மயக்கம் செய்த கொடிய வினைகளுக்கே நிலைக்களமாய் யானைபோன்று அடங்காது பலவற்றையும் நினைக்கின்ற நல்வினைகளாகிய யானைகளையும் ஏனைய மதயானையையும் அழிக்கும் இயல்பினர் கலையின் பயனாகிய ஒழுக்கத்தால் அடையத்தகும் யானை போன்றவர்.
1438 வெள்ளி மால்வரை போல்வதொ ரானையார்
உள்ள வாறெனை யுள்புகு மானையார்
கொள்ள மாகிய கோயிலு ளானையார்
கள்ள வானைகண் டீர்கட வூரரே. 5.037.2
வெள்ளிமால்வரை போன்ற அயிராவணம் என்னும் ஒப்பற்ற ஆனையை உடையார்; உள்ளவாறே என் உள்ளத்தில் புகுகின்ற ஆனைபோல்வார்; கொள்ளும் இடமாகிய கோயிலுள் ஆனையாய் உள்ளவர்; ஆதலின் கடவூர்த்தலத்து இறைவர் கள்ளம் உடைய ஆனைபோல்வார்; காண்பீர்களாக.
1439 ஞான மாகிய நன்குண ரானையார்
ஊனை வேவ வுருக்கிய வானையார்
வேன லானை யுரித்துமை யஞ்சவே
கான லானைகண் டீர்கட வூரரே. 5.037.3
ஞானமாகிய நன்குணரத்தக்க ஆனையார்; உடற்பொதியைமேவுமாறு உருக்கி உள்ளொளிபெருக்கும் ஆனையார்; ஆனையை உமாதேவியார் அஞ்சுமாறு உரித்த கடவூர்த் தலத்து இறைவர்; கானல் ஆனையும் போல்வர்; காண்பீர்களாக.
1440 ஆல முண்டழ காயதொ ரானையார்
நீல மேனி நெடும்பளிங் கானையார்
கோல மாய கொழுஞ்சுட ரானையார்
கால வானைகண் டீர்கட வூரரே. 5.037.4
நஞ்சினை உண்டும் அழகுபெற்ற ஆனையார்; நீல மேனியை ஒருபாகத்தே உடைய நீண்ட பளிங்கனைய ஆனையார்; கொழுவிய சுடர்விடும் கோலம் உடைய ஆனையார்; கடவூர்த் தலத்திறைவர் கால ஆனை போல்வர்; காண்பீர்களாக.
1441 அளித்த ஆன் அஞ்சு மாடிய வானையார்
வெளுத்த நீள்கொடி யேறுடை யானையார்
எளித்த வேழத்தை எள்குவித் தானையார்
களித்த வானைகண் டீர்கட வூரரே. 5.037.5
அன்பர்கள் பரிந்து கொடுக்கும் பஞ்ச கவ்வியங்களை ஆடிய ஆனையார்; வெண்மையான இடபக்கொடி உடைய ஆனையார்; இகழ்ந்து வந்த யானையினை எல்லோரும் எள்குமாறு உரித்த ஆனையார்; கடவூர்த்தலத்திறைவர் களிப்புற்ற யானை போல்வர்; காண்பீர்களாக.
1442 விடுத்த மால்வரை விண்ணுற வானையார்
தொடுத்த மால்வரை தூயதொ ரானையார்
கடுத்த காலனைக் காய்ந்ததொ ரானையார்
கடுத்த வானைகண் டீர்கட வூரரே. 5.037.6
விடுத்த பெரியமலையை விண்ணுற நிமிர்க்கும் ஆனையார்; தொடுத்த பெரியமலை தூய்மையாக உடைய ஆனையார்; சினந்துவந்த காலனைக் காய்ந்த ஒப்பற்ற கடவூர்த்தலத்திறைவர் சினத்தலுற்ற ஆனைபோல்வர்; காண்பீர்களாக.
1443 மண்ணு ளாரை மயக்குறு மானையார்
எண்ணு ளார்பல ரேத்திடு மானையார்
விண்ணு ளார்பல ரும்மறி யானையார்
கண்ணு ளானைகண் டீர்கட வூரரே. 5.037.7
மண்ணுலகின் உள்ளாரை மயக்கம் உறுவிக்கும் ஆனையார்; எண்ணிக்கையிற் பெருகிய நல்லடியார் பலர் ஏத்தித்தொழும் ஆனையார்; விண்ணுலகின்கண் உள்ள தேவர்கள் பலரும் அறிகின்ற ஆனையார்; கடவூர்த்தலத்து இறைவர் காதலாகித் தொழும் அடியார் கண்ணுள் நின்று காட்சி வழங்கும் ஆனைபோல்வர்; காண்பீர்களாக.
1444 சினக்குஞ் செம்பவ ளத்திர ளானையார்
மனக்கும் வல்வினை தீர்த்திடு மானையார்
அனைக்கும் அன்புடை யார்மனத் தானையார்
கனைக்கு மானைகண் டீர்கட வூரரே. 5.037.8
சினக்கின்ற செம்பவளத் திரள்களை உடைய ஆனையார்; மனத்தின்கண் நிறைந்த வல்வினைகளைத் தீர்க்கும் ஆனையார்; அன்னைக்கும் மேலாகிய அன்புடையார் மனத்து உறையும் ஆனையார்; கடவூர்த்தலத்து இறைவர் ஒலித்து முழங்கி வரும் ஆனைபோல்வர்; காண்பீர்களாக.
1445 வேத மாகிய வெஞ்சுட ரானையார்
நீதி யானில னாகிய வானையார்
ஓதி யூழி தெரிந்துண ரானையார்
காத லானைகண் டீர்கட வூரரே. 5.037.9
வேதங்களாய் அதன் ஒளியாய் விளங்கும் ஆனைபோன்றவர். நீதிமுறை விளங்க நிலத்தின்கண் தோன்றியவர் என்க. வேதங்களை ஓதி பல ஊழிகளையும் கண்டறிந்தவர். அன்பர்க்கன்பர் கடவூர் இறைவர்; காண்பீர்களாக.
1446 நீண்ட மாலொடு நான்முகன் தானுமாய்க்
காண்டு மென்றுபுக் கார்க ளிருவரும்
மாண்ட வாரழ லாகிய வானையார்
காண்ட லானைகண் டீர்கட வூரரே. 5.037.10
நெடியோனாகிய திருமாலும், நான்முகனும் காண்போம் என்று ஆணவத்தாற் கருதிப் புகுந்தும் காண்டற்கரியவராய் மாட்சி உடைய பேரழலாக நிமிர்ந்த ஆனையார்; கடவூர்த் தலத்து இறைவர் காண்டற்குரிய ஆனைபோல்வர்; காண்பீர்களாக.
1447 அடுத்து வந்த இலங்கையர் மன்னனை
எடுத்த தோள்க ளிறநெரித் தானையார்
கடுத்த காலனைக் காய்ந்ததொ ரானையார்
கடுக்கை யானைகண் டீர்கட வூரரே. 5.037.11
எடுப்பேன் என்று அடுத்துவந்த இலங்கைவேந்தனை எடுக்கலுற்ற இருபது தோள்களும் இறும் வண்ணம் நெரித்த ஆனையார்; சினந்த காலனைக் காய்ந்த ஆனையார்; கடவூர்த் தலத்து இறைவர் கொன்றையணிந்த ஆனைபோல்வர்; காண்பீர்களாக.
திருச்சிற்றம்பலம்
5.037.திருக்கடவூர்வீரட்டம் திருக்குறுந்தொகை திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - பிரமபுரீசுவரர். தேவியார் - மலர்க்குழல்மின்னம்மை.
1437 மலைக்கொ ளானை மயக்கிய வல்வினை நிலைக்கொ ளானை நினைப்புறு நெஞ்சமே கொலைக்கை யானையுங் கொன்றிடு மாதலால் கலைக்கை யானைகண் டீர்கட வூரரே. 5.037.1
திருக்கடவூரில் மேவும் பெருமான், மலையில் வாழும் யானை போன்று மயக்கம் செய்த கொடிய வினைகளுக்கே நிலைக்களமாய் யானைபோன்று அடங்காது பலவற்றையும் நினைக்கின்ற நல்வினைகளாகிய யானைகளையும் ஏனைய மதயானையையும் அழிக்கும் இயல்பினர் கலையின் பயனாகிய ஒழுக்கத்தால் அடையத்தகும் யானை போன்றவர்.
1438 வெள்ளி மால்வரை போல்வதொ ரானையார் உள்ள வாறெனை யுள்புகு மானையார் கொள்ள மாகிய கோயிலு ளானையார் கள்ள வானைகண் டீர்கட வூரரே. 5.037.2
வெள்ளிமால்வரை போன்ற அயிராவணம் என்னும் ஒப்பற்ற ஆனையை உடையார்; உள்ளவாறே என் உள்ளத்தில் புகுகின்ற ஆனைபோல்வார்; கொள்ளும் இடமாகிய கோயிலுள் ஆனையாய் உள்ளவர்; ஆதலின் கடவூர்த்தலத்து இறைவர் கள்ளம் உடைய ஆனைபோல்வார்; காண்பீர்களாக.
1439 ஞான மாகிய நன்குண ரானையார் ஊனை வேவ வுருக்கிய வானையார் வேன லானை யுரித்துமை யஞ்சவே கான லானைகண் டீர்கட வூரரே. 5.037.3
ஞானமாகிய நன்குணரத்தக்க ஆனையார்; உடற்பொதியைமேவுமாறு உருக்கி உள்ளொளிபெருக்கும் ஆனையார்; ஆனையை உமாதேவியார் அஞ்சுமாறு உரித்த கடவூர்த் தலத்து இறைவர்; கானல் ஆனையும் போல்வர்; காண்பீர்களாக.
1440 ஆல முண்டழ காயதொ ரானையார் நீல மேனி நெடும்பளிங் கானையார் கோல மாய கொழுஞ்சுட ரானையார் கால வானைகண் டீர்கட வூரரே. 5.037.4
நஞ்சினை உண்டும் அழகுபெற்ற ஆனையார்; நீல மேனியை ஒருபாகத்தே உடைய நீண்ட பளிங்கனைய ஆனையார்; கொழுவிய சுடர்விடும் கோலம் உடைய ஆனையார்; கடவூர்த் தலத்திறைவர் கால ஆனை போல்வர்; காண்பீர்களாக.
1441 அளித்த ஆன் அஞ்சு மாடிய வானையார் வெளுத்த நீள்கொடி யேறுடை யானையார் எளித்த வேழத்தை எள்குவித் தானையார் களித்த வானைகண் டீர்கட வூரரே. 5.037.5
அன்பர்கள் பரிந்து கொடுக்கும் பஞ்ச கவ்வியங்களை ஆடிய ஆனையார்; வெண்மையான இடபக்கொடி உடைய ஆனையார்; இகழ்ந்து வந்த யானையினை எல்லோரும் எள்குமாறு உரித்த ஆனையார்; கடவூர்த்தலத்திறைவர் களிப்புற்ற யானை போல்வர்; காண்பீர்களாக.
1442 விடுத்த மால்வரை விண்ணுற வானையார் தொடுத்த மால்வரை தூயதொ ரானையார் கடுத்த காலனைக் காய்ந்ததொ ரானையார் கடுத்த வானைகண் டீர்கட வூரரே. 5.037.6
விடுத்த பெரியமலையை விண்ணுற நிமிர்க்கும் ஆனையார்; தொடுத்த பெரியமலை தூய்மையாக உடைய ஆனையார்; சினந்துவந்த காலனைக் காய்ந்த ஒப்பற்ற கடவூர்த்தலத்திறைவர் சினத்தலுற்ற ஆனைபோல்வர்; காண்பீர்களாக.
1443 மண்ணு ளாரை மயக்குறு மானையார் எண்ணு ளார்பல ரேத்திடு மானையார் விண்ணு ளார்பல ரும்மறி யானையார் கண்ணு ளானைகண் டீர்கட வூரரே. 5.037.7
மண்ணுலகின் உள்ளாரை மயக்கம் உறுவிக்கும் ஆனையார்; எண்ணிக்கையிற் பெருகிய நல்லடியார் பலர் ஏத்தித்தொழும் ஆனையார்; விண்ணுலகின்கண் உள்ள தேவர்கள் பலரும் அறிகின்ற ஆனையார்; கடவூர்த்தலத்து இறைவர் காதலாகித் தொழும் அடியார் கண்ணுள் நின்று காட்சி வழங்கும் ஆனைபோல்வர்; காண்பீர்களாக.
1444 சினக்குஞ் செம்பவ ளத்திர ளானையார் மனக்கும் வல்வினை தீர்த்திடு மானையார் அனைக்கும் அன்புடை யார்மனத் தானையார் கனைக்கு மானைகண் டீர்கட வூரரே. 5.037.8
சினக்கின்ற செம்பவளத் திரள்களை உடைய ஆனையார்; மனத்தின்கண் நிறைந்த வல்வினைகளைத் தீர்க்கும் ஆனையார்; அன்னைக்கும் மேலாகிய அன்புடையார் மனத்து உறையும் ஆனையார்; கடவூர்த்தலத்து இறைவர் ஒலித்து முழங்கி வரும் ஆனைபோல்வர்; காண்பீர்களாக.
1445 வேத மாகிய வெஞ்சுட ரானையார் நீதி யானில னாகிய வானையார் ஓதி யூழி தெரிந்துண ரானையார் காத லானைகண் டீர்கட வூரரே. 5.037.9
வேதங்களாய் அதன் ஒளியாய் விளங்கும் ஆனைபோன்றவர். நீதிமுறை விளங்க நிலத்தின்கண் தோன்றியவர் என்க. வேதங்களை ஓதி பல ஊழிகளையும் கண்டறிந்தவர். அன்பர்க்கன்பர் கடவூர் இறைவர்; காண்பீர்களாக.
1446 நீண்ட மாலொடு நான்முகன் தானுமாய்க் காண்டு மென்றுபுக் கார்க ளிருவரும் மாண்ட வாரழ லாகிய வானையார் காண்ட லானைகண் டீர்கட வூரரே. 5.037.10
நெடியோனாகிய திருமாலும், நான்முகனும் காண்போம் என்று ஆணவத்தாற் கருதிப் புகுந்தும் காண்டற்கரியவராய் மாட்சி உடைய பேரழலாக நிமிர்ந்த ஆனையார்; கடவூர்த் தலத்து இறைவர் காண்டற்குரிய ஆனைபோல்வர்; காண்பீர்களாக.
1447 அடுத்து வந்த இலங்கையர் மன்னனை எடுத்த தோள்க ளிறநெரித் தானையார் கடுத்த காலனைக் காய்ந்ததொ ரானையார் கடுக்கை யானைகண் டீர்கட வூரரே. 5.037.11
எடுப்பேன் என்று அடுத்துவந்த இலங்கைவேந்தனை எடுக்கலுற்ற இருபது தோள்களும் இறும் வண்ணம் நெரித்த ஆனையார்; சினந்த காலனைக் காய்ந்த ஆனையார்; கடவூர்த் தலத்து இறைவர் கொன்றையணிந்த ஆனைபோல்வர்; காண்பீர்களாக.
திருச்சிற்றம்பலம் |
||||||||
by C.Malarvizhi on 20 Jul 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|